India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குங்குமம் கொட்டினால், பெரிய அபசகுணம் என அலறுவார்கள். மேலும் வீட்டுப் பெண்களுக்கு தாலிக்கு ஆபத்து என்றும் நம்பப்படுகிறது. திருமணமான பெண்களின் அடையாளமாக குங்குமம் இருப்பதால், இவ்வாறான கருத்து நிலவுகிறது. குங்குமம் கொட்டுவதால், தீங்கு நடந்ததாக சிலர் சொன்னாலும், அதெல்லாம் Coincidence மட்டுமே. கைதவறினாலும், பசங்க விளையாடும் போது குங்கும சிமிழி கீழே விழுந்தாலும், மனம் சஞ்சலப்பட வேண்டாம்!
மதுரை தவெக மாநாட்டுக்கு சென்ற சென்னையை சேர்ந்த பிரபாகர் என்பவர் சக்கிமங்கலம் அருகே மாரடைப்பால் உயிரிழந்தார். ஏற்கெனவே மாநாட்டு அரங்கில் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநாட்டு அரங்கில் 40-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை, தவெக மாநாட்டு அரங்கில் அக்கட்சியின் சார்பில் 2-வது பாடல் வெளியிடப்பட்டது. அதில், மக்களின் மன்னனே.. பெரியாரின் பேரனே என்ற வரிகளும் இடம் பெற்றுள்ளன. 2026 தேர்தலில் தமிழகத்தின் வரலாற்றை மாற்றும் ‘எங்கள் அண்ணன்’ உங்கள் விஜய், உங்கள் விஜய் வரவா என பெரியார், விஜயகாந்த் உள்ளிட்டோரை ஹைலைட் செய்யும் வரிகள் இடம் பெற்றுள்ளன.
மதுரையில் தவெக மாநாட்டுக்குச் சென்ற தொண்டர்கள் வெயில் தாங்க முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுவரை சுமார் 50 பேர் மயக்கமடைந்துள்ளனர். இதில், உடல்நலக் கோளாறு ஏற்பட்ட 9 பேர் வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், ஒருவர் மதுரை அரசு ஹாஸ்பிடலிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொண்டர்கள் பாதுகாப்பாக இருக்க விஜய் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ட்ரோன் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர்களின் உடற்தகுதியை மேம்படுத்த பிசிசிஐ புதிய பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. அணி தேர்வுக்கு முன்பாக BRONCO சோதனையை வீரர்கள் மேற்கொள்ள வேண்டும். இதில் 1,200 மீ தூரத்தை ஐந்து செட்களாக 20மீ, 40மீ, 60மீ என தனித்தனியே ஓய்வின்றி 6 நிமிடங்களுக்குள் ஓட வேண்டும். இந்த BRONCO TEST ரக்பி விளையாட்டுடன் தொடர்புடையது. இதுவரை அணி தேர்வுக்கு YO-YO Test பின்பற்றப்படுகிறது.
‘வைகை கரை காற்றே நில்லு’ என்ற பாடல் இன்றும் பஸ்களில் ஒலித்துக் கொண்டிருக்க, நம்மை அறியாமலே நாம் தாளம் போட்டு நினைவுகளால் உருகுகிறோம். அந்த அளவு தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘உயிருள்ளவரை உஷா’ படம் 4K தொழில்நுட்பத்தில் செப்டம்பரில் ரீ ரிலீஸ் ஆகவுள்ளதாக அதன் இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரீ ரிலீஸ் வரிசையில் ரெட்ரோ வகை படமும் தற்போது இணைந்துள்ளது.
மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டில், உணவு விற்பனை படு ஜோராக நடந்துவருகிறது. குறிப்பாக தயிர், தக்காளி சாதம் ₹70- ₹80, வெஜ் பிரியாணி ₹100, கூழ் ₹50, தண்ணீர் பாட்டில் ₹40, கரும்பு ஜூஸ் ₹30, சாத்துக்குடி ஜூஸ் ₹50, ஐஸ்கிரீம் ₹70 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் என்ன கொடுமை என்றால், இலவசமாக கொடுப்பது போல மோரை கொடுத்து, ஒரு டம்ளர் ₹50 என சிலர் அடாவடியாக பணம் வசூல் செய்கின்றனராம்.
GST வரி விகிதங்களில் 12% மற்றும் 28% வரி விகிதங்களை நீக்க FM நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. செல்போன், நெய், குடை, ஜாம், ஜூஸ் உள்ளிட்ட வகைகளுக்கு தற்போது 12% வரியும், பிரிட்ஜ், AC, சிறிய வகை கார்கள் உள்ளிட்ட பொருள்கள் 28% வரியிலும் இருந்த நிலையில் அவற்றில் மாற்றம் செய்யப்படவுள்ளன. இதனால், விரைவில் நாடு முழுவதும் பல பொருள்களின் விலை குறையவுள்ளது.
அஜித் குமார் மரண வழக்கில், CBI ஒரே மாதத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 5 காவலர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 6-வது குற்றவாளியாக தனிப்படை வாகன டிரைவர் ராமச்சந்திரன் பெயரையும் சேர்த்திருப்பது குற்றப் பத்திரிகை மூலம் தெரியவந்துள்ளது. இதனிடையே, நிகிதாவின் நகைத் திருட்டு வழக்கு விசாரணையை CBI தொடங்க இருப்பதால், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
நம்முடைய போனே ரொம்ப Privacy-யானது என்றால், PM மோடி யூஸ் பண்ணும் போன் குறித்து யோசிங்க. Rudra எனப் பெயரிடப்பட்டுள்ள, RAX(Restricted Area Exchange) என்ற போனை அவர் உபயோகிக்கிறார். இந்த போன், ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அலைவரிசையில் செயல்படுகிறது. மேலும், எவராலும் ஹேக் பண்ண முடியாத அளவிற்கு சிப் ஒன்றும் போனில் பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அவரிடம் Rudra 2 என்ற இன்னொரு போனும் உள்ளது.
Sorry, no posts matched your criteria.