India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்ரம் வேதா, டிமாண்டி காலனி-2 உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் சாம் C.S. இவர் தமிழை தவிர்த்து மலையாளம், தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்துள்ளார். தற்போது பாலிவுட்டில் ஒரு படத்துக்கு அவர் இசையமைக்க உள்ளாராம். இத்தகவலை அவர் சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் இப்படத்தில் நடிக்கவுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்பது திருப்பூர் சம்பவம் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். கடையநல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அதிமுக ஆட்சியில் மத, சாதி சண்டைகள் இன்றி தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது என்றும், ரவுடிகள் வேறு மாநிலத்துக்கு தப்பி சென்றதாகவும் கூறினார். ஆனால் தற்போது காவல்துறை அதிகாரியே வெட்டிப்படுகொலை செய்யப்படுகிறார் என்று தெரிவித்தார்.
படுக்கை அறையில் நாம் வைக்கும் சில பொருள்கள் வாஸ்துப்படி தீமைகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அவை: *டீ, காபி கப், சாப்பிட்ட தட்டுகள் உள்ளிட்ட கழுவப்படாத பாத்திரங்கள் *தலையணைக்கு கீழே பேப்பர், புத்தகம், தங்க நகைகள் *படுக்கையில் எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகள், செல்லப்பிராணி. இவை தூக்கத்தை பாதிப்பதுடன், நெகடிவ் எனர்ஜியை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல படுக்கைக்கு நேராக கண்ணாடி இருக்கக் கூடாது.
Gpay, Phonepe போன்ற UPI சேவைகளுக்கு விரைவில் கட்டண அறிவிப்பு வெளியாகலாம். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, UPI சேவையை நீண்டகாலத்துக்கு இலவசமாக கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. யாராவது அந்த சுமையை ஏற்றுதான் ஆகவேண்டும் என்றார். ஏற்கெனவே <<17195322>>தான் கூறியதை<<>> அவர் மீண்டும் உறுதிப்படுத்தி இருப்பதால், விரைவில் கட்டண விதிப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் பிரேசில் பொருட்கள் மீது 50% வரி விதித்தார் டிரம்ப். இந்நிலையில் இதுதொடர்பாக விவாதிக்க பிரேசில் அதிபர் எப்போது வேண்டுமானாலும் தன்னை அழைக்கலாம் என டிரம்ப் தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பிரேசில் அதிபர் லுலா டா சில்வா, தான் டிரம்பை அழைத்து இதுபற்றி பேசபோவதில்லை என்றும், அதற்கு மாற்றாக PM மோடி, சீனா அதிபர் ஜி ஜின் பங்கை அழைத்து பேசுவேன் என தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏறுமுகத்தில் இருந்தது. அதன் தாக்கத்தால் இந்திய சந்தையில் <<17317784>>விலை ஜெட் வேகத்தில்<<>> உயர்ந்து வந்தது. இந்நிலையில், இன்று(ஆக.6) சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் தங்கம் 16 USD(₹1,403) குறைந்து 3,365 USD-க்கு விற்பனையாகிறது. இதனால், நாளை(ஆக.7) இந்திய சந்தையில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார அறிஞர்கள் கணித்துள்ளனர். எப்படியோ குறைந்தால் சரி..!
ஐதராபாத்தில் உள்ள ED அலுவலகத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று ஆஜரானார். ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக பதியப்பட்ட பணமோசடி வழக்கில் விஜய் தேவரகொண்டாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முன்னதாக இதே வழக்கில் கடந்த 30-ம் தேதி நடிகர் பிரகாஷ் ராஜிடம் ED விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பொருளாதாரத்தை <<17261037>>‘dead economy’<<>> என்ற டிரம்புக்கு, நமது ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவின் நடப்பாண்டு GDP வளர்ச்சி 6.5%-மாக இருக்கும் என்ற அவர், IMF கணித்துள்ள உலகப் பொருளாதார வளர்ச்சியான 3%-ஐ விட இது அதிகம் என்றார். மேலும், உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 18%, ஆனால் அமெரிக்கா வெறும் 11% மட்டுமே என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
வாழ்க்கையை தொடங்க முதலிரவுக்கு ஸ்வீட் வாங்க சென்ற மாப்பிள்ளை வீடு திரும்பியபோது காலையில் தாலி கட்டிய மனைவி தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சோகமான சம்பவம் ஆந்திராவின் சத்ய சாய் மாவட்டத்தில் நடந்துள்ளது. மணமேடையில் புன்னகையுடன் இருந்த ஹர்ஷிதா(22) இந்த முடிவு எடுத்ததற்கான காரணம் தெரியாமல் மாப்பிள்ளை நாகேந்திரன், ஹர்ஷிதாவின் குடும்பத்தினர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வாழ்க்கையை தொடங்க முதலிரவுக்கு ஸ்வீட் வாங்க சென்ற மாப்பிள்ளை வீடு திரும்பியபோது காலையில் தாலி கட்டிய மனைவி தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சோகமான சம்பவம் ஆந்திராவின் சத்ய சாய் மாவட்டத்தில் நடந்துள்ளது. மணமேடையில் புன்னகையுடன் இருந்த ஹர்ஷிதா(22) இந்த முடிவு எடுத்ததற்கான காரணம் தெரியாமல் மாப்பிள்ளை நாகேந்திரன், ஹர்ஷிதாவின் குடும்பத்தினர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.