News August 21, 2025

தீபாவளிக்கு 20% தள்ளுபடி.. அமைச்சர் அறிவிப்பு

image

தீபாவளி, சத் பண்டிகைகளையொட்டி நாடு முழுவதும் 12,000-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மேலும், பயணக் கட்டணத்தில் 20% தள்ளுபடி வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, அக். 13 முதல் 26-க்குள் புறப்பட்டு, நவ. 17 முதல் டிச.1-க்குள் திரும்பும் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் 20% தள்ளுபடி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

News August 21, 2025

Tech Talk: டெலிகிராம்ல Free-ஆ மொழிகள் கத்துக்கலாமா?

image

டெலிகிராம் மெசேஜ் அனுப்ப மட்டுமே பயன்படும் சாதாரண செயலி அல்ல. இதில் இருக்கும் Bots அன்றாடம் உங்களுக்கு தேவையான பல சேவைகளை வழங்குகிறது. 1.YSaver – இந்த Bot-ல் உங்களுக்கு தேவைப்படும் யூடியூப் Link-ஐ கொடுத்தால் அது அந்த வீடியோவை டவுன்லோடு செய்து கொடுக்கும். 2.AI IMAGE GENERATOR – இதில் AI புகைப்படங்களை இலவசமாக பெறலாம். 3.Learn Languages AI – இதில் பல மொழிகளை இலவசமாக கற்றுக்கொள்ளலாம். SHARE.

News August 21, 2025

எல்லையில் துண்டுச் சீட்டுடன் வந்த பாக். புறா

image

பாகிஸ்தானில் இருந்து பறந்த வந்த புறாவால் ஜம்முவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புறாவை எல்லை பாதுகாப்பு படையினர் பிடித்த போது அதன் காலில் துண்டுச் சீட்டு இருந்தது தெரியவந்தது. அதில் ஜம்மு தாவி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தீவிரவாதிகளின் உண்மையான மிரட்டலா ? அல்லது வெற்று மிரட்டலா ? என விசாரணை நடத்தப்படுகிறது.

News August 21, 2025

முதல் சிக்ஸ் பேக் அஜித் தான்.. A.R.முருகதாஸ்

image

‘மிரட்டல்’ படத்தின் கதையை கூறியபோதே சிக்ஸ் பேக் வைக்கட்டுமா என அஜித் கேட்டதாக A.R.முருகதாஸ் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அஜித் இவ்வாறு கூறிய பின்பே சூர்யா, ஆமிர் கான் ஆகியோர் சிக்ஸ் பேக் வைத்ததாகவும் கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். மேலும், இப்படத்தில் கமிட்டான பிறகு எடுக்கப்பட்ட 2 நாள் காட்சிகள் தற்போதும் தன்னிடம் உள்ளதாக கூறியுள்ளார். இப்படமே பின்னாளில் ‘கஜினி’யாக ரிலீஸானது.

News August 21, 2025

ரேஷன் கார்டுக்கு ₹5,000.. தமிழக அரசு தகவல்

image

பொங்கல் பரிசுத் தொகையாக ரேஷன் கார்டுக்கு தலா 5,000 வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு தீபாவளி பண்டிகை நாளில் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, ₹10,000 கோடி தேவை என்பதால், அதற்கான நிதி ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறு நிதித்துறைக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாம். தீபாவளிக்கு ஜிஎஸ்டி குறைப்பை அறிவிக்க இருப்பதாக பிரதமர் மோடி ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News August 21, 2025

விஜய் அறியாமையில் பேசுகிறார்: இபிஎஸ்

image

மதுரை மாநாட்டில் அதிமுகவை விமர்சித்த விஜய்க்கு, இபிஎஸ் பதிலளித்துள்ளார். பாசிச பாஜகவுடன் அடிமைக் கூட்டணி வைத்திருப்பதாக அதிமுகவை விஜய் மறைமுக சாடினார். இந்நிலையில், விஜய் அறியாமையில் பேசுவதாக இபிஎஸ் கவுன்ட்டர் கொடுத்துள்ளார். யாராலும் கட்சி தொடங்கியதும் ஆட்சிக்கு வந்துவிட முடியாது என்றும், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வந்த உடனேயே முதல்வராகவில்லை எனவும் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

News August 21, 2025

BEAUTY TIPS: இந்த தப்ப பண்ணிடாதீங்க

image

தோல் பராமரிப்பில் Moisturizer-ன் பங்கு முக்கியமானது. சருமத்தை பாதுகாக்கும் Moisturizer-ஐ பயன்படுத்துவதில், சிலர் சில தவறுகளை செய்துவிடுகிறார்கள். அவர்கள் கவனத்திற்கு: ▶லேசான ஈரப்பதத்தில் Moisturizer-ஐ தடவவும். உலர்ந்த முகத்தில் தடவவேண்டாம். ▶skin type-க்கு ஏற்ப Moisturizer-ஐ தேர்ந்தெடுப்பது அவசியம். ▶தூங்கும் முன் Moisturizer-ஐ பயன்படுத்தவும். ▶இதனை தினமும் பயன்படுத்த வேண்டும். SHARE.

News August 21, 2025

3 வீரர்களை கைவிடும் மும்பை இந்தியன்ஸ்?

image

IPL 2025 சீசன், MI அணியை சற்றே சோதித்தது எனலாம். Playoff வரை சென்றாலும், அதற்கான போராட்டம் கடுமையாக இருந்தது. இதற்கு அணியில் ஏற்பட்ட சில மாற்றங்களும் காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில், 2026 IPL ஏலத்தில் தீபக் சாஹர், ரீஸ் டோப்ளே, முஜீப் உர் ரஹ்மான் ஆகியோரை விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அவர்களின் குறைவான பங்களிப்பே காரணமாம். நீங்க என்ன நினைக்கிறீங்க?

News August 21, 2025

விஜய்யை விட இவருடைய தாக்கம் பெருசு: தமிழிசை

image

மதுரையில் தவெகவின் 2வது மாநாடு நடந்துக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள தமிழிசை விஜய்யின் மாநாட்டை விட நாளை அமித்ஷா பங்கேற்கவுள்ள நெல்லை பூத் கமிட்டி மாநாடு தமிழகத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளார். மேலும், அமித்ஷா வெற்றியை நிரூபித்து காண்பித்தவர் எனவும், விஜய் இன்னும் அரசியல் வெற்றியை நிரூபித்து காட்டவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News August 21, 2025

மாநாட்டு மேடையில் விஜய் சொன்ன Kutty Story..

image

ஒரு ராஜா தளபதியை தேர்ந்தெடுக்க 10 பேரிடம் விதைகளை கொடுத்தார். அதில் ராஜாவை ஏமாற்ற நினைத்த 9 பேர் வேறு விதையை மரமாக வளர்த்து கொண்டுவந்தனர். ஆனால் அந்த ராஜா விதையோடு வந்த ஒருவனை தான் தளபதியாக தேர்ந்தெடுத்தார். ஏனென்றால் அவர் கொடுத்த விதைகள் வேகவைக்கப்பட்டவை, அது வளராது என கூறி கதையை முடித்துக்கொண்ட விஜய், உண்மையான ஒருவரையே தலைவராக தேர்ந்தெடுக்கவேண்டும் என மக்களிடம் கோரிக்கை வைத்தார்.

error: Content is protected !!