India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரளாவில் இளம் MLA ஒருவர் மீது நடிகை ரினி ஆன் ஜார்ஜ் பாலியல் குற்றச்சாட்டு கூறி இருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சோஷியல் மீடியா மூலம் பழகிய அவர், சில நாள்களிலேயே ஆபாச போட்டோ, வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்ததாக நடிகை புகார் கூறியுள்ளார். மேலும், நெருக்கமாக இருக்கலாம் எனக்கூறி 5 ஸ்டார் ஹோட்டலுக்கு வர முடியுமா எனக் கேட்டு அந்த நபர் தொந்தரவு செய்ததாகவும் ரினி ஆன் ஜார்ஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உணவை வீணாக்குவதை தவிர்க்கும் வகையில், புனேயில் உள்ள ஒரு உணவகம் விதித்துள்ள கண்டிஷன் வரவேற்பை பெற்றுள்ளது. அதன் மெனுவை போட்டோ எடுத்து ஒருவர் பதிவிட, SM-லும் அது வைரலாகியுள்ளது. அந்த விலைப்பட்டியலின் இறுதியில் ‘உணவை வீணாக்கினால் ₹20 கட்டணம் விதிக்கப்படும்’ என எழுதப்பட்டுள்ளது. பலர் இதை பாராட்டினாலும், ‘வீணாக்கும் உணவுக்கும் சேர்த்து தானே காசு கொடுக்கிறோம்’ என்கின்றனர் சிலர். உங்க கருத்து?
*பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு கண்டனம். *நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். *மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம். *ஆணவக் கொலைகளை தடுக்க தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும். *சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதற்கு காரணமான திமுக அரசுக்கு கண்டனம். *TNPSC உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் மூலம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு காலக்கெடு விதித்தது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எல்லா விவகாரங்களிலும் கவர்னர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு என மத்திய அரசு வாதிட்டது. இதனையடுத்து, மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு காலக்கெடு இல்லையென்றால், வேறு ஏதாவது ஒரு நடைமுறை உருவாக்கப்பட வேண்டும் என SC தெரிவித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?
தமிழகத்தின் பல பகுதியில் காலையில் வெயில் சுட்டெரித்த நிலையில், இரவில் 24 மாவட்டங்களில் மழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, விருதுநகர், சேலம், க.குறிச்சி, தி.மலை, திருவள்ளூர், காஞ்சி, வேலூர், தருமபுரி, நாமக்கல், பெரம்பலூர், நீலகிரி, ஈரோடு, திருச்சி, கரூர், தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாம். அதனால், இரவில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்கவும்.
உங்கள் குழந்தை வயதுக்கேற்ற உயரத்துடன் வளரவில்லை என கவலையா? டாக்டர்கள் கூறும் இந்த பவுடரை வீட்டிலேயே அரைத்து கொடுத்து பாருங்கள். ▶முதலில், ஆளி விதை, பாதாம், வால்நட்ஸ், பூசணி விதை & தேங்காயை ஒரு பாத்திரத்தில் வறுக்கவும். ▶அதை நன்றாக அரைத்து, கோகோ பவுடர் சேர்த்து கலக்கவும். ▶இதை தூங்குவதற்கு முன், பாலில் கலந்து கொடுக்கவும். இதில் உள்ள ஊட்டச்சத்து குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். SHARE.
தவெக மாநாட்டில் உரையாற்றிய போது பல இடங்களில் எம்.ஜி.ஆர் பற்றி பேசிய விஜய், ’நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ என்ற ‘எங்க வீட்டுப் பிள்ளை’ பட பாடலையும் பாடினார். பாசிச பாஜகவும், பாய்சன் திமுகவும் வைத்திருக்கும் மறைமுக உறவை ஒழிக்க மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுக்கவேண்டும் எனக் கூறிய அவர், நீட் ரத்து, மீனவர்கள் கைது தொடர்பாக பிரதமர் மோடிக்கு பல கோரிக்கைகளை வைத்தார்.
நடப்பாண்டு 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு அக்.10-ல் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. இதில், தேர்வாகும் 1,500 மாணவர்களுக்கு மாதம் ₹1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in இணையதளத்தில் நாளை(ஆக.22) முதல் செப். 4-ம் தேதி வரை டவுன்லோடு செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை ₹50 கட்டணத்துடன் HM-களிடம் ஒப்படைக்க வேண்டும். SHARE IT.
மத்திய அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால், EPF-லிருந்து வழங்கப்படும் கருணைத் தொகை ₹15 லட்சமாக உயர்த்தப்படும் (ஏப்ரல் 1, 2025 முதல்) என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இது ₹8.8 லட்சமாக இருந்தது. இத்தொகை இறந்தவரின் சட்டரீதியான குடும்பத்தினர் / வாரிசுகளிடம் வழங்கப்படும். மேலும், இத்தொகை ஏப்ரல் 1, 2026 முதல் ஆண்டுக்கு 5% என்ற அளவில் உயர்த்தப்படும் எனவும் EPFO அறிவித்துள்ளது.
பதிவுத் தபால் சேவை செப்.1 முதல் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் தனது தபால் அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் Ex.வான்படை அதிகாரி ஒருவர். 1972-ல் புனேவின் தேசிய டிபென்ஸ் அகாடமியில் இருந்து, தன்னுடைய பெற்றோருக்கு கடிதம் அனுப்ப ’கேடட்ஸ் மெஸ்’ எனும் தபால் பெட்டியை பயன்படுத்தியிருக்கிறார். இதனை நினைவுகூர்ந்த அவர் அப்பெட்டி கடிதங்களின் சின்னமாக இன்றும் நிலைத்து நிற்கிறது எனக் கூறி நெகிழ்ந்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.