India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரள நடிகைகள் பாலியல் புகார் அளித்த நிலையில், பாலக்காடு MLA ராகுல் மாங்கூட்டத்தில் பதவியை ராஜினாமா செய்ய கட்சி தலைமை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று, அவர் மாநில இளைஞர் காங்., தலைவர் பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில், இன்று திருநங்கை ஒருவரும், MLA மீது பாலியல் புகார் அளித்துள்ளார். 2026-ல் தேர்தல் வரவுள்ள நிலையில், இவ்விவகாரம் காங்கிரஸுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
செப்.30-க்குள் KYC அப்டேட் செய்யப்படாத ஜன்தன் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என செய்திகள் வெளியாகின. ஆனால் இது தவறான தகவல் என்று PIB Fact Check தெரிவித்துள்ளது. KYC அப்டேட் செய்வது அடிப்படையான ஒன்று என்றாலும், அப்டேட் செய்யாவிட்டாலும் வங்கிக் கணக்கு முடக்கப்படாது என்றும் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, ஜூலை 31-ம் தேதி படி, 13.04 கோடி <<14845578>>ஜன்தன்<<>> வங்கிக் கணக்குகள் செயலற்று இருப்பதாக மத்திய அரசு கூறியது.
✪விஜய்யின் <<17481585>>தராதரம் <<>>அவ்வளவுதான்.. அமைச்சர் KN நேரு!
✪அவதார <<17480186>>புருஷனா <<>>விஜய்?.. RB உதயகுமார் சாடல்
✪தெருநாய் விவகாரம்: <<17481254>>சுப்ரீம்<<>> கோர்ட் புதிய உத்தரவு
✪தங்கத்தின் விலை <<17480599>>சவரனுக்கு<<>> ₹120 குறைந்தது.
✪உக்ரைன் போரை <<17479866>> இந்தியாதான் <<>>நிரந்தரமாக்குகிறது.. USA ✪ஸ்பின் <<17479924>>பவுலர் <<>>கௌஹர் சுல்தானா ஓய்வை அறிவித்தார்
மதுரை தவெக மாநாட்டிற்கு சென்ற அக்கட்சியை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். சென்னையை சேர்ந்த பிரபாகரன்(33) மாநாட்டுக்கு செல்லும் வழியில் சக்கிமங்கலத்தில் உயிரிழந்தார். அதேபோல், மாநாடு முடிந்து நீலகிரி திரும்பி கொண்டிருந்த ரித்திக் ரோஷன்(18) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதே காரில் பயணம் செய்த ரவி(18) வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில், மதுரை GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
‘பீடியை பற்ற வைக்கவா பாலிவுட்டில் இருந்து வந்தீர்கள்?’ என்ற கேள்வியை ‘கூலி’ படம் பார்த்த பலரும் ஆமிர் கானிடம் கேட்டு வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து பேசிய ஆமிர் கான், கூலி படத்தில் ரஜினிக்கு பீடி பற்ற வைப்பதே தனது வேலை, இதில் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றார். மேலும், தான் ரஜினியின் தீவிர ரசிகர் என்ற அவர், அவருடன் இணைந்து நடிப்பது பெருமை என்றும் விளக்கமளித்துள்ளார்.
ஒரு நிறுவனத்தின் இயக்குநரே (Director) ‘Specified Employee’ என அழைக்கப்படுகிறார். இவர் கம்பெனியில் கணிசமான பங்குகளை வைத்திருக்க வேண்டும். தான் பணியாற்றும் நிறுவனத்தில் 20% வாக்குரிமையைக் கொண்டிருக்க வேண்டும். இவரது வருமானம் முன்னதாக ₹50,000-க்கு கீழ் இருக்கக்கூடாது என்ற வரைமுறை இருந்தது. இது தற்போது ₹2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவருக்கான <<17479799>>வருமான வரி<<>> சலுகைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
40 ஆண்டுகளாக அரசியலில் உள்ள தலைவரை அங்கிள் என்ற விஜய்யின் தராதரம் அவ்வளவுதான் என அமைச்சர் KN நேரு கருத்து தெரிவித்துள்ளார். திருச்சியில், செய்தியாளர்களை சந்தித்த அவர், 50 பேர் கூடிவிட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என நினைப்பவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார். CM ஸ்டாலின் குறித்த விஜய்யின் கருத்துக்கு திமுக, சிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை கூவத்தூரில் நாளை நடைபெற உள்ள அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு, தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விசிக செய்யூர் MLA பனையூர் பாபு சென்னை ஐகோர்ட்டில் அளித்துள்ள மனுவில், கலெக்டரிடம் உரிய அனுமதி பெறாமல் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை இன்று மதியம் சென்னை ஐகோர்ட் நடைபெறவுள்ளது.
கேள்விகள்:
1. சென்னை என்ற பெயர் யாரின் பெயரில் இருந்து வந்தது?
2. கதக் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
3. மனித உடலில் வியர்க்காத உறுப்பு?
4. வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் வாயுவின் சதவீதம் என்ன?
5. முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்ற இடம் எது?
சரியான பதில்களை கமெண்ட் பண்ணுங்க. பதில்கள் மதியம் 2 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.
<<17480599>>தங்கம் விலை இன்று(ஆக.22)<<>> சரிந்த போதிலும், வெள்ளி விலை விண்ணை தொட்டுள்ளது. சில்லறை விற்பனையில் கிராமுக்கு ₹2 உயர்ந்து ₹128-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ₹2,000 உயர்ந்து ₹1,28,000-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தை போலவே வெள்ளி நகைகளையும் இனி வங்கிகளில் அடகு வைக்கலாம் என RBI பரிந்துரை அளித்துள்ள நிலையில், வெள்ளி விலை மற்றும் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.