India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவின் ஆளில்லா ட்ரோன் ஒன்றை பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை சுட்டு வீழ்த்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை பாகிஸ்தான் ஊடகங்கள் உறுதிபடுத்தியுள்ளன. அந்த ட்ரோன் எல்லைக்கோட்டை தாண்டியதாகவும், ஆகையால் சுடப்பட்டதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆனால், இதுகுறித்து இந்தியா எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எல்லையில் போர் பதற்றம் நிலவும் சூழலில் இந்த சம்பவம் முக்கியத்துவம் பெறுகிறது.
தவெக கொடியில் யானையை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டுமென பகுஜன் சமாஜ் கட்சி(BSP) தொடர்ந்த வழக்கில் விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. BSP சின்னமாக யானை உள்ளதால் தவெக தனது கொடியில் யானைகளை பயன்படுத்தக் கூடாது என BSP வழக்குத் தொடர்ந்தது. இது தொடர்பாக பதில் அளிக்குமாறு விஜய், புஸ்ஸி ஆனந்த் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவெக கொடிக்கு சிக்கல் வருமா, வராதா?
நடிகர் ரோஹித் பாஸ்போர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அசாமைச் சேர்ந்த இவர், ஞாயிறு மதியம் நண்பர்களுடன் அருகிலுள்ள காட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு, அவர் விபத்தில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்ப உறுப்பினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். விரைவில் வெளிவர இருக்கும் ‘Family man 3′-ல் ரோஹித் சமந்தாவுடன் நடித்துள்ளார்.
டெல்லியில் உள்ள PM மோடி இல்லத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் உள்பட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படுகின்றன. நாளை PM தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனியார் கல்லூரிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதியம் வழங்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கில் 8 வாரங்களில் ஊதியம் வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், ₹50 லட்சம் அபராதத்துடன் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், இந்த அபராதத் தொகையில் ₹25 லட்சத்தை கல்லூரி கல்வி இயக்குநரிடம் வசூலிக்கவும் உத்தரவிட்டனர்.
பாக். பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப்பின் X தளப் பக்கத்தை இந்திய அரசு முடக்கியுள்ளது. பஹல்காம் தாக்குதலை அடுத்து, எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. இதனிடையே, இந்திய ராணுவம் விரைவில் ஊடுருவும், நாங்களும் தயாராக உள்ளோம் என குவாஜா பேசியிருந்தார். ஏற்கனவே, இந்திய ராணுவத்துக்கு எதிராக வகுப்புவாதம் உள்பட தவறான தகவல்களைப் பரப்பியதாக 16 யூடியூப் சேனல்களை இந்தியா தடை செய்துள்ளது.
தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான ODI-ல், இந்திய மகளிர் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. IND-SL-SA இடையிலான முத்தரப்பு ODI தொடர் இலங்கையில் நடந்துவருகிறது. முதல் ஆட்டத்தில் SL-ஐ வீழ்த்திய IND, இன்று நடந்த 2-வது ஆட்டத்தில் 50 ஓவர்களில் 276/6 ரன்கள் குவித்தது. பிரதிகா ராவல் 78 ரன்கள் குவித்தார். 277 ரன் இலக்கை விரட்டிய SA, 261 ரன்களில் ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது.
சுட்டெரிக்கும் கோடை வெயிலில் உங்களது உடல்நலனை காக்க இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க. *நாள்தோறும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் அருந்துதல். *உச்சி வெயிலில் (காலை 11 – மாலை 3) வரை தேவையின்றி வெளியே செல்லாமல் இருங்கள். *உடல் வெப்பநிலையைத் தணிக்க இருமுறை குளியுங்கள்.* பருத்தி ஆடைகளை அணியுங்கள்.* எண்ணெய், கொழுப்பு உணவுகளைத் தவிருங்கள். *செயற்கை குளிர்பானங்கள், மதுபானங்களைத் தவிர்க்க வேண்டும். SHARE IT.
3 ஆண்டுகளில் IPL லாபத்திற்கு 40% வரி விதிக்கப்பட்டிருந்தால் ₹15,000 கோடி கிடைத்திருக்கும், இதன் மூலம் 10 ஐஐடிக்கள் (அ) தேசிய உள்ளார்ந்த தொழில்நுட்ப நிதியை உருவாக்கியிருக்கலாம் என IISc பெங்களூரு பேராசிரியர் மயங்க் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார். IPL டீம் உரிமையாளர்கள் கூடுதலாக ₹480 கோடி வரை ஈட்டியிருந்தால், ஒவ்வொரு ஆண்டும் ₹6,000 கோடியை ஆராய்ச்சி பணிகளுக்கு அளித்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
பல்கேரியாவை சேர்ந்த தீர்க்கதரிசி பாபா வாங்கா. இவரது கணிப்புகள் 85% துல்லியமாக பலித்துள்ளன. பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா-பாக். இடையே பதற்றம் நிலவும் நிலையில், 2025-ல் பாக். பேரழிவை சந்திக்கும் என பாபா வாங்கா கணித்துள்ளார். இதனால் நிச்சயம் இந்தியா-பாக். போர் மூளும் என நெட்டிசன்கள் கூறுகின்றனர். இதெல்லாம் சும்மா என இன்னொரு தரப்பினர் மறுக்கின்றனர். நீங்க என்ன நினைக்கிறீங்க?
Sorry, no posts matched your criteria.