India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரபல தொழிலதிபரும், சமூக சேவகருமான லார்ட் ஸ்வராஜ் பால் (94), உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இவர் தனது தொண்டு நிறுவனங்கள் மூலம் எண்ணற்ற குழந்தைகள், இளைஞர்களுக்கு கல்வி, மருத்துவ சேவைகளை வழங்கி வந்தார். Caparo Group of industries-ன் நிறுவனரான இவரின் மறைவுக்கு PM மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்தியா உடனான உறவில் அவரது ஆதரவையும் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
இளவரசரை தேர்வு செய்ய நெல்மணியை கொடுத்து பயிராக்க சொன்னாராம் மன்னர். அதை பெற்றுச் சென்றவர்களில் ஒருவரைத் தவிர அனைவரும் முளைத்த கதிரோடு வந்தனர். ஆனால் கொடுத்த விதையை அப்படியே கொண்டு வந்தவரே இளவரசரானார். ஏனென்றால் அவர் கொடுத்தது அவித்த விதை. இந்த கதையையே தவெக மாநாட்டில் விஜய் சொன்னார். இது ஏற்கெனவே 2021-ல் சீமான் கூறியிருக்கிறார். எனவே சீமானை விஜய் காப்பியடித்துள்ளதாக நாதகவினர் கூறி வருகின்றனர்.
கோயிலில் தேங்காய் உடைக்கும் போது, பூ வந்தால் நல்லது என்றும், கொப்பரையாக இருந்தால் குழந்தை பேறு உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், தேங்காய் அழுகி இருந்தால், அபசகுணம் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் உண்மையில், உங்கள் குடும்பத்தை பிடித்திருந்த துர்சக்திகள், பீடைகள், கண் திருஷ்டிகள் நீங்கியதற்கான அறிகுறி என்ற ஆன்மிக விளக்கங்களும் உள்ளன. ஆகவே, மனம் சஞ்சலம் அடைய வேண்டாம். SHARE IT.
முகேஷ் அம்பானியின் தாயாரும், மறைந்த திருபாய் அம்பானியின் மனைவியுமான கோகிலாபென் அம்பானி(91), உடல்நலக் குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், ஹெலிகாப்டர் மூலம் தெற்கு மும்பையிலுள்ள HN ரிலையன்ஸ் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனினும், இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
நாளை சென்னை கூவத்தூரில் நடைபெறும், அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு <<17481538>>தடை கோரி<<>>, செய்யூர் MLA பனையூர் பாபு வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு தடையில்லை என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், நிகழ்ச்சியின் போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
கிராம மகள் திட்டத்தின் கீழ் மத்திய அரசு சார்பில் நாட்டில் உள்ள கிராமப்புற பெண்களுக்கு மாதம் ₹5,000 வழங்கப்பட உள்ளதாக செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து மத்திய தகவல் சரிபார்ப்பகம்(PIB Fack Check) விளக்கம் அளித்துள்ளது. அதில், ஒரு குறிப்பிட்ட யூடியூப் சேனல் மூலம் பரப்பப்பட்ட இந்த தகவல் பொய்யானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 8799711259 வாட்ஸ்அப் எண், factcheck@pib.gov.in மெயில் மூலம் உண்மையை அறியலாம்.
சென்செஷன் ஹீரோ பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கும் LIK படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் ‘Dude’ படமும் தீபாவளிக்கு (அக்.20-ம் தேதி) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாள்கள் இடைவெளியில் 2 படங்கள் வெளிவருவது கலெக்ஷனை குறைக்கும் என சினிமா டிராக்கர்கள் தெரிவிக்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
கூட்டமாக கூடுவோரை வாக்குகளாக மாற்ற தவெகவுக்கு சித்தாந்தம் வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மற்றவர்களின் பலவீனம் குறித்து பேசிய விஜய் தனது பலம் குறித்து ஏதும் பேசவில்லை என சாடியுள்ளார். பழங்கதைகளை கூறாமல் 21-ம் நூற்றாண்டின் அரசியலுக்கு விஜய் வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் பேச்சு குறித்து உங்கள் கருத்து என்ன?
தெருநாய்களை பிடித்தாலும் அவற்றுக்கு கருத்தடை & புழுநீக்கம் செய்து, தடுப்பூசி செலுத்திவிட்டு, அவற்றை பிடித்த இடத்திலேயே மீண்டும் விட்டுவிட வேண்டும் என SC <<17481254>>தீர்ப்பளித்துள்ளது<<>>. அதேநேரம், ரேபிஸ் தொற்று பாதித்த நாய்களையும், வெறிப்பிடித்த நாய்களையும் தெருவில் விடவும் தடை விதித்துள்ளது. தெருநாய்கள் தொடர்பாக அனைத்து மாநிலங்களையும் ஆலோசித்து தேசியக் கொள்கை உருவாக்கவும் மத்திய அரசை SC வலியுறுத்தியுள்ளது.
ஆபிசில் இருக்கும் போது, சாப்பிட்ட பிறகு, பயங்கரமாக தூக்கம் வரும். இதனால், வேலையும் கேட்டுவிடும். அப்படி, தூக்கம் வராமல் இருக்க..
*மதியம் எளிதில் ஜீரணிக்ககூடிய உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
*நிறைய தண்ணீர் குடியுங்கள்.
*சிறிது தூரம் நடப்பது, உடலை சுறுசுறுப்பாக்கி, மந்த நிலையை விரட்டும்.
*கண்டிப்பாக காஃபினை தவிர்க்கவும்.
*தூக்கம் வந்தால், சுவாசப்பயிற்சி செய்யவும்.
Sorry, no posts matched your criteria.