India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பரில் தொடங்குகிறது. இதில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த போட்டிகள் நவி மும்பையின் DY படில் ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இதன்படி 3 லீக், அரையிறுதி & இறுதிப் போட்டிகள் இங்கு நடைபெறுகின்றன. முன்னதாக, RCB வெற்றிப் பேரணியின்போது 11 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து கர்நாடக பேரவையில் கூட்ட கட்டுப்பாடு மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கிய (ஜூலை 15) முதல் வாரத்தில் விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்து ஆகஸ்ட் 28-ம் தேதி விவரங்கள் வெளியாகும் என அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புதிதாக திட்டத்தில் இணைபவர்களுக்கு பணம் வரவு வைப்பது தொடர்பான அறிவிப்பை செப். 15-ல் அரசு வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.
பூமில இருந்து உணவ விண்வெளிக்கு எடுத்துட்டு போய் அங்க சாப்பிட்டா அந்த உணவோட ஒரிஜினல் சுவையும் வாசனையும் வித்தியாசமா இருக்குன்னு ஆய்வுல தெரியவந்துருக்கு. விண்வெளியில gravity கம்மியா இருக்குறதுனால, மனித உடல்ல இருக்க திரவங்கள் தலையை நோக்கி நகருமாம். இதனால, உடல்ல இருக்க சுவை, வாசனை உணர்வுகள் பாதிக்கப்படுதாம். இதனால உணவோட சுவை மற்றும் வாசனை விண்வெளியில வேற மாதிரி இருக்குறதா ஆய்வுகள் சொல்லுது.
அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஆட்சி விவகாரம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. கூட்டணி ஆட்சிதான் என அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்பது EPS-ன் கருத்து. இந்த மோதல்போக்கு சில காலம் தணிந்திருந்த சூழலில், நெல்லையில் பேசிய அமித்ஷா மீண்டும் குண்டை தூக்கி போட்டுள்ளார். கூட்டணி ஆட்சிதான் அமையும் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ODI-யில், அறிமுகமான முதல் 4 போட்டிகளிலும் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை, தென்னாப்பிரிக்க வீரர் மேத்யூ பிரீட்ஸ்கி படைத்துள்ளார். முதல் போட்டியிலேயே சதம் அடித்த (150 vs NZ) அவர், அதன்பின் 83 vs பாக்., 57 vs ஆஸி., 88 vs ஆஸி (நேற்று) என 3 அரை சதங்கள் அடித்துள்ளார். இதற்கு முன், இந்தியாவின் நவ்ஜோத் சிங் சித்து அறிமுகமானவுடன் தொடர்ந்து 4 அரை சதங்கள் (ஆனால் 5 போட்டிகள்) அடித்திருந்தார்.
PM மோடி சோழர்களுக்கு பெருமை சேர்த்திருப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். நெல்லையில் நடைபெற்று வரும் அக்கட்சியின் மாநாட்டில் பேசிய அவர், கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரனுக்கு விழா எடுத்தவர் மோடி என்றும், காசி சங்கம விழா தமிழுக்கு பெருமை சேர்க்கிறது எனவும் குறிப்பிட்டார். மேலும், மோடி தமிழ் மண்ணையும் மக்களையும் எப்போதும் மதிப்பவர் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
திமுக Ex பிரபலம் KS ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணைந்துள்ளார். நெல்லையில் நடைபெற்று வரும் பாஜக மாநாட்டில் அமித்ஷா முன்னிலையில் அவர் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். கட்சித் துண்டை போர்த்தி அவரை பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். நெல்லையை சேர்ந்த KS ராதாகிருஷ்ணன், Ex முதல்வர்கள் காமராஜர், கருணாநிதி ஆகியோருடன் நல்ல நட்பில் இருந்தவர். 2022-ல் கார்கேவை விமர்சித்ததற்காக திமுகவிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
இரவு ரயில் பயணங்களில் பலருக்கும் நெருடலை உண்டாக்குவது லைட் வெளிச்சம் தான். ஒருவருக்காக லைட்டுகள் எரிய விடப்பட்டிருக்கும். சங்கோச்சத்தின் காரணமாக, கேட்க முடியாமல் அமைதியாக இருப்போம். ஆனால், IRCTC விதியின் படி, இரவு 10 மணிக்கு மேல் பொது விளக்குகளை அணைக்கப்பட வேண்டும். தனிநபர் படிக்கவோ அல்லது எழுதவோ எண்ணினால், மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல், ரீடிங் லைட்களைப் பயன்படுத்தலாம். SHARE IT.
‘பீனிக்ஸ்’ பட ரிலீஸின்போது சூர்யா சேதுபதியின் சில செயல்பாடுகளால் ட்ரோல் செய்யப்பட்டார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய அவர், எல்லா இடங்களிலும் உள்ள எதிர்மறையான விஷயங்களை எப்படி கையாள்வது என்பதை கற்றுக்கொள்வதே முக்கியம் என கூறியுள்ளார். தன் படத்தில் தவறுகள் இருந்தால், அதனை அடுத்த முறை திருத்திக்கொள்வேன் என்ற அவர், இப்படி செய்துவிட்டேனே என்று துன்பப்படுவதில் நம்பிக்கை இல்லை என்றார்.
அடுத்தடுத்து நியூஸ் படிச்சி டயர்ட்டாகி இருக்கும் உங்களின் மூளையை வாங்க கொஞ்சம் சுறுசுறுப்பாக்குவோம். மேலே உள்ள படத்தில் இருக்கும் கேள்வியை கவனியுங்க. இது பார்க்க பயங்கர கஷ்டமான கேள்வியாக தோன்றலாம். ஆனால், மூளையை கசக்கி பிழிந்தால், ரொம்ப ஈசிதான். எத்தனை பேர் கரெக்ட்டா பதில் சொல்றீங்கனு பார்ப்போம். ஒரே ஒரு குட்டி Hint: 3 லைன் உள்ளது.
Sorry, no posts matched your criteria.