News August 22, 2025

சோழர்களுக்கு பெருமை சேர்ந்தவர் மோடி

image

PM மோடி சோழர்களுக்கு பெருமை சேர்த்திருப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். நெல்லையில் நடைபெற்று வரும் அக்கட்சியின் மாநாட்டில் பேசிய அவர், கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரனுக்கு விழா எடுத்தவர் மோடி என்றும், காசி சங்கம விழா தமிழுக்கு பெருமை சேர்க்கிறது எனவும் குறிப்பிட்டார். மேலும், மோடி தமிழ் மண்ணையும் மக்களையும் எப்போதும் மதிப்பவர் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

News August 22, 2025

சற்றுமுன்: பாஜகவில் இணைந்தார் திமுக Ex பிரபலம்

image

திமுக Ex பிரபலம் KS ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணைந்துள்ளார். நெல்லையில் நடைபெற்று வரும் பாஜக மாநாட்டில் அமித்ஷா முன்னிலையில் அவர் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். கட்சித் துண்டை போர்த்தி அவரை பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். நெல்லையை சேர்ந்த KS ராதாகிருஷ்ணன், Ex முதல்வர்கள் காமராஜர், கருணாநிதி ஆகியோருடன் நல்ல நட்பில் இருந்தவர். 2022-ல் கார்கேவை விமர்சித்ததற்காக திமுகவிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

News August 22, 2025

சட்டம் அறிவோம்: இரவில் ரயிலில் பயணிக்கும் போது..

image

இரவு ரயில் பயணங்களில் பலருக்கும் நெருடலை உண்டாக்குவது லைட் வெளிச்சம் தான். ஒருவருக்காக லைட்டுகள் எரிய விடப்பட்டிருக்கும். சங்கோச்சத்தின் காரணமாக, கேட்க முடியாமல் அமைதியாக இருப்போம். ஆனால், IRCTC விதியின் படி, இரவு 10 மணிக்கு மேல் பொது விளக்குகளை அணைக்கப்பட வேண்டும். தனிநபர் படிக்கவோ அல்லது எழுதவோ எண்ணினால், மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல், ரீடிங் லைட்களைப் பயன்படுத்தலாம். SHARE IT.

News August 22, 2025

ட்ரோல்களுக்கு பதில் சொன்ன சூர்யா சேதுபதி

image

‘பீனிக்ஸ்’ பட ரிலீஸின்போது சூர்யா சேதுபதியின் சில செயல்பாடுகளால் ட்ரோல் செய்யப்பட்டார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய அவர், எல்லா இடங்களிலும் உள்ள எதிர்மறையான விஷயங்களை எப்படி கையாள்வது என்பதை கற்றுக்கொள்வதே முக்கியம் என கூறியுள்ளார். தன் படத்தில் தவறுகள் இருந்தால், அதனை அடுத்த முறை திருத்திக்கொள்வேன் என்ற அவர், இப்படி செய்துவிட்டேனே என்று துன்பப்படுவதில் நம்பிக்கை இல்லை என்றார்.

News August 22, 2025

இதுக்கு சரியா பதில் சொல்லுங்க பார்ப்போம்!

image

அடுத்தடுத்து நியூஸ் படிச்சி டயர்ட்டாகி இருக்கும் உங்களின் மூளையை வாங்க கொஞ்சம் சுறுசுறுப்பாக்குவோம். மேலே உள்ள படத்தில் இருக்கும் கேள்வியை கவனியுங்க. இது பார்க்க பயங்கர கஷ்டமான கேள்வியாக தோன்றலாம். ஆனால், மூளையை கசக்கி பிழிந்தால், ரொம்ப ஈசிதான். எத்தனை பேர் கரெக்ட்டா பதில் சொல்றீங்கனு பார்ப்போம். ஒரே ஒரு குட்டி Hint: 3 லைன் உள்ளது.

News August 22, 2025

ஸ்வராஜ் பால் காலமானார்.. PM மோடி இரங்கல்

image

பிரபல தொழிலதிபரும், சமூக சேவகருமான லார்ட் ஸ்வராஜ் பால் (94), உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இவர் தனது தொண்டு நிறுவனங்கள் மூலம் எண்ணற்ற குழந்தைகள், இளைஞர்களுக்கு கல்வி, மருத்துவ சேவைகளை வழங்கி வந்தார். Caparo Group of industries-ன் நிறுவனரான இவரின் மறைவுக்கு PM மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்தியா உடனான உறவில் அவரது ஆதரவையும் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.

News August 22, 2025

சீமானை காப்பியடித்தாரா விஜய்?

image

இளவரசரை தேர்வு செய்ய நெல்மணியை கொடுத்து பயிராக்க சொன்னாராம் மன்னர். அதை பெற்றுச் சென்றவர்களில் ஒருவரைத் தவிர அனைவரும் முளைத்த கதிரோடு வந்தனர். ஆனால் கொடுத்த விதையை அப்படியே கொண்டு வந்தவரே இளவரசரானார். ஏனென்றால் அவர் கொடுத்தது அவித்த விதை. இந்த கதையையே தவெக மாநாட்டில் விஜய் சொன்னார். இது ஏற்கெனவே 2021-ல் சீமான் கூறியிருக்கிறார். எனவே சீமானை விஜய் காப்பியடித்துள்ளதாக நாதகவினர் கூறி வருகின்றனர்.

News August 22, 2025

கோயிலில் உடைக்கும் தேங்காய் அழுகினால் அபசகுணமா..?

image

கோயிலில் தேங்காய் உடைக்கும் போது, பூ வந்தால் நல்லது என்றும், கொப்பரையாக இருந்தால் குழந்தை பேறு உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், தேங்காய் அழுகி இருந்தால், அபசகுணம் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் உண்மையில், உங்கள் குடும்பத்தை பிடித்திருந்த துர்சக்திகள், பீடைகள், கண் திருஷ்டிகள் நீங்கியதற்கான அறிகுறி என்ற ஆன்மிக விளக்கங்களும் உள்ளன. ஆகவே, மனம் சஞ்சலம் அடைய வேண்டாம். SHARE IT.

News August 22, 2025

முகேஷ் அம்பானியின் தாயார் ஹாஸ்பிடலில் அனுமதி

image

முகேஷ் அம்பானியின் தாயாரும், மறைந்த திருபாய் அம்பானியின் மனைவியுமான கோகிலாபென் அம்பானி(91), உடல்நலக் குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், ஹெலிகாப்டர் மூலம் தெற்கு மும்பையிலுள்ள HN ரிலையன்ஸ் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனினும், இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

News August 22, 2025

அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை: ஐகோர்ட்

image

நாளை சென்னை கூவத்தூரில் நடைபெறும், அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு <<17481538>>தடை கோரி<<>>, செய்யூர் MLA பனையூர் பாபு வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு தடையில்லை என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், நிகழ்ச்சியின் போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!