India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சங்கீதாவின் தந்தை சோர்ணலிங்கம், இங்கிலாந்தில் பிரபல தொழிலதிபராக உள்ளார். தந்தையின் தொழிலால் ஆடம்பரமான பொருளாதார சூழலில் சங்கீதா வளர்ந்திருக்கிறார். ZEE NEWS தகவல்படி, அவரது சொத்து மதிப்பு ₹400+ கோடி என தகவல் வெளியாகியுள்ளது. கணவன் விஜய் சினிமாவில் கொடிகட்டி பறந்தபோதும், சங்கீதா சினிமா வெளிச்சத்தில் இருந்து விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் 2-வது சீசன் வின்னரும் பிரபல நடிகையுமான ரித்விகாவின் திருமணம் கடைசி நேரத்தில் தள்ளி போயுள்ளது. இவருக்கும் வினோத் லட்சுமணன் என்பவருக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆக. 27-ல் திருமணம் நடைபெற இருந்த நிலையில், குடும்ப சூழல் காரணமாக ரித்விகா தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கபாலி, மெட்ராஸ், ஒருநாள் கூத்து உள்ளிட்ட பல படங்களில் ரித்விகா நடித்துள்ளார்.
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான இழப்பீடு தொகையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விபத்து மரணத்திற்கான இழப்பீட்டை ₹1 லட்சத்தில் இருந்து ₹2 லட்சமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. விபத்தில் உடல் உறுப்பை இழந்தால் இனி ₹1 லட்சம்(முன்பு ₹20 ஆயிரம்) வழங்கப்படும். அதேபோல், இனி இயற்கை மரணத்திற்கு ₹30 ஆயிரமும், இறுதிச் சடங்கு செய்ய ₹10 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
ஒருகாலத்தில் இந்தியர்களை பைத்தியமாக்கியது, டிக் டாக் செயலி. பாதுகாப்பு காரணங்களுக்காக 5 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு இதை தடைசெய்தது. இந்நிலையில் இந்தியாவில் மீண்டும் டிக் டாக் வரலாம் என தகவல் உலா வருகிறது. டிக் டாக் வெப்சைட் இந்தியாவில் இன்னும் ஆக்டிவாக இருப்பதாகவும், பலரால் அதை ஆக்சஸ் செய்ய முடிவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், டிக் டாக் செயலி அவைலபிளாக இல்லை. நீங்க டிக் டாக்கை வரவேற்பீர்களா?
இரவில் பரோட்டா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். பரோட்டா சாப்பிட்டால் ஜீரணமாக அதிகநேரம் பிடிக்கும். மேலும், இதற்காக அதிக தண்ணீரையும் வயிறு எடுத்துக்கொள்ளும். இதனால் உடலின் செயல்பாடுகள் முற்றிலும் பாதிக்கப்படும். தவிர, இதன் சத்தை பிரித்தெடுக்கவும் குடலுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுமாம். இதனால் உடல் சோர்வடைந்து தூக்கம் பாதிக்குமாம். SHARE IT!
உங்களின் ரோல் மாடல்களை இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள் என்று மாணவர்களுக்கு CM ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். சென்னை குட் ஷெப்பர்ட் பள்ளி நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய அவர், SM-களில் ரீல்ஸ் பார்ப்பதெல்லாம் ரியாலிட்டி அல்ல. லைக்ஸ்கள் பெறுவதில் அல்ல, படித்து மார்க், டிகிரி பெறுவதுதான் கெத்து என்றார். பொழுதுபோக்கு வாழ்க்கையின் ஒரு அம்சம் தானே தவிர, அதுவே வாழ்க்கையல்ல என்றும் அவர் அறிவுறுத்தினார்.
குழந்தைகள் சாப்பிட மறுப்பதால் Modern பெற்றோர் அவர்கள் கையில் ஃபோனை கொடுத்து உணவை ஊட்டுவதை வழக்கமாக்கிவிட்டனர். ஆனால் அப்படி செய்வதால் குழந்தைகளுக்கு பல பிரச்னைகள் ஏற்படுகிறதாம். ஃபோன் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால் செரிமானப் பிரச்னைகளில் இருந்து தொடங்கி ஊட்டச்சத்து குறைபாடு, கவனச்சிதறல், குடும்பத்துடன் பிணைப்பு இல்லாமல் போவது போன்ற பிரச்னைகள் அதிகரிக்குமாம். உஷார் பெற்றோர்களே!
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா பார்லிமென்டில் நிறைவேறியுள்ள நிலையில், லக்னோவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளான். ‘எனது விளையாட்டால் நீங்கள்(பெற்றோர்) கவலை அடைந்துள்ளீர்கள். எனது மரணத்திற்கு யாரையும் குறை கூறவில்லை. நீங்கள் ஒருவரையொருவர் கவனித்து கொள்ளுங்கள் என உருக்கமான கடிதம் எழுதிவிட்டு விபரீத முடிவை எடுத்துள்ளான். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
<<16434322>>இ-பாஸ்போர்ட்<<>> சேவை நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. இதற்கு முதலில் இ-பாஸ்போர்ட் இணையதளத்தில் அப்பாயின்மென்ட் பெற்று, பின் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு நேரில் சென்று வெரிபிகேஷனை முடிக்க வேண்டும். இது வழக்கமான பாஸ்போர்ட்டின் அப்கிரேட் வெர்ஷன் தான். ஆனால், அதற்கு மாற்று கிடையாது. பயோமெட்ரிக் தகவல்கள் கொண்ட சிப் பொருத்தப்பட்டுள்ளதால் இது பாஸ்போர்ட்டுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.
பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா- சுனிதா தம்பதியர் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமண பந்தத்தில் 37 ஆண்டுகள் இணைந்திருந்த நிலையில், இளம்நடிகை ஒருவருடன் கோவிந்தா நெருங்கிப் பழகுவதாக தகவல் வெளியானதிலிருந்து கருத்து வேறுபாடு தோன்றியுள்ளது. இந்நிலையில், சுனிதா விவாகரத்து கேட்டு கோர்ட்டை நாடியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. திரைத்துறையில் விவாகரத்து அதிகரிக்க என்ன காரணம்?
Sorry, no posts matched your criteria.