India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முறையற்ற உறவால் கணவன்கள் கொல்லப்படும் கொடூர சம்பவங்கள் தொடர்கதையாக நீண்டு கொண்டே இருக்கின்றன. உ.பி.யில் மனைவி ஷீபா, ஃபர்மான் என்பவருடன் நெருங்கிப் பழகியதை கணவன் இம்ரான் கண்டித்துள்ளார். இதனால், காதலனுடன் சேர்த்து கணவனை தீர்த்துக் கட்டிய ஷீபா, கழுத்தை அறுத்து தலையில்லாத உடலை சாக்கடையில் வீசியுள்ளார். போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கிய அவர், தற்போது காதலனுடன் கம்பி எண்ணுகிறார்.
காதல் எப்போது வரும் என்பது தெரியாது என்பதற்கு இந்த செய்தியும் ஒரு சாட்சி. பிள்ளைகள் கைவிடப்பட்டு முதியோர் இல்லத்தில் தவித்த விஜயராகவன் (79) & சுலோச்சனா (75) ஆகியோருக்கு இடையே காதல் பூ பூத்துள்ளது. திருமணம் செய்து கொள்ள விரும்ப, அவர்களது திருமணம் இனிதே நடந்தேறியுள்ளது. கேரளாவின் ராமவர்மபுரத்தில் முதியோர் இல்லத்திலேயே நடந்த இந்த காதல் திருமணம் சொல்வது ஒன்றை தான்.. காதலிக்க எதுவும் தடையில்லை!
சூப்பர் பக் மூன் பார்க்க எல்லாரும் ரெடியா? இன்று இந்தியாவில் தெரிகிறதாம். இந்த முழு நிலவின் அழகை நாட்டின் எந்த மூலையிலிருந்தும் இன்று (ஜூலை 10) இரவு 7.42 மணிக்கு கண்டு ரசிக்கலாம். இந்த நிகழ்வு ஏன் இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது தெரியுமா? ஆண் மான்களின் கொம்புகள் இந்த ஜூலை மாத முழு நிலவு நாளிலே வளரத் தொடங்கும் என்பதால் இவ்வாறு கூறப்படுகிறதாம். நீங்கள் தயாரா?
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதிமுகவை தயார்படுத்தும் வகையில், நிர்வாகிகளை பதவிகளில் இருந்து அடுத்தடுத்து இபிஎஸ் நீக்கி வருகிறார். அந்த வரிசையில் தற்போது அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராக இருந்த எஸ்.எம்.மாரிமுத்துவை அவரது பொறுப்பில் இருந்து இபிஎஸ் விடுவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதேபோல் மேலும் சில நிர்வாகிகளை இபிஎஸ் விரைவில் நீக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பும்ரா களம் காண்கிறார். 2-வது டெஸ்ட் அவருக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில் இன்றைய போட்டியில் பிரசித்துக்கு பதில் களம் இறங்குகிறார். இங்கிலாந்து தரப்பில் டங்கிற்கு பதில் சோஃப்ரா ஆர்ச்சர் அணியில் இணைந்துள்ளார். இதனால் இரு அணிகளின் பந்து வீச்சு பலமும் அதிகரித்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது குறிப்பிடத்தக்கது. யார் கை ஓங்கும்?
பிஹாரில் தற்போது ECI நடத்தும் <<17017994>>SIR செயல்முறையை <<>>எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, SIR செயல்முறையில் தவறில்லை. அதை செய்யும் காலம் தான் தவறு என்ற நீதிபதி, நவம்பரில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்போது இதை செய்ய வேண்டிய அவசியம் என்ன? தேர்தல் இல்லாத நேரங்களில் இந்த பணியை ECI செய்திருக்கலாமே, பாதிக்கப்பட்டவர் தீர்வு பெற கால அவகாசம் இல்லையே எனக் கேள்வி எழுப்பினார்.
நெல்லை, கூட்டப்புளி கிராம மீனவர்கள் சிலர் தங்களின் படகுகளில் தவெக பெயரை குறிப்பிட்டிருந்ததால் மானியம் வழங்க முடியாது எனக் கூறுவது எதேச்சதிகாரப் போக்கு என்று விஜய் விமர்சித்துள்ளார். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உரிய மானியம் என்பது வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஸ்டாலின் தலைமையிலான கபட நாடக திமுக அரசுக்கு கண்டனம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. முதல் டெஸ்டில் தோல்வியடைந்தாலும் 2-வது டெஸ்டில் அபார வெற்றி பெற்றது இந்தியா. இதனால் 3-வது டெஸ்ட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த போட்டியில் பும்ரா அணியில் இல்லை என்றாலும் அந்த இடத்தை ஆகாஷ் சிறப்பாக நிரப்பினார். இந்தியாவின் பேட்டிங், பௌலிங் அபாரமாக உள்ளதால் இங்கிலாந்துக்கு இந்த ஆட்டம் சவாலாகவே இருக்கும்.
அருணாசலப் பிரதேச மாநிலத்தில் முன்னாள் எம்எல்ஏவை யானை மிதித்து கொன்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திராப் மாவட்டம் நாம்சங்க் கிராமத்தில் முன்னாள் எம்எல்ஏ காப்சென் ராஜ்குமார் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த காட்டு யானை அவரை துரத்தியது. பின்னர் கீழே தள்ளி ராஜ்குமாரை சரமாரியாக மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பலியானார்.
பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரக்கொண்டா உள்ளிட்ட 29 நட்சத்திரங்கள் மீது ED வழக்கு பதிவு செய்துள்ளது. தெலங்கானாவை சேர்ந்த பனீந்தர் சர்மா என்பவர், பிரபலங்கள் பெட்டிங் ஆப்களை ஊக்குவித்து சட்டவிரோத கமிஷனாகப் பெரும் தொகையாகப் பெற்றதாக கொடுத்த புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. கேமிங் சட்ட பிரிவுகள் 3, 3(A),4 & BNS 318(4), 112 போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.