India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கனடா பொதுத் தேர்தலில் மார்க் கார்னி வெற்றி பெற்றதற்கு, அவருடைய தீவிர ட்ரம்ப் எதிர்ப்பே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. ட்ரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு, கனடாவை USA-வின் மாகாணம் என்றும் அன்றைய PM ட்ரூடோவை கவர்னர் என்றும் அழைத்தார். ட்ரம்ப்பின் இந்த பெரியண்ணன் மனப்பான்மையை பெரும்பாலான கனடியர்கள் விரும்பவில்லை என்பது தேர்தல் முடிவில் வெளிப்பட்டுள்ளது. தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வாரா ட்ரம்ப்?
சமீபமாக, பூஜா ஹெக்டேவின் சேலை கலெக்சன் எனச் சொல்லும் அளவிற்கு அவரது போட்டோஷூட் இருக்கிறது. அந்த வகையில், தனது பாட்டியின் 70 வருட பழமையான காஞ்சிபுரம் சேலையை அணிந்தவாறு, அதன் மணத்தால் அந்த காலத்துக்கே சென்றதாக பூஜா பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். பூஜாவின் நடிப்பில் ரெட்ரோ படம் மே 1-ல் வெளியாகவுள்ள நிலையில், விஜய்யின் ஜனநாயகன் படத்திலும் நடித்து வருகிறார்.
பத்ம விருதுக்கு ஜனாதிபதி முர்மு, PM மோடி மற்றும் ரசிகர்களுக்கு அஜித் நன்றி தெரிவித்தார். மேலும், எனக்கு அடைமொழிகளில் எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை. நான் என்னை அஜித் அல்லது ஏகே என குறிப்பிட விரும்புகிறேன் எனக் கூறிய அவர், நடிப்பு, கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என பல்வேறு விஷயங்களை நான் செய்வதற்கு என் நண்பர்கள் தான் காரணம் எனவும் தெரிவித்தார்.
தேவையான பதிலடி, அதற்கான தகுந்த நேரம் உள்ளிட்டவைகளுக்கு ராணுவத்திற்கு முழுச் சுதந்திரம் உள்ளதாக PM மோடி கூறியுள்ளார். மோடியின் இல்லத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர், முப்படை தலைமை தளபதி, தலைமை ஆலோசகர் ஆகியோருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதனைக் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும், இந்தியர்களின் ரத்தம் கொதிப்படைந்துள்ளதாகவும் PM தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி & கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD அறிவித்துள்ளது. மேலும், வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி (14), வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து அசத்தியிருக்கிறார். அதேநேரம், அதிக வயது கொண்ட வீரரான தோனியும் (43) CSK அணியில் தனது ஆற்றலை நிரூபித்து வருகிறார். இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் 29 ஆண்டுகால வயது வித்தியாசம் ரசிகர்களால் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. வேறு எந்த விளையாட்டிலும் இப்படி ஒரு வயது வித்தியாசத்தை பார்க்க முடியாது.
டெல்லியில் நடைபெறவிருக்கும் இன்றைய IPL போட்டியில், DC – KKR அணிகள் மோதவுள்ளன. இதற்கான டாஸில் வெற்றி பெற்று, முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளார் DC கேப்டன் அக்சர் படேல். தற்போதைய நிலவரப்படி, புள்ளிப்பட்டியலில் DC 4-வது இடத்திலும், KKR 7-வது இடத்திலும் உள்ளன. இப்போட்டியில் வெற்றி பெற்றால் DC அணி முதலிடத்தை பிடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. யார் வெல்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா அதிரடியான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியது. இதனையடுத்து தூக்கத்தை தொலைத்த பாகிஸ்தான் இந்தியா தாக்குதல் நடத்திவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளதாக தெரிகிறது. எல்லையில் பாதுகாப்பை அதிகரித்து பாகிஸ்தான் இப்போது ரேடார் கருவிகளை எல்லையையொட்டி நகர்த்தி வருகிறது. இந்தியா, ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என பாக் முன்னெச்சரிக்கை நவடிக்கை எடுத்து வருகிறது.
வேலூர், ஈரோடு, சேலம், திருச்சி, கரூர் உள்ளிட்ட இடங்களில் வெயில் இன்று சதம் அடித்துள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நாளையும் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. எனவே, காலை 11 மணி – பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து பணி செய்பவர்களை அலுவலகத்திற்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்த தொடங்கியிருக்கிறது கூகுள் நிறுவனம். கொரோனா நேரத்தில் தற்காப்புக்காக ஊழியர்களுக்கு Work From Home அளித்தன IT நிறுவனங்கள். ஆனால், கொரோனா ஓய்ந்த பின்னரும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர மறுப்பதால், Hybrid Model கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதன்படி, பணியாளர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது அலுவலகத்திற்கு வர வேண்டும்.
Sorry, no posts matched your criteria.