India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் ஆயுதப் போராட்டம் நடத்தி வருகிறது. ஆனால் லஷ்கர், ஜெய்ஸ் இ முகமது போன்ற பாக். தீவிரவாத அமைப்புகள், காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றன. இந்நிலையில், ஹமாஸ், பாக். தீவிரவாதிகள் இடையே நெருக்கம் அதிகரித்துள்ளதாக இந்திய உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. ஹமாஸ் போராட்டமும், காஷ்மீர் தீவிரவாதமும் ஒன்று என சித்திரிக்கும் வேலை நடப்பதாகவும் கூறியுள்ளன.
பாக். ராணுவ முகாமுக்கு அருகில் உள்ள ஜெய்ஸ் இ முகமது தலைமையகத்துக்கு ஹமாஸ் குழு வந்ததாகவும், காஷ்மீர் தீவிரவாதத்திற்கு ஆதரவாக பயங்கரவாத அமைப்புகள் நடத்திய நிகழ்ச்சியில் ஹமாஸ் குழு கலந்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானுக்கு அக்குழுவினர் வருவது அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புதிதாக எழும் இந்த சவாலை கவனிக்குமா இந்தியா?
‘I kill you’ என இ-மெயில் வாயிலாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், பாஜக முன்னாள் எம்பியுமான கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் இந்த கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக டெல்லி போலீஸில் கம்பீர் புகாரளித்துள்ளார். முன்னதாக, ‘இதற்கு பொறுப்பானவர்கள் விலை கொடுப்பார்கள். இந்தியா தாக்கும்’ என பஹல்காம் தாக்குதலுக்கு கம்பீர் கண்டனம் தெரிவித்திருந்தார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.24) சவரனுக்கு ₹80 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,005-க்கும், சவரன் ₹72,040-க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹2,200 குறைந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவைக் கண்டுள்ளது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹111-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,11,000-க்கும் விற்பனையாகிறது.
இப்போது, பலருக்கும் இருக்கும் முக்கிய பிரச்னையே எந்த ஒரு விஷயத்திலும் Focus பண்ண முடியாமல் தொடர்ந்து தடுமாறுவது தான். ஆனால், 2 வாரம் இண்டெர்நெட் பயன்படுத்தாமல் இருந்தால், உங்கள் மூளை 10 ஆண்டுக்கு முன்பு எப்படி செயல்பட்டதோ அதே புத்துணர்ச்சியுடன் செயல்படும் என ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். Texas யூனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். ட்ரை பண்ணி பாருங்க!
IPL தொடரில் SRH மோசமான ரெக்கார்டை படைத்துள்ளது. IPL-ல் அந்த அணி மொத்தமாக இதுவரை 100 தோல்விகளை சந்தித்துள்ளது. இந்த நிலைக்கு தள்ளப்பட்ட 7-வது டீம் SRH. இந்த பட்டியலில், டெல்லி & பஞ்சாப் தலா 137 முறையும், RCB (132), KKR (125), மும்பை (121), ராஜஸ்தான் (113) மற்றும் CSK (105) முறையும் தோல்வி அடைந்துள்ளன.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சுந்தர்.சி – வடிவேலு காம்போவில் வெளிவந்துள்ள ‘கேங்கர்ஸ்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக வடிவேலு காமெடியில் மிரட்டி இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர். இந்த சம்மருக்கு இந்த படம் தான் பெஸ்ட் என்றும், Second Half-ல் சுந்தர்.சி-யின் Trademark காமெடி பிளாஸ்ட் என்றும் பதிவிடுகின்றனர். நீங்க படம் பாத்தாச்சா.. எப்படி இருக்கு?
கொச்சியை சேர்ந்த ஆல்பி ஜார்ஜ் உள்ளிட்ட 11 பேர் ஸ்ரீநகர் சென்றிருந்தனர். பின்னர் அங்கிருந்து செவ்வாய்க்கிழமை பஹல்காம் செல்கையில், சாலையோர கடையில் பிரைட் ரைஸ் சாப்பிட்டனர். அதில் உப்பு அதிகம் இருந்ததால், புதிய உணவு தயாரிக்க 1 மணி நேரம் காத்திருந்தனர். அந்த நேரத்தில்தான் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். கடையில் நேரம் தாமதப்படாமல் பஹல்காம் சென்றிருந்தால், அவர்களும் உயிரிழந்திருப்பர்.
பணத்தை மிச்சம் செய்ய 18 கேரட் நகைகளை வாங்க நுகர்வோர் ஆர்வம் காட்டி வருவதாக MJDTA தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார். 22 கேரட் நகைகளுடன் ஒப்பிடுகையில் 18 கேரட் நகைகள் சவரனுக்கு ₹14,000 வரை குறைவாகக் கிடைக்கின்றன. இதில், சேதாரம் குறைவு, பளபளப்பு, உறுதித்தன்மை அதிகம். ஆனாலும், இந்த நகைகளில் 75% மட்டுமே தங்கம், மீதி அலாய்(உலோக கலவை) என்பதால் மறுவிற்பனை மதிப்பு குறையும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பஹல்காமில் மற்றொரு சோகக்கதையும் நிகழ்ந்துள்ளது. UAE-ல் வசிக்கும் ராஜஸ்தானை சேர்ந்த நீரஜ் உத்வானியும் (33) இந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இவருக்கு 2 ஆண்டுகள் முன்னர் தான் திருமணம் நடந்துள்ளது. மனைவியுடன் இந்தியா வந்தவர், காஷ்மீரில் கொல்லப்பட்டுள்ளார். இவரின் தந்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட, தற்போது நீரஜ்ஜின் தாயார் மற்றும் மனைவி மீளா துக்கத்தில் மூழ்கியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.