India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரலட்சுமி என்ற தூய்மை பணியாளர், இன்று காலை வேலைக்கு செல்லும்போது மழை நீரில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததால், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவருக்கு 12 வயதில் பெண் குழந்தையும், 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள். வீட்டின் ஒரே சம்பாதிக்கும் நபர் இவர்தான். தற்போது அம்மாவை பறிகொடுத்த 2 குழந்தைகளும் யாரும் இல்லாமல் தவிக்கின்றனர்.
பாஜக, ECI-யை வைத்து வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதற்கு எதிராக ராகுல் காந்தி பிஹாரில் நடைபயணத்தையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இந்த பயணத்தில் CM ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக.27-ல் இந்த பயணத்தில் கலந்துகொண்டுவிட்டு, அங்கிருந்தவாறே அவர் வெளிநாடு செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காது, கழுத்துல நகை போட்டு இருந்தால் மகளிர் உரிமைத்தொகை கிடையாது என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியது நேற்று முதல் விவாதப்பொருளாக மாறியுள்ளது. உண்மையில் அமைச்சர் சொல்வதுபோல் அப்படி எதுவும் கிடையாது. 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் (அ) 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் குடும்பங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கும்.
கார் ஓட்டும்போது கைப்பேசியில் பேச ஆரம்பித்தால் கார் ஓட்டுவது விபரீதத்தில் முடியும் அல்லவா. அது போலதான் நமது வாழ்வும். சின்ன சின்ன விஷயங்களின் காரணமாக கவனம் சிதறினால், செய்ய நினைக்கும் வேலையில் முழு கவனம் கிடைக்காது. இந்த கவனச்சிதறலில் இருந்து தப்பிக்க, சிம்பிள் டிரிகஸ் ஒன்னு இருக்கு! வேண்டியதற்கு கவனம் செலுத்தினாலே போதும்.. வேண்டாதது அதுவாக தானாகவே விலகிவிடும்.
ராகுல் பிரதமராகவும், உதயநிதி முதல்வராகவும் ஆக முடியாது என அமித்ஷா நேற்று தெரிவித்திருந்தார். இதுபற்றி அறிக்கை வெளியிட்ட ஆ.ராசா, ஜெய்ஷா எவ்வாறு BCCI செயலாளரானார் என கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் வாக்களித்தால் யார் வேண்டுமென்றாலும் CM ஆகலாம் என்றும், இதே விமர்சனங்கள் கடந்த காலங்களில் ஸ்டாலினுக்கும் வந்ததாகவும், தற்போது உதயநிதியைப் பார்த்து அமித்ஷாவுக்கு பயம் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
AI கருவிகளின் புழக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், OpenAI-யின் புதிய அலுவலகத்தை இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் திறக்கவுள்ளதாக, அதன் CEO சாம் ஆல்ட்மேன் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் ChatGPT பயனர்கள் 4 மடங்கு அதிகரித்துள்ளதாக தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், விரைவில் இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நீங்க AI யூஸ் பண்றீங்களா?
மழைக்காலத்தில் ஏற்படும் இருமல், சளி, காய்ச்சல், மூச்சிரைப்பு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் தூதுவளை தேநீரைப் பருகலாம் என ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கைப்பிடி தூதுவளை இலை, சுக்கு, திப்பிலி, மிளகு, மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைக்கவும். பின் வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான தூதுவளை தேநீர் ரெடி. இதை எப்போது வேண்டுமென்றாலும் பருகலாம்.
மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் மூச்சு திணறியும், பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கியும், விபத்தில் சிக்கியும் 3 தவெக தொண்டர்கள் உயிரிழந்தனர். ஆனால், அக்கட்சியின் தலைவர் விஜய், ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதது பெரும் சர்ச்சையாகியுள்ளது. விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டின்போதும் உயிரிழந்த முக்கிய நிர்வாகிகளுக்கு கூட அவர் அஞ்சலி செலுத்தவில்லை. இது அப்போதே சர்ச்சையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் தமிழ் இயக்கிவரும் ‘மார்ஷல்’ படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். கல்யாணி ப்ரியதர்ஷன், சத்யராஜ் உள்ளிட்டோரும் இதில் நடித்து வருகின்றனர். முன்னதாக நிவின் பாலி வில்லனாக நடிக்கவிருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அது நடக்காமல் போக, தற்போது நடிகர் ஆதி, வில்லனாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இதன் அடுத்தகட்ட ஷூட்டிங் ராமேஸ்வரத்தில் தொடங்கவுள்ளது. கார்த்தி – ஆதி காம்போ எப்படி இருக்கும்?
ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் கேம்களை தடை செய்யும் வகையில் ‘ஆன்லைன் கேமிங் மசோதா 2025’-யை நாடாளுமன்றத்தின் இருசபைகளிலும் அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றியது. இதன்பின் ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பபட்ட நிலையில், ஜனாதிபதி திரெளபதி முர்மு நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன்மூலம் இந்த மசோதா சட்டமாக மாறியுள்ளது. இச்சட்டத்தை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.