India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2026 தேர்தலில் திமுகவுக்கு போட்டியே கிடையாது; எதிரில் யார் இருந்தாலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று கே.என்.நேரு தெரிவித்துள்ளார். ஒருகாலத்தில் எம்ஜிஆருக்கு மகளிர் ஆதரவு இருந்தது. ஆனால், அவரை விட தற்போது மு.க.ஸ்டாலினுக்கு மகளிர் ஆதரவு பெருகி வருகிறது எனக் கூறிய அவர், CM-ஐ யார் எந்த பெயரை வைத்து அழைத்தாலும் மீண்டும் அவர்தான் தமிழகத்தின் முதல்வர் என்று விஜய்க்கு நாசுக்காக பதிலடி கொடுத்தார்.
20 ஆண்டுகளுக்கு மேல் (2005-க்கு முன் வாங்கிய) பழமையான வாகனங்களுக்கான புதுப்பித்தல் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இலகு ரக வாகனங்களுக்கான புதுப்பித்தல் கட்டணம் ₹5,000-லிருந்து ₹10,000ஆகவும், இருசக்கர வாகனங்களுக்கான பதிவு சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணம் ₹2,000ஆகவும், 3 சக்கர வாகனங்களுக்கான பதிவுச் சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணம் ₹5,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
‘பரதா’ பட ரிலீஸில் பிஸியாக உள்ளார் அனுபமா பரமேஸ்வரன். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக தர்ஷனா ராஜேந்திரன் நடிப்பாரா என்பதில் தனக்கு சந்தேகம் இருந்ததாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் தனக்கு மிகவும் பிடித்தவர் என்பதால், அவரை எப்படியாவது இப்படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்பதற்காக சூனியம், பூஜை செய்ததாக கூறியுள்ளார்.
நாடு முழுவதும் மஹாராஷ்டிரா வங்கியில் காலியாகவுள்ள 500 General Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு (அ) CA. வயது வரம்பு: 22 – 35. தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல். விண்ணப்பக் கட்டணம்: ₹1,180 (தளர்வுகளும் உண்டு). விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.30. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
வரும் தேர்தலில் தவெக போட்டியிடவுள்ள சின்னம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக, வரப்போகும் தேர்தலில் தவெக ஆட்டோ சின்னத்தில் போட்டியிட முடிவு செய்திருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அச்சின்னம் குஜராத்தை சேர்ந்த Bharatiya Tribal Party-க்கு ஒதுக்கப்பட்டதால் தவெகவால் அதனை பெறமுடியாது. எனவே, தற்போது தேர்தல் ஆணையத்திடம் தவெக ’விசில்’ சின்னம் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக வெறுப்பு என்பதே தவெக மாநாட்டில் அவர்கள் உமிழ்ந்த அரசியல் என திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2 மாநாடுகள் முடிந்தபின்பும் கட்சியின் கொள்கை கோட்பாடுகள் என்னவென்பது அவர்களுக்கே புரியவில்லை என்றார். மேலும் லட்சம் பேரை திரட்டி வெறும் சவடால்களை மட்டுமே விஜய் முன்வைத்திருப்பதாகவும், அவரது பேச்சில் கருத்தும் இல்லை, கருத்தியலும் இல்லை என்றும் சாடினார்.
➤எளிதாக தோட்டத்தில் வளர்ந்தாலும், சளி, சைனஸ் அவ்வளவு ஏன் கிட்னி கல்லுக்கும் சிறந்த மருந்தாக கற்பூரவல்லி உதவும்.
➤கற்பூரவள்ளி இலையின் சாற்றுடன், தேன் கலந்து குடித்தால், சளி & இருமல் விலகும்.
➤கற்பூரவல்லி இலைகளை நசுக்கி சொறி, அரிப்பு ஏற்படும் இடங்களில் பூசினால், தோல் நோய் விலகும்.
➤கற்பூரவல்லி இலையின் சாற்றை குடித்தால், அஜீரணக் கோளாறு விலகும். SHARE IT.
திமுக, அதிமுக, நாதக, பாஜகவை கடுமையாக அட்டாக் செய்ய விஜய் தொடங்கிவிட்டார். இந்நிலையில், எம்ஜிஆர் வளர்த்த அதிமுக யாரிடம் இருக்கிறது என்பதை விஜய்யே தேடி பார்த்து சொல்லட்டும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவை விஜய் விமர்சனம் செய்வது அவர்களுக்குள் இருக்கும் புரிதல்தான்; ப்ரோவாக இருந்தாலும், அங்கிளாக இருந்தாலும் அவர் குறித்த கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என்றார்.
கடந்த சில தினங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துகொண்டே வந்த நிலையில், இன்று ஒரே அடியாக ₹800 அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ₹800 உயர்ந்து ₹74,520-க்கும், கிராமுக்கு ₹100 உயர்ந்து ₹9,315-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை குறையும் என எதிர்பார்த்த நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கெனவே அண்ணாமலையை ஓரங்கட்டுவதாக TN பாஜக வட்டாரங்கள் கூறிவரும் நிலையில், நயினாரின் தேநீர் விருந்துக்காக சென்ற அண்ணாமலை தனியாக நின்று கொண்டிருந்தாராம். இதை கவனித்த அமித்ஷா, அவரை அருகே அழைத்துள்ளார். நயினார் உள்பட மூவரும் விருந்தில் பங்கேற்ற பின்பு தனித்தனியாக ஆலோசித்துள்ளனராம். இதனிடையே, அண்ணாமலை காலத்தில் பூத் கமிட்டி பணிகள் முழுமையடையவில்லை என நயினார் BL சந்தோஷிடம் ரிப்போர்ட் கொடுத்துள்ளாராம்.
Sorry, no posts matched your criteria.