India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஒரு பிரமாண்ட தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில், இதில் நடிப்பதற்கு ரஷ்மிகா மந்தனா ஆடிஷன் செய்யப்பட்டுள்ளாராம். இருப்பினும், இன்னும் படக்குழு முடிவெடுக்கவில்லையாம். ஏற்கெனவே இப்படத்தில் தீபிகா படுகோனே, மிருணாள் தாகூர் & ஜான்வி கபூர் இணைந்துள்ளதால், ரஷ்மிகாவும் சேர்ந்தால் 4 லீட் ஹீரோயின்கள் இருப்பர். இந்த காம்போ எப்படி இருக்கும்?
உங்களுக்கு கிடைக்கும் அன்பைவிட இந்த உலகிற்கு இன்னும் அதிகமான அன்பை திருப்பிக் கொடுங்கள். இதில், ஏமாற்றப்பட்டாலும் பரவாயில்லை. ஏமாந்து போவது, நீங்கள் அல்ல என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். கோபம், வெறுப்பு, பொறாமை போன்றவற்றால் எதையும் சாதித்து விட முடியாது. முயன்றவரை யாரிடமும் கோபம் கொள்ளாமல், அனைவரிடமும் சிரித்து பேசி பழகி பாருங்கள். மகிழ்ச்சியின் தாரக மந்திரம் இதுவே!
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் ஊரை ஏமாற்றும் திட்டம் என்று அன்புமணி விமர்சித்துள்ளார். பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்களே இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், அதனுடன் மகளிர் உரிமைத்தொகையைச் சேர்த்து ஏமாற்றுவதாகவும் சாடியுள்ளார். எனவே, இவ்வாறு ஏமாற்றுவதை விடுத்து, சேவை உரிமைச் சட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேலை நேரத்தில் பலமுறை தூங்கியதும், பலமுறை விபத்து தவிர்க்கப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பங்கஜின் சோம்பேறித்தனத்தால் பிஞ்சுகள் உதிர்ந்து போனது பெரும் வேதனை.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இதுவரை இந்த மைதானத்தில் 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில், 3-ல் மட்டுமே இந்தியா வென்றுள்ளது. பும்ரா, ஆர்ச்சர் இன்று களமிறங்குவார்கள் எனக் கூறப்படும் நிலையில், பவுலிங் அனல் பறக்கும். இந்த டெஸ்டில் எந்த இந்திய வீரர் சதமடிப்பார் என்றும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். வெல்லப்போவது யார்?
‣நாளை பார்த்து கொள்ளலாம் என நினைத்த காரியத்தை உடனே செய்து முடியுங்கள்
‣நீங்கள் சண்டையிட்ட ஒருவரிடம் நார்மலாக பேசுங்கள்
‣அருகிலுள்ள இடங்களுக்கு நடந்தே செல்லுங்கள்
‣தெரியாத ஒருவருக்கு ஒரு சின்ன உதவியை செய்யுங்கள்
‣ஒரு பறவைக்கோ/ விலங்கிற்கோ உணவளியுங்கள்
‣செல்போன் அல்லாமல் நேரில் சென்று நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். நிச்சயமாக மனதில் மகிழ்ச்சி நிறையும். ட்ரை பண்ணுங்க…
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் களப்பணிகளை துவக்கிவிட்டனர். அந்த வகையில் தவெகவும் கட்சியின் கட்டமைப்பை உருவாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளதாம். இதன்பின்பு 2 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்க்க இலக்காக கொண்டுள்ளதாம். வரும் செப்., மாதம் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்துக்கு செல்லும் விஜய் தொகுதி வாரியாக ஆய்வு மேற்கொண்டு வேட்பாளர்களை இறுதிசெய்ய உள்ளதாக தகவல்கள் உள்ளன.
வார விடுமுறை நாள்களில் மக்கள் நெரிசலின்றி சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை (ஜூலை 11) முதல் ஜூலை 13 வரை முக்கிய நகரங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். SHARE IT.
*988: டப்ளின் நகரம் நிறுவப்பட்டது.
*1739: நாதிர் ஷா செங்கோட்டையை கொள்ளையடித்தார்.
*1778: பிரான்சின் லூயிஸ் XVI கிரேட் பிரிட்டன் மீது போரை அறிவித்தார்.
*1947: இந்தியாவின் முதல் PM ஜவஹர்லால் நேரு, செங்கோட்டையின் லாஹோரி வாயிலில் இந்தியக் கொடியை ஏற்றினார். *1949: தஜிகிஸ்தானின் கைடு பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கி 7,200 பேர் உயிரிழந்தனர்.
மத்திய அரசு ₹5000 கோடிக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தரவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சுமத்தியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததும் மத்திய அரசின் திட்டத்தின் பெயரை மட்டும் மாற்றி முதல்வரின் கிராம சாலைகள் திட்டம் என அறிவிப்பு வெளியிட்டதாகவும் ஆனால் மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட கடந்த 4 ஆண்டுகளாக திமுக அரசு நிறைவேற்றவில்லை என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.