India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஆக.26-ல் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தற்போதுவரை இந்த திட்டத்தில் சுமார் 17 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இனி 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்பெறுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பஞ்சாப் CM பகவந்த் மானுக்கு அரசு சார்பில் இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இளநரை பிரச்னை ஆண்கள், பெண்கள் இருவரையும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குகிறது. இதை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் இந்த வழிகள் உதவும்: *அதிகம் Stress ஆகாதீர். *வைட்டமின் B நிறைந்த உணவுகளை தினசரி உட்கொள்ளவும். *கரிசலாங்கண்ணி சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்துவரலாம். *சல்பேட் இல்லாத ஷாம்புகள், அமோனியா, பிபிடி கலக்காத ஹேர்-டை போன்றவற்றை பயன்படுத்தலாம் *வாரம் 3 முறை தலைக்கு குளிக்கவும். SHARE IT!
’பாரதிய அந்தரிக்ஷ் ஸ்டேசன்’ என பெயரிடப்பட்ட இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட Space Station-ன் மாதிரியை ISRO காட்சிபடுத்தியுள்ளது. சீனா மட்டுமே சொந்தமாக விண்வெளி ஆய்வு நிலையத்தை வைத்திருக்கும் நிலையில், இந்தியாவும் அதன் ஆய்வு நிலையத்தை 2028-க்குள் விண்வெளியில் நிறுவ திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் கோள்கள் பற்றிய ஆய்வு, விண்வெளி சுற்றுலா ஆகிவற்றை செய்யமுடியும் என கூறப்படுகிறது.
புதிய வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 25-ம் தேதி முதல் USA-க்கு தபால் சேவைகளை நிறுத்துவதாக அஞ்சல்துறை அறிவித்துள்ளது. 800 USD வரையிலான பொருள்களுக்கு சுங்க வரி இல்லாமல் இருந்த நிலையில், 50% வரி விதித்து டிரம்ப் அறிவித்தார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வரும் 25-ம் தேதிக்கு பிறகு முன்பதிவு செய்தவர்கள் தங்களது பொருள்களை திரும்ப பெறவும் அஞ்சல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மோசடியாளர்கள் நாளும் புதுப் புது உத்திகளை கண்டுபிடித்து வருகின்றனர். மகாராஷ்டிராவின் ஹிங்கோலியில், அரசு ஊழியர் ஒருவருக்கு வாட்ஸ்ஆப்பில் திருமண பத்திரிகையுடன் APK ஃபைல் ஒன்றும் வந்துள்ளது. அதை அவர் கிளிக் செய்த அடுத்த நொடி, அவரின் மொபைல் ஹேக் செய்யப்பட்டு, வங்கிக் கணக்கில் இருந்து ₹1.90 லட்சம் திருடப்பட்டது. போலீஸ் இதை விசாரித்து வருகின்றனர். ஆகவே மக்களே, இந்த மாதிரி மெசேஜ்களை கிளிக் செய்யாதீங்க.
ரஜினி நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் ‘கூலி’ படத்தின் வசூல் ₹500 கோடியை நெருங்கிவிட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேகமாக இந்த சாதனையை படைத்த ரஜினி படம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், எந்திரன் பட இந்தி பதிப்பு வசூலை (₹23.84 கோடி) இந்த படம் எட்டே நாள்களில்(₹26.02 கோடி) முறியடித்துள்ளதாம். ரஜினி கரியரில் அதிகம் வசூலித்த ‘2.0’, ‘ஜெய்லர்’ ஆகிய படங்களின் வசூலை ‘கூலி’ முந்துமா?
பூமி சுழல்வதை நிறுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா? ▶ஈர்ப்பு விசையின்றி மனிதர்கள் தூக்கி வீசப்படுவார்கள் ▶பூமியின் ஒரு முனையில் எப்போதும் வெயில், மற்றொரு முனையில் குளிர் நிலவும். இதனால் உயிரினங்கள் இறக்கும் ▶சூரியன் இன்றி தாவரங்கள் வளராது. உணவு தட்டுப்பாடு ஏற்படும் ▶சுனாமி, பூகம்பங்கள் உருவாகும் ▶மொத்தத்தில் உயிரினங்கள் வாழ தகுதியற்ற கோளாக பூமி மாறும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
மதுரை மாநாட்டிற்கு சென்றபோது உயிரிழந்த அக்கட்சியின் தொண்டர்கள் 3 பேரின் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில், ஊரப்பாக்கத்தை சேர்ந்த பிரபாகரன், நீலகிரியை சேர்ந்த ரித்திக் ரோஷன், விருதுநகரை சேர்ந்த காளிராஜ் ஆகியோரின் மறைவு மன வேதனை அளிப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும், அவர்கள் விரும்பிய இலட்சிய சமுதாயத்தை நாம் படைத்து காட்டுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பட்டியலை காங்., தீவிரமாக எடுத்து வருகிறதாம். அதன் பின்னணியில் TVK கூட்டணியில் 70 தொகுதிகள், DCM பதவி ஆஃபர் இருப்பதாக கூறப்படுகிறது. 1989-ல் தனித்து போட்டியிட்டு 26 தொகுதிகளில் வென்ற காங்., அந்த தொகுதிகளையும், 2-வது இடம் வந்த தொகுதிகளையும் கேட்க உள்ளதாம். DMK கூட்டணியில் உள்ள காங்., தலைவர்கள் அண்மை காலமாக ஆட்சியில் பங்கு கோரிக்கையை தீவிரமாக பேசி வருவது கவனிக்கத்தக்கது.
முன்னாள் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு நிதியை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்திய வழக்கில் ரணில் நேற்று கைது செய்யப்பட்டார். ஆக.26 வரை ரிமாண்டில் வைக்கப்பட்ட நிலையில், அவருக்கு BP, சர்க்கரை அதிகரித்து திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தற்போது கொழும்பில் உள்ள நேஷனல் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.