India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் இன்னும் 24 – 36 மணிநேரத்தில் இந்திய ராணுவம் இஸ்லாமாபாத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாக்., அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்த இந்தியா தயாராகி வருவதாக நம்பகமான உளவுத்துறை தகவல் கிடைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் உள்ளதாக PM மோடி நேற்று தெரிவித்து இருந்தார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து LOC பகுதியில் இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் வலுத்து வருகிறது. 6-வது நாளாக எல்லையில் இருநாட்டு ராணுவத்தினரும் இன்று துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்திய ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. அத்துமீறி தங்கள் வான்பரப்புக்குள் நுழைந்ததால் நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (மே 1) திரைப்பட ரசிகர்களுக்கு வரிசையாக ட்ரீட் காத்திருக்கிறது. சூர்யாவின் ‘ரெட்ரொ’, சசிகுமாரின் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதேபோல, நானியின் ‘ஹிட் 3’ தமிழில் டப்பாகி வெளியாகிறது. இந்தியில் அஜய் தேவ்கனின் ‘ரெய்ட் 2’ படம் வெளியாகிறது. முதல் பாகம் மெகா ஹிட் என்பதால், இப்படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்த 4 படங்களில் உங்க சாய்ஸ் என்ன?
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு நாடெங்கும் முஸ்லிம் வெறுப்பு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. APCR அமைப்பு நடத்திய ஆய்வில், இந்தியாவில் கொலை உள்பட பல்வேறு முஸ்லிம் எதிர்ப்பு சம்பவங்கள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. உ.பி.,யில் இந்து அமைப்பை சேர்ந்தவரால் முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கொல்கத்தாவில் கர்ப்பிணிக்கு ஹாஸ்பிடலில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் சரியா?
ஏப்ரல் மாதத்தின் கடைசி நாளான இன்று தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது. ஆனாலும், இந்த மாதத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹3,760 உயர்ந்துள்ளது. கடந்த 1-ம் தேதி 1 கிராம் ₹8,510-க்கும், சவரன் ₹68,080-க்கும் விற்பனையானது. அதன் பின்னர் கிடுகிடுவென உயர்ந்து. ஏப்.30(புதன்கிழமை) இன்றைய காலை நேர வர்த்தகப்படி 22 கேரட் 1 கிராம் ₹8,980-க்கும், ₹71,840-க்கும் விற்பனையாகிறது.
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் வரும் ஜூன் 5-க்குள் முடிவடையும் என ஸ்ரீ ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. தற்போது 99% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், ராமர் தர்பார் அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், கோயில் வளாகத்தில் உள்ள வால்மீகி, அகத்திய முனி ஆகியோரின் கோயில்களையும் ஜூன் 5-க்கு பிறகு பொதுமக்கள் தரிசிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPL-ல் அதிக வயதில் அரைசதம் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை DC வீரர் பாப் டூ பிளெஸ்ஸிஸ் பெற்றுள்ளார். KKR-க்கு எதிரான மேட்சில், 62 ரன்களை விளாசி தோனியை அவர் முந்தினார். தோனி 40 வயது 262 நாள்களில் அரைசதம் அடித்த நிலையில், டூ பிளெஸ்ஸிஸ் 40 வயது 290 நாள்களில் அரைசதம் அடித்தார். இப்பட்டியலில் கில்கிறிஸ்ட் (41 வயது 181 நாள்கள்) முதல் இடத்திலும், கெயில் (41 வயது 39 நாள்கள்) 2-வது இடத்திலும் உள்ளனர்.
அட்சய திருதியை நாளில் தங்கம் மட்டுமல்ல, எந்த பொருளை வாங்கினாலும், மங்களம் உண்டாகும் என்பது நம்பிக்கை. அதே போல, நீங்கள் செய்ய விரும்பும் ஒரு காரியத்தையும் இன்று தொடங்கினால், அது வெற்றியில் முடியும் எனப்படுகிறது.
அரை கிலோ அரிசியை வாங்கி சிலருக்கு தானமாக வழங்கலாம். ஒரு வேளை உணவாவது மற்றவர்களுக்கு வாங்கி தரலாம். இதன்மூலம் நல்ல வளர்ச்சியும், மகாலட்சுமி அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அட்சய திருதியையொட்டி தங்கம் விலை இன்று உயர்வை சந்திக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், தங்கம் விலையில் மாற்றமில்லை என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,980-க்கும், சவரன் ₹71,840-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியை பொறுத்தவரையில் 1 கிராம் ₹111-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,11,000-க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹320 விலை உயர்ந்தது கவனிக்கத்தக்கது.
பரபரப்பான அரசியல் சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் விஜய பிரபாகரனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தல், கூட்டணி விவகாரம் குறித்தும் அறிவிப்பு வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.