India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
PM மோடி வரும் 26-ம் தேதி தமிழகம் வரவிருந்த நிலையில், அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2 நாள் பயணமாக நாளை குஜராத் செல்லும் அவர், ₹5,400 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், ரயில்வே, நெடுஞ்சாலை, மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் ₹1,400 கோடி மதிப்பிலான முடிவடைந்த திட்டங்களை மக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைப்பதோடு, பொதுக்கூட்டத்திலும் பேச உள்ளார்.
+1 துணைத்தேர்வு எழுதி மறுகூட்டல் (Re-total), மறு மதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் வெளியாகியுள்ளது. மார்க்கில் மாற்றம் இருக்கும் தேர்வர்களின் பட்டியல் நாளை (ஆக.25) பிற்பகல் வெளியாகவுள்ளது. மாற்றம் இல்லாதவர்களின் பதிவெண்கள் பட்டியலில் இடம்பெறாதாம். www.dge.tn.gov.in இணையதளத்தில் Notification பகுதியில் புதிய மார்க்கை அறியலாம். SHARE IT.
ஓரிரு படங்களில் மட்டுமே தலைகாட்டிய தர்ஷா குப்தா, முழுநேர இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சராக மாறிவிட்டார். தனது கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கிறார். இந்நிலையில், தனது Exclusive ஆன போட்டோக்களை பார்ப்பதற்காக மாத Subscription ₹440 வசூலிக்கிறாராம். தற்போது 800 பேருக்கு மேல் Subscription செய்துள்ளதை கணக்கிட்டால், மாதம் இதன் மூலம் மட்டுமே ₹3.5 லட்சம் சம்பாதிக்கிறாராம்.
மக்களின் உயிரை கொல்லும் TASMAC கடையை அரசு நடத்தும்போது, தூய்மை பணியை அரசு நடத்த தயங்குவது ஏன் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், மின்சாரத்துறை அலட்சியத்தால் உயிரிழந்த இளம் தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கு ₹20 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டால் போதுமா என்றார். மேலும், குடிநீர், கல்வி, மருத்துவம் உள்ளிட்டவைகளை தனியாருக்கு கொடுத்தால் அரசு எதற்கு என சாடினார்.
இந்தியாவின் பட்டியலிடப்பட்ட ஒரே ஆன்லைன் கேமிங் நிறுவனம் Nazara Technologies. இந்நிறுவனத்தின் ₹334 கோடி மதிப்பிலான பங்குகளை கடந்த ஜூனில், பிரபல முதலீட்டாளர் ரேகா ஜுன்ஜுவாலா விற்றுள்ளார். ஆன்லைன் கேமிங் மசோதா தாக்கலாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு இவ்வாறு அவர் செய்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. இதனிடையே கடந்த 5 நாள்களாக இந்நிறுவனத்தின் பங்குகள் 15.85% அளவு குறைந்துள்ளன.
சென்னையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற புகாரில் ஆந்திராவைச் சேர்ந்த துணை நடிகை நாகம்மா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தந்தை இறந்த நிலையில், தாய் வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். இதனால், ஆதரவற்று இருந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி நாகம்மா இந்த கொடுமையை செய்துள்ளார். தகவலறிந்து சென்ற போலீஸ் 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தவெக மாநாட்டில் ‘ஸ்டாலின் Uncle’ என முதல்வரை விஜய் குறிப்பிட்டதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், 50 ஆண்டு பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான முதல்வரை விஜய் இவ்வாறு விமர்சித்திருப்பதை ஏற்க முடியாது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தவெக தொண்டர்களே மெச்சூரிட்டி ஆன நிலையில், விஜய் விசிலடிச்சான் குஞ்சாகி விட்டாரா என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
சிலிண்டரின் உறுதியை 10 ஆண்டுகளுக்கு பிறகு கண்டிப்பாக பரிசோதிக்க வேண்டும். அதனை எப்போது செய்ய வேண்டும் என்ற குறியீடே Test date(சோதனை தேதி) ஆகும். இதில் (A25, B26, C27) எழுத்துக்கள் மாதத்தை குறிக்கின்றன. A (ஜனவரி- மார்ச்), B (ஏப்ரல்- ஜூன்), C(ஜூலை- செப்டம்பர்), D(அக்டோபர்- டிசம்பர்). எண்கள் வருடத்தை குறிக்கின்றன. 25, 26, 27 என்பது 2025, 2026, 2027 என்ற வருடத்தை குறிக்கிறது.
நகை மதிப்பில் 90% வரை கடன் வழங்கும் திட்டத்தை சவுத் இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த வட்டி விகிதம், நெகிழ்வான திருப்பி செலுத்தும் விருப்பத் தேர்வுகளுடன் கடன் வழங்கப்படும் என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்மூலம், ₹1 லட்சம் மதிப்புள்ள நகைகளுக்கு ₹90 ஆயிரம் வரை கடன் பெற முடியும். பொதுத்துறை வங்கிகள் 60 – 70% வரையும், நிதி நிறுவனங்கள் 75% வரையும் நகை கடன் வழங்குகின்றன. SHARE IT
தமிழக டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால், ஆக.29 உடன் ஓய்வு பெறுவதற்கான கோப்பில் CM ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், புதிதாக அமைக்கப்படவுள்ள தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக 2 ஆண்டுகளுக்கு அவரை நியமிக்கவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அடுத்த டிஜிபி பரிந்துரையில் சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் உள்ளனராம்.
Sorry, no posts matched your criteria.