India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழம்பெரும் ஹாலிவுட் நடிகையான பிரிஸ்கில்லா பாய்ண்டர் காலமானார். அவருக்கு வயது 100. 1976-ல் நடிக்க தொடங்கி, 2008-ல் வயதின் காரணமாக ஹாலிவுட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் பிரபல இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கின் முன்னாள் மாமியார் ஆவார். மிக பிரபலமான Flash தொடர்களிலும் முக்கிய கேரக்டரில் இவர் நடித்துள்ளார். பிரிஸ்கில்லாவின் மறைவுக்கு திரைத் துறையினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
கொல்கத்தா தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்தில் கரூரைச் சேர்ந்த 3 பேர் உள்பட மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர். இதற்கு இரங்கல் தெரிவித்த இபிஎஸ், 3 தமிழர்கள் உள்பட பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். படுகாயமடைந்தோர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடப்பு தொடரில், CSK மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால், ரசிகர்களும் அணி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை நடைபெறும் CSK vs PBKS போட்டிக்கான டிக்கெட் விற்பனை மிக மந்தமாக இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. சில கேலரிகளில் இன்னும் டிக்கெட் முழுமையாக விற்கப்படவே இல்லை. CSK-வில் என்ன பிரச்னை. எதை மாற்றினால், சிங்கம் மீண்டும் வீறுநடை போடும்?
USA அதிபராக பதவியேற்ற பின் ட்ரம்ப் 140 அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று கூறி இந்தியர்களை சங்கிலியால் கட்டி நாடு கடத்தினார். வரிகளை உயர்த்தி சர்வதேச வர்த்தகப் போரை தொடங்கினார். நட்பு நாடுகளான உக்ரைன், கனடா தலைவர்களை அவமானப்படுத்தினார். பரம எதிரி புதினை புகழ்ந்தார். எலான் மஸ்க் ஆலோசனையில் அரசு ஊழியர்களை குறைத்தார். எப்படி இருக்கு ட்ரம்ப் நிர்வாகம்?
அட்சய திருதியை முன்னிட்டு ₹1000 இருந்தால், டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்து, அதற்கு இலவச தங்கம் பெறும் திட்டத்தை ‘Jio Finance’ கொண்டுவந்துள்ளது. ஏப்ரல் 29 – மே 5 வரை, JioFinance அல்லது MyJio ஆப்களில், ₹1,000 – ₹9,999 வரை வாங்கினால் 1% இலவச தங்கமும் , ₹10,000-க்கு மேல் வாங்கினால், 2% இலவச தங்கமும் வழங்கப்படுகிறது. இதற்கு வழங்கப்படும் கூப்பனை இந்த ஆப்பிலேயே Redeem செய்து கொள்ளலாம். SHARE IT.
மாத இறுதி நாளான இன்று இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடனேயே காணப்படுகின்றன. சென்செக்ஸ் 110 புள்ளிகள் அதிகரித்து 80,373 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது. அதேபோல், நிப்ஃடி 26 புள்ளிகள் உயர்ந்து 24,362 புள்ளிகளை பெற்றுள்ளது. HDFC LIFE பங்குகள் இன்று அதிக லாபத்தில் உள்ளன. அதேநேரத்தில், இன்டஸ்இன்ட் வங்கி, பஜாஜ் ஃபின்செர்வ் உள்ளிட்டவற்றின் பங்குகள் இறங்குமுகத்தில் இருக்கின்றன.
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 6-வது நாளாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளது. பாரமுல்லா, குப்வாரா எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் தொடங்கி பர்க்வாலில் உள்ள சர்வதேச எல்லையை கடந்தும் பாக்., தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தாக்குதலில் உயிரிழப்பு ஏதுமில்லை என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரியில் இன்று நடைபெறவுள்ள தேமுதிகவின் 19-வது பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்தின் மூத்த மகனான விஜய பிரபாகரன் அக்கட்சியின் இளைஞரணி செயலாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், துணை செயலாளராக உள்ள எல்.கே.சுதீஷ் கட்சியின் பொருளாளராகவும், இளைஞரணி செயலாளராக இருக்கும் நல்லதம்பி துணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபமாக அதிருப்தியில் இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை டெல்லிக்கு அனுப்ப CM ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தேசிய ஊடகங்களுக்கு பிடிஆர் அளித்த பேட்டிகள் புயலை கிளப்பின. எனவே, பிடிஆர் தேசிய அரசியலுக்கு சரியாக இருப்பார் என CM நினைக்கிறாராம். ராஜ்யசபா எம்பி பதவி அவருக்கு வழங்கப்படலாம் என்கிறார்கள். நீங்க சொல்லுங்க பிடிஆர் டெல்லி போகணுமா?
கொல்கத்தாவில் நட்சத்திர ஹோட்டலில் <<16261676>>நிகழ்ந்த தீ விபத்தில்<<>> தமிழர்கள் மூவர் உட்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் மற்றும் <<16261453>>விசாகப்பட்டினம்<<>> கோயில் சுவர் இடிந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்துகளில் உறவினர்களை இழந்து தவிப்போருக்கு ஆறுதல் கூறியுள்ள மோடி, பலியானோர் குடும்பத்திற்கு தலா ₹2 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000 நிவாரணம் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.