India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுகாதாரத்துறை இயக்குநர் நியமனத்தால் அதிருப்தியில் உள்ள புதுவை CM ரங்கசாமி தான் ராஜினாமா செய்யப்போவதாக கூறியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. NDA கூட்டணியில் சுமூக உறவு இல்லை என பேசப்பட்டு வரும் நிலையில், CM பரிந்துரை செய்த அனந்தலட்சுமியை தவிர்த்து கவர்னர் கைலாஷ்நாதன், செவ்வேள் என்பவரை நியமித்துள்ளார். இதனால், தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் அரசு – கவர்னர் இடையே மோதல் தொடங்கியுள்ளது.
ஆதார் கார்டு ஒருபோதும் ஒரு நபரின் முதன்மை அடையாள அட்டை அல்ல என்று UIDAI சிஇஓ புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், போலி ஆதார் அட்டைகளைக் கண்டறிய புதிய ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதேநேரம், புதிதாக வழங்கப்படும் ஆதார் கார்டுகளில் உள்ள QR கோடைப் பயன்படுத்தி, இந்த ஆப் மூலம் போலியானதைக் கண்டறியலாம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
காந்தி, அம்பேத்கர், பெரியார் வழியில் செல்லாமல், கோட்சே கூட்டத்தின் வழியில் மாணவர்கள் செல்லக்கூடாது என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி ஜமால் முகமது கல்லூரி பவள விழாவில் பேசிய அவர், மாணவர்களுக்கு அரசியல் புரிதல் அவசியம் என்றார். தமிழகத்தைக் காக்க மாணவர்கள் ஓரணியில் நிற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். விரைவில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரபல நடிகையும், மாடலுமான ஹுமாயிரா அஸ்கர்(32) கராச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஹுமாயிராவின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். ‘Jalaibee’, ‘Aik Tha Badsha’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் ஹுமாயிரா நடித்துள்ளார். #RIP
டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி இன்னும் சில காலம் விளையாடி இருக்க வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து விம்பிள்டன் போட்டியை காண வந்த அவரிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு கோலி, 4 நாள்களுக்கு ஒரு முறை தாடிக்கு டை அடிக்க தொடங்கிவிட்டால், ஓய்வு பெற அதுவே சரியான டைம் என குறிப்பிட்டு, தான் 2 நாள்களுக்கு முன்னர் தான் டை அடித்ததாக கிண்டலாக பதிலளித்தார்.
செளமியாவை அரசியலுக்கு வரக்கூடாது என்று நானே கூறியதாக ராமதாஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்றைய பாமக கூட்டத்தில் அவரது மூத்த மகள் காந்திமதியை மேடையேற்றி அழகு பார்த்தார் மருத்துவர். இதனால் மகளுக்கு ‘Ok’ மருமகளுக்கு ‘No’வா என்று கட்சியினரும், ‘இது வாரிசு அரசியல் இல்லையா’ என திமுகவினரும் கேட்கின்றனர். அதேநேரம், காந்திமதியின் மகன் முகுந்தனின் நுழைவே தந்தை – மகன் இடையே பிரச்னை உருவாக ஒரு காரணம்.
எண்ணற்ற சிறப்புகளை கொண்ட ‘தமிழ்நாடு’ மாநிலத்தின் பெரிதும் அறிந்திடாத சில தகவல்களை மேலே உள்ள போட்டோக்களில் பாருங்க. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத அளவிற்கு சிறப்பு நமது தமிழ்நாட்டுக்கு மட்டுமே உண்டு. மேலே கொடுக்கப்பட்டுள்ளவை கொஞ்சம் தான். இதுபோன்ற நமது மாநிலம் குறித்து உங்களுக்கு தெரிஞ்ச சில அரிய தகவல்களை கமெண்ட் செய்யவும். கெத்தாக சொல்லுங்க தமிழன்டா என!
கடலூர், செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதற்கு, வடமாநில கேட் கீப்பரை பணியமர்த்தியதால் அவருக்கு மொழி தெரியாமல் பதிலளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை உள்ளூர் மக்கள் முன்வைத்தனர். இந்நிலையில், ஆனந்தராஜ் என்பவர் புதிய கேட் கீப்பராக நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே விதிகளை முறையாக பின்பற்றுமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் கூடுதல் பயனாளிகளை சேர்க்கும் பணி துவங்கி புதிய ரேஷன் கார்டை அரசு விரைவாக வழங்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு இறுதியிலிருந்து மீண்டும் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. ஆனாலும், பல முறை ஆய்வு செய்த பிறகே வழங்கப்படுவதால், ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தவர்களில் சுமார் 1.10 லட்சம் பேர் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. மக்களின் கோரிக்கையை அரசு ஏற்குமா?
➤நாடு தழுவிய <<17000804>>ஸ்ட்ரைக்<<>>.. தமிழகத்தில் 80% அரசு பஸ் இயக்கம்
➤ <<17003074>>நமீபியாவில் <<>>சுற்றுப்பயணம்: மேள தாளம் வாசித்த PM மோடி
➤<<17001915>>குஜராத்தில் <<>>உடைந்து விழுந்த பாலம்… 6 பேர் மரணம்
➤<<17001872>>தங்கம் <<>>விலை சவரனுக்கு ₹480 குறைந்தது
➤<<17000262>>ஊக்கமருந்து <<>>பயன்பாடு: Ex. உலகசாம்பியனுக்கு ஒரு வருடம் தடை ➤<<17001168>>சட்டவிரோத <<>>பணப்பரிமாற்றம்.. நடிகை அருணா வீட்டில் ED ரெய்டு
Sorry, no posts matched your criteria.