India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*தமிழர் நாடு: சேர நாடு- கோவை, நீலகிரி, கரூர், கன்னியாகுமரி மற்றும் இன்றைய கேரள மாநிலத்தின் பகுதிகள். *சோழ நாடு- தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள். *பாண்டிய நாடு: மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்கள். *தொண்டை நாடு- காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் வழித்தோன்றல்களுக்கு அரசு உதவ வேண்டும் என செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார். வ.உ.சி குடும்பத்தினர் சிரமமான சூழலில் வாழ்ந்து வருவதாகவும், எள்ளு பேத்தி சாய்லட்சுமி அரசுப் பணியில் இருந்து குறுகிய காலத்தில் ஓய்வு பெற்றதால் அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சாய்லட்சுமிக்கு அரசுப் பணி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸ் கிளப் எறிதல் இறுதிப்போட்டியில் 34.92 மீ எறிந்து தங்கம் வென்றார் இந்திய வீரர் தரம்பிர். இதன் மூலம் அதிக தூரம் வீசிய ஆசிய சாதனையை படைத்தார். இது கிளப் எறிதலில் இந்தியா பெறும் முதல் தங்கமாகும். அதேபோல், ப்ரனவ் சூர்மா என்ற இந்திய வீரர் 34.59 மீ எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் முதல் இரண்டு இடத்தை இந்தியர்கள் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.
*இந்தப் பரந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் உங்களிலும், உங்களோடும், உங்களுக்காகவும் உள்ளன. *பிரிந்து செல்லும் நேரம் வரை காதல் அதன் ஆழத்தை அறியாது. *எல்லோராலும் கேட்க முடியும், ஆனால் உணர்திறன் மிக்கவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். *நீங்கள் யாருடன் சிரித்தீர்கள் என்பதை நீங்கள் மறந்துவிடலாம், ஆனால் நீங்கள் யாருடன் அழுதீர்கள் என்பதை நீங்கள் ஒருபோதும் மறக்க மாட்டீர்கள்.
‘தி கோட்’ படத்தில் நடித்துள்ள பிரபுதேவாவிற்கு ₹2 கோடி, பிரசாந்திற்கு ₹75 லட்சம், ஜெயராமிற்கு ₹50 லட்சம், சிநேகாவிற்கு ₹30 லட்சம், மோகனுக்கு ₹40 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கு ₹10 கோடியும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கு ₹3 கோடியும் ஊதியமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் இன்று வெளியாகிறது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: இல்வாழ்க்கை ▶குறள் எண்: 44 ▶குறள்: பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். ▶பொருள்: பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.
மகாராஷ்டிராவில் மன்னர் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்த வழக்கில் சிற்பி ஜெய்தீப் ஆப்தே தானேயில் கைது செய்யப்பட்டார். ராஜ்கோட்டில் பிரதமர் மோடி திறந்து வைத்த சிலை கடந்த ஆக.26ஆம் தேதி உடைந்து விழுந்தது. 35 அடி உயர சிலையின் கை, கால், தலை என தனித்தனியாக சுக்குநூறாக நொறுங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கடற்படை விசாரணை நடத்திய நிலையில் சிற்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நமது வீரர்களின் செயல்பாட்டால் இந்தியா பெருமை கொள்வதாகவும், இதுவரை இல்லாத வகையில் இந்த பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியர்கள் அதிக பதக்கங்களை வென்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அதிக பதக்கங்களை வென்றது நமது வீரர்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் உறுதியை காட்டுவதாக வாழ்த்தியுள்ளார்.
▶செப்டம்பர்-5 (ஆவணி 20) ▶வியாழன் ▶நல்ல நேரம்: 10:45-11:45 AM ▶கெளரி நேரம்: 12:15-01:15 AM & 06:30-07:30 PM ▶ராகு காலம்: 01:30-03:00 PM ▶எமகண்டம்: 06:00-07:30 AM ▶குளிகை: 09:00-10:30 AM ▶திதி: திரிதியை ▶நட்சத்திரம்: உத்திரம் ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶யோகம்: மரண, சித்த யோகம் ▶சந்திராஷ்டமம்: சதயம்.
இன்று (செப்டம்பர் 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.