News September 5, 2024

ரேஷன் அட்டைதாரர்களே இன்றே கடைசி..

image

ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் பொருள்கள் விநியோகம் இன்றுடன் (செப்.5) நிறைவு பெறுகிறது. கடந்த மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் பெறாதவர்கள், இன்று மாலைக்குள் பெறலாம். கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும், அதற்கு முந்தைய மாதத்திற்கான பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதால், இம்மாதம் மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என அதிகாரிகள் கூறியுள்ளனர். நீங்கள் ரேஷனில் ஆகஸ்ட் மாத பொருள்களை வாங்கிவிட்டீர்களா?

News September 5, 2024

இத மட்டும் செஞ்சா போதும்.. தட்கல் டிக்கெட் கன்ஃபார்ம்!

image

தட்கல் முன்பதிவு தொடங்கும் நேரத்திற்கு முன்பே IRCTC கணக்கு சென்று தகவல்களை பதிவு செய்து வைக்க வேண்டும். ஒரே நேரத்தில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட சாதனங்கள் மூலம் முன்பதிவு செய்வதால் டிக்கெட்டை உறுதி செய்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுடன் ஒப்பிடும் போது Net Banking அல்லது UPI சேவையை தேர்வு செய்யலாம். இணைய வசதி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

News September 5, 2024

எதிர்பார்த்தது இன்னும் நடக்கலை.. கில் வருத்தம்

image

டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிர்பார்த்தது போல இன்னும் தனது விளையாட்டு அமையவில்லை என சுப்மன் கில் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து 10 டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருப்பதாகவும், அந்த போட்டிகளுக்கு பிறகு தனது எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் என நினைப்பதாகவும் கில் கூறியுள்ளார். கில், இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் 1,492 ரன்கள் குவித்துள்ளார். இது 4 சதம், 6 அரை சதங்கள் அடங்கும். பேட்டிங் சராசரி 35.52 % ஆகும்.

News September 5, 2024

மூலவர், உற்சவர் என்ன வித்தியாசம்?

image

கோயிலில் மூலவர், உற்சவர் ஆகிய 2 ரூபங்களில் இறைவன் எழுந்தருளி இருப்பார். இதுகுறித்து ஆன்மிகம் என்ன சொல்கிறது என இங்கு பார்க்கலாம். கோயில் கருவறையில் கற்சிலை ரூபத்தில் காட்சியளிப்பவர் மூலவர் ஆவார். அவர் முன்பு, வெண்கல சிலையாக இருப்பவர் உற்சவர். இருவருக்கும் தினமும் பூஜைகள், அபிஷேகங்கள் நடக்கும். விழாக்காலங்களில் உற்சவரே திருவீதி உலா கொண்டு வரப்படுவார். ஆனால் இருவரையும் வழிபடலாம். SHARE IT

News September 5, 2024

வெளி மாநிலத்தவருக்கு வேலையா.. ராமதாஸ் கண்டனம்

image

ஆவடி கனரக ஊர்தி ஆலை வேலைகளை வெளி மாநிலத்தவருக்கு தாரை வார்க்கக் கூடாதென டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், தொழில்நுட்பப் பணியாளர்கள் நியமனத்தில் 90%க்கும் கூடுதலான வேலைவாய்ப்புகளை வெளிமாநிலத்தவருக்கு தாரைவார்க்க ஆலை நிர்வாகம் சதி செய்து வருகிறது என கூறியுள்ளார். சி, டி பிரிவு பணிகளை உள்ளூர் மக்களூக்கே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News September 5, 2024

இன்று இடி மின்னலுடன் மழை கொட்டும்: IMD

image

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் முன்னறிவித்து உள்ளது. மேலும், நாளை முதல் 10ம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ள வானிலை மையம், சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

News September 5, 2024

யார் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது?

image

பசு காவலர்கள் என்ற பெயரில் மனிதர்களை கொலை செய்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தது என, சமீபத்தில் கொல்லப்பட்ட ஆர்யன் மிஸ்ராவின் (20) தந்தை கேள்வி எழுப்பியுள்ளார். குற்றவாளிகள் 2 மாதங்களுக்குள் கைது செய்யப்படவில்லை என்றால் தானும், தனது மனைவியும் தற்கொலை செய்து கொள்வதாக தந்தை சியாநந்த் மிஸ்ரா கையறுநிலையில் கூறியுள்ளார். பசு காவலர்களால் கடந்த ஆக்.24ல் மகன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

News September 5, 2024

‘தி கோட்’ வெற்றி பெற சீமான் வாழ்த்து

image

விஜய்யின் ‘தி கோட்’ படம் வெற்றி பெற சீமான் வாழ்த்தியுள்ளார். தவெக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்காமல் 21 கேள்விகளை கேட்டு வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாகவும், இதுவரை நடத்தப்பட்ட மாநாடுகளில் இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டுதான் நடத்தினார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அண்ணன் – தம்பி என்ற பாசத்தில் விஜய்யின் மாநாடு சிறக்கவும் அவர் வாழ்த்தியுள்ளார்.

News September 5, 2024

சென்னையில் பிறந்தவருக்கு பம்பர் பரிசு

image

சென்னையில் பிறந்த அமெரிக்க இஞ்சினியரான பண்ட்வால் ஜெயந்த் பாலிகா, 2024ஆம் ஆண்டுக்கான மில்லினியம் தொழில்நுட்ப பரிசை (€1 மில்லியன்) வென்றுள்ளார். உலகளவில் மின்சாரம், பெட்ரோல் நுகர்வை பெரிதளவு குறைக்கும் வகையிலான அவரது Insulated Gate Bipolar Transistor கண்டுபிடிப்பிற்கு பரிசு கிடைத்துள்ளது. சென்னை ஐஐடியில் கிடைத்த படிப்பும், கடுமையான பயிற்சியும் வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

News September 5, 2024

தினமும் தக்காளி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

image

புரோட்டீன், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் தக்காளியில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆன்டி ஆக்ஸிடென்ட்களின் சிறந்த ஆதாரமாக உள்ளதால், இதை தினமும் சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைப்பதாக அறிவுறுத்துகின்றனர். கொலஸ்ட்ரால், சரும, இதய பிரச்னைகளை சரி செய்ய உதவுகிறது. மழை காலங்களில் சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

error: Content is protected !!