India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மொபைல் போன் மற்றும் மூளை, தலை, கழுத்து புற்றுநோய்களுக்கு தொடர்பு இல்லை என்று ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. W.H.O. ஏற்படுத்திய குழு ஆய்வு நடத்தி வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன்களின் விற்பனை, பயன்பாடு விண்ணைத் தொடும் வேகத்தில் அதிகரிக்கும் நிலையில், இந்த வகை புற்றுநோய் பாதிப்பு ஒரே நிலையில் சீராக இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தை பொழுதுபோக்காக மட்டுமே பார்க்க வேண்டுமென தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். ‘G.O.A.T’ என்ற வார்த்தை சனாதனத்தை குறிப்பதாக ரவிக்குமார் விமர்சித்திருந்த நிலையில், படத்தை பார்த்தாலே அப்பெயருக்கான காரணம் புரிந்துவிடும் என்றார். ‘G.O.A.T’ மாபெரும் வெற்றி அடைந்துள்ளதாகவும், விஜய் சிறப்பாக நடித்துள்ளதாகவும் அவர் பாராட்டினார். அவரோட கருத்து குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க?
விஜய்யின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான அனுமதியை தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய்யை பார்த்து ஆளுங்கட்சி அஞ்சுகிறது எனக் கூறினார். மேலும், அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் அமைந்தால் மிகுந்த மகிழ்ச்சி எனக் கூறிய அவர், விஜயதாரணிக்கு நிச்சயம் பதவி வழங்கப்படும் எனவும் கூறினார்.
ரேஷனில் ஆகஸ்ட் மாதத்திற்கான பொருள்கள் பெற இன்றே கடைசி நாளாகும். இந்நிலையில், பல பகுதிகளில் பருப்பு, பாமாயிலில் ஏதேனும் ஒன்றை வழங்கிவிட்டு, மற்றொரு பொருளை இல்லை என்று ஊழியர்கள் கூறுகின்றனர். பொருள்கள் கிடைக்காதவர்கள் www.tnpds.gov.in என்ற தளத்திலும், 1967 என்ற எண்ணிலும், TNePDS என்ற செயலியிலும் புகார் அளிக்கலாம். அத்துடன், தங்கள் ரேஷன் கடைகளில் உள்ள பொருள்களின் இருப்பு நிலவரத்தையும் அறியலாம்.
புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை என கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். ஆசிரியர் தின விழாவில் பேசிய அவர், NEPஐ எதிர்க்கும் மாநிலங்களும் அதில் எந்த அளவு எடுத்துக் கொள்ளலாம் என்றே சிந்திப்பதாக கூறினார். அவையும் வேறு பெயர்களில் NEPஐ அமல்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். TNக்கு புதிய கல்விக் கொள்கை தேவை என நீங்கள் கருதுகிறீர்களா? கமெண்ட்ல பதிவிடுங்க.
விஜய் மாநாடு நடத்தி, அவரது கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகளை அறிவித்த பின்னரே கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியும் என பிரேமலதா தெரிவித்துள்ளார். கார் ரேஸ் நடத்த ஒரே இரவில் அனுமதி பெற முடியும் போது, விஜய்யின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் அரசுக்கு என்ன பிரச்னை? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தவெக உடன் தேமுதிக கூட்டணி அமைக்குமா? உங்க கருத்த கமெண்ட்ல சொல்லுங்க.
ஈடன்பர்க்கில் நேற்று நடந்த முதல் டி 20 போட்டியிலேயே ஆஸ்திரேலியா மிரட்டியுள்ளது. ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் விளையாடி கஷ்டப்பட்டு 154 ரன்கள் எடுத்த நிலையில், அதை 9 ஓவர்களிலேயே அசால்ட்டாக சேஸ் செய்து வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. இதில் Power Play ஆன முதல் 6 ஓவரிலேயே 113 ரன்களை எடுத்து, தென் ஆப்பிரிக்காவின் சாதனையை முறியடித்தது ஆஸ்திரேலியா. அதிலும் ட்ராவிஸ் ஹெட், 25 பந்துகளில் 80 ரன்களை குவித்தார்.
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது, அடுத்த 2 தினங்களில் வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் கூறியுள்ளது. இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
அதிக நேரம் செல்போன் பார்க்கும் குழந்தைகளை Digital Dementia தாக்கும் ஆபத்து உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அது என்ன Digital Dementia? செல்போன், டிவி என டிஜிட்டல் திரைகளை அதிகம் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பு தான் அது. நினைவாற்றல் இழப்பே இதன் முதல் அறிகுறி. பிறகு, எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாதவர்களாக மாறுவார்கள் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
IT நடைமுறையை எளிமையாக்குவது குறித்து ஆலோசித்து வருவதாக FM நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட் ஆலோசனை கூட்டங்களில் IT செலுத்துவோர் குறித்துதான் முதலில் ஆலோசிப்போம் எனக் கூறிய அவர், சமூக வலைதளங்களில் பொருளாதாரம், முதலீடு குறித்து சரியான தகவல்களை மட்டும் பகிருமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். இதனிடையே, பொருட்களுக்கான GSTஐ கடந்த 5 ஆண்டுகளில் 1% கூட உயர்த்தவில்லை எனக் குறிப்பிட்டார்.
Sorry, no posts matched your criteria.