India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆப்பிள் ஐபோன் 16 மாடல்கள் வருகிற செப். 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளன. இந்தியாவில் iPhone 16 விலை ₹66,300, iPhone 16 Plus ₹74,600 இருந்தும் விலை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல iPhone 16 Pro ₹91,200, iPhone 16 Pro Max ₹99,500 இருந்தும் விலை தொடங்கலாம் என கணிக்கப்படுகிறது. விலை தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் தெரிவிக்கவில்லை.
விஜய் கட்சியை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கம் இல்லை என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். திமுக யாரையும் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை என்றும், நடிகர் விஜய்க்கு அமைச்சர் உதயநிதியே வாழ்த்து தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். நடிகர்கள் ஆட்சியமைப்பார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மக்களின் பிரச்னையை தீர்க்க எந்த அளவுக்கு முயற்சி செய்கிறோமோ, அந்த அளவுக்கு மக்கள் ஆதரிப்பார்கள் என்றார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், நிகிலா விமல் நடிப்பில் ஆக.23ஆம் தேதி வெளியான படம் ‘வாழை’. வெறும் ₹5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வசூலை குவித்து வருகிறது. இன்று பெரிய பட்ஜெட்டில் (₹400 கோடி) உருவான ‘GOAT’ படம் வெளியான நிலையிலும், ‘வாழை’ அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. இந்த ‘ஹவுஸ் ஃபுல்’ போட்டோவை பகிர்ந்துள்ள மாரி செல்வராஜ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஷேக் ஹசீனா தொடர்ந்து இந்தியாவில் இருக்க, வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் நிபந்தனை விதித்துள்ளார். வங்கதேச அரசு அவரை திரும்ப அழைக்கும் வரை, இந்தியாவில் அவர் இருக்க வேண்டுமானால், அமைதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் இருந்து கொண்டு, அரசியல் கருத்தை அவர் தெரிவிக்கக் கூடாது என்றும், சில சமயம் அவரது கருத்துக்கள் பிரச்னையாக மாறுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசை வன்முறைச் செயல்களால் அச்சுறுத்துவது, பொதுச் சொத்துகளை சூறையாடுவது, மாநில & மத்திய அரசுப் பணியாளர்களை கடமையை செய்யவிடாமல் தடுப்பது, மற்றவர்களின் உரிமைகளை மறுப்பது, அரசு நிர்வாகத்தை பழிப்பது போன்ற குற்றங்களை 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடி, செய்யும்போது, அந்தக் கூட்டத்தை சட்டவிரோதமான கூட்டம் என்றும் BNS சட்டப் பிரிவு 189இன் படி, குற்றம் எனவும் வரையறுக்கிறது.
மருத்துவக் காப்பீட்டுக்கான GST வரி குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கு தற்போது 18% GST வரி விதிக்கப்படுகிறது. இதை குறைக்க அல்லது நீக்கம் செய்ய பிட்மென்ட் குழு அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இந்த கோரிக்கை தொடர்பாக செப்.9இல் நடக்கும் GST கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. வரி ரத்து செய்யப்பட்டால் அரசுக்கு ஆண்டுக்கு ₹3,500 கோடி இழப்பு ஏற்படும்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஜடேஜா, பாஜகவில் இணைந்ததாக தேசிய ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான உறுப்பினர் அட்டை, அவரது மனைவி ரிவாபா பெயரிலான X தள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில், உறுப்பினர் பெயர், மாநிலம், மெம்பர்ஷிப் நம்பர் ஆகியவை ஜடேஜா பெயரில் உள்ளது. இந்த தகவல் தற்போது வைரலாகியுள்ளது. IPLஇல் CSK அணிக்காக விளையாடும் அவரை, தளபதி என ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 150 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (செப்.6) கடைசி நாளாகும். இதில், மருத்துவ அதிகாரி (30 இடங்கள்), செவிலியர் (32), சுகாதார ஆய்வாளர் (12), உதவிப்பணியாளர் (66) உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன. இதற்கு https://chennaicorporation.gov.in/gcc/என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து நாளை மாலைக்குள் ரிப்பன் மாளிகையில் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அலுவலகத்தில் இருந்து செல்வோர், வயதானவர்கள் பாதுகாப்பாக வீட்டுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெளியில் செல்வோர் குடையை மறக்காமல் எடுத்து செல்லுங்கள்.
மத்திய இணையமைச்சர் ஷோபா மீதான அவதூறு வழக்கு ரத்தானது. பெங்களூரு ராமேஸ்வரம் குண்டுவெடிப்புக்கு தமிழர்கள் காரணம் என அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். அவரது பேச்சுக்கு எதிராக 4 பிரிவுகளில் தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை HC-இல் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிமன்ற அறிவுறுத்தலின் படி, அவர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கோரியதால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.