India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தன்னிடம் யாரும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதில்லை என்று நடிகை ப்ரியாமணி தெரிவித்துள்ளார். மலையாள நடிகைகள் அடுத்தடுத்து தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, தனக்கு அதுபோல கசப்பான அனுபவம் ஏற்பட்டதில்லை, யாரும் தன்னிடம் பாதிக்கப்பட்ட கதையை சொன்னதில்லை என்றும், மலையாளத்தை போல பிற மொழிகளிலும் கமிட்டி அமைத்தால் நல்லதென்றும் தெரிவித்தார்.
முகூர்த்த நாளான இன்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100 டோக்கன்களுக்கு பதில் 150 டோக்கன்களும், 2 சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 200 டோக்கன்களுக்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படும். இன்று அதிக அளவில் பத்திரப்பதிவு செய்யப்படும் என்பதால், மக்களின் கோரிக்கையை ஏற்று இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பேரிடருக்கு பிறகு, யூடியூப் பலருக்கும் வாழ்வாதாரமாக மாறியுள்ளது என்றே சொல்லலாம். இந்த சூழலில், படைப்பாளிகளின் Content திருடப்படுவதை தடுக்க யூடியூப் பல்வேறு அம்சங்களையும், விதிமுறைகளையும் உருவாக்கி வருகிறது. அந்த வகையில், AI டெக்னாலஜி மூலம் மற்றொருவரின் குரலை நகலெடுப்பதற்கான கட்டுப்பாடுகளை அந்நிறுவனம் உருவாக்கி வருகிறது. இது விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள கோர்ட்டுகளில் 16 லட்சம் வழக்குகள் தேக்கம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. RTI சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவலில், இந்த விவரம் தெரிய வந்துள்ளது. மேலும், கிரிமினல் வழக்குகளை விட, சிவில் வழக்குகளே அதிகம் தேக்கமடைந்து இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. வழக்குகள் அதிகரிக்கும் நிலையில், போதிய நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் இல்லாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
புதுக்கோட்டை அருகே சின்னையா சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபட்டால் புத்திரதோஷம் தீரும் என்பது ஐதீகம். குழந்தைபேறு இல்லாதவர்கள் காசி யாத்திரை சென்று, 3 நாள்கள் கங்கையில் நீராடி விஸ்வநாதர், விசாலாட்சியைத் தரிசித்தால் தோஷம் நீங்கும். ஆனால், அதற்கான வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அதே பலன் கிடைக்கும் என ஆன்மிக பெரியவர்கள் கூறுகின்றனர். Share it.
நாடு முழுவதும் விருப்ப அடிப்படையில், Credit கார்டு வழங்கும் நிறுவனத்தை தேர்வு செய்யும் வசதி இன்று முதல் அமலுக்கு வருகிறது. தகுதி வாய்ந்த வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி, Master, Rupay, Visa என எந்த நிறுவன Credit கார்டையும் விண்ணப்பிக்கும்போதே தேர்வு செய்யலாம். புதிதாக விண்ணப்பிப்பவர்கள் மட்டுமின்றி, ஏற்கெனவே Credit கார்டு வைத்திருப்போரும் அதனை புதுப்பிக்கும்போது நிறுவனத்தை மாற்றிக்கொள்ளலாம்.
பாஜக வளர்ச்சியை தடுக்கவே திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் இருக்குமா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், DMK வோடு பல பிரச்னைகள், கோபம் இருக்கிறது என்று கூறினார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை ரகசியமாக சந்திக்கவில்லை, பாமகவோடு இணையும் திட்டமில்லை என்றும் வேல்முருகன் குறிப்பிட்டார்.
விஜய் டிவியில் பிக் பாஸை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு ₹50 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸை முன்பு தொகுத்து வழங்கிய கமல், படங்களில் நடிக்க இருப்பதை சுட்டிக்காட்டி விலகினார். இதையடுத்து, கமல்ஹாசனுக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். கமலுக்கு ₹120 கோடி சம்பளம் தரப்பட்டதாக கூறப்படுகிறது.
விஜய் கட்சி குறித்த கேள்விக்கு No கமெண்ட்ஸ் என திமுக பதில் அளித்துள்ளது. விஜய் கட்சியின் மாநாட்டுக்கு இன்னும் காவல் துறை அனுமதி தரவில்லை. இதை சுட்டிக்காட்டி, விஜய் கட்சியை கண்டு திமுக பயப்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில், திமுக மூத்த தலைவர் RS பாரதி, No கமெண்ட்ஸ் என கூறியுள்ளார். எதிர்காலத்தில் பாஜகவோடு மீண்டும் திமுக கூட்டணி வைக்க சாத்தியம் இல்லை, இது சத்தியம் என்றும் தெரிவித்தார்
பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் சூழலில், வாகனங்கள் ஓட்டும்போது கவனமாக இருப்பது அவசியமாகிறது. *வெளிச்சம் குறைவாக இருப்பதால் ஹெட்லைட் எரியவிட்டு வாகனம் ஓட்டினால், எதிரில் வருபவர் நம்மை அடையாளம் காண முடியும். *காரில் பயணிப்பவர்கள் வைப்பர் இயக்கத்தில் உள்ளதா என்பதை சோதித்துக் கொள்ள வேண்டும். *சாலை வழுக்க வாய்ப்புள்ளதால், இயல்பை விட மழை காலத்தில் வேகம் குறைவாக பயணிக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.