India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
15 கோடி 2G வாடிக்கையாளர்கள், 4G-க்கு மாற விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் இன்னும் சுமார் 20 கோடி பேர் வரை 2G சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 5 கோடி பேர் வரை 4G-க்கு மாற வாய்ப்புள்ளது என்றும், எஞ்சிய 15 கோடி பேர் மாற வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 4G மொபைல் விலை, மாதாந்திர கட்டணம் ஆகியவை அதிகம் என அவர்கள் கருதுவதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்தியா வரும் முதலீட்டை எதுவும் நிறுத்த முடியாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தனியார் முதலீடு செய்யாத துறையே இல்லை. விண்வெளி, பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளிலும் தனியாரை இந்தியா அனுமதித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் சிவப்பு கோடு இல்லை, சிவப்பு கம்பள விரிப்பு வரவேற்பே முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
* தன் உரிமைகளை கோருபவர்கள், என்றும் தன் கடமையை மறக்கக் கூடாது *உலகில் இரண்டே மனிதர்கள்தான் உள்ளனர். ஒன்று, வேலை செய்பவர்கள். இரண்டு, அதற்கான மரியாதையை ஏற்றுக் கொள்ள முன்வருபவர்கள் * எதிர் கேள்வி கேட்பதே மனித முன்னேற்றத்திற்கான அடிப்படை
* கல்வி கற்பதும், கற்பிப்பதும் மிகவும் முக்கியம். அதேநேரத்தில் சிறந்த மனிதனை உருவாக்குபவையாக அவை அமைய வேண்டும். SHARE IT.
2012இல் இங்கிலாந்து, இந்தியாவில் சுற்று பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி 2-1 என்ற கணக்கில் வென்றது. அதன்பிறகு கடந்த 12 ஆண்டுகளாய் இந்திய அணி உள்நாட்டில் டெஸ்ட் தொடரை இழந்ததில்லை. 18 தொடர்களில் விளையாடி 18-லிலும் வென்றுள்ளது. ஆனால் புனே டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் இந்திய மண்ணில் 12 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடர் வென்ற அணி என்னும் பெருமையை பெரும்.
உயிர்வாழ மனிதன் காற்றை சுவாசிப்பது மிகவும் அவசியமாகும். அதுபோல ஒரு மனிதன், ஒரு நிமிடத்திற்கு, ஒரு நாளைக்கு எத்தனை முறை சுவாசிக்கிறான் என மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதைத் தெரிந்து கொள்வாேம். ஆரோக்கியமான மனிதன் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 12- 20 முறை சுவாசிக்கிறான் என்றும், இதை வைத்து கணக்கிட்டால் 17,000 முதல் 28,800 முறை வரை சுவாசிக்கிறான் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்குவதால், அங்கும் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஈரோடு மாவட்டத்தில் மழை காரணமாக 22ஆம் தேதி விடுமுறை விடப்பட்டதை ஈடுசெய்யும் வகையில், இன்று பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய திருக்குறள் மற்றும் அதற்கான விளக்க உரையை காணலாம்.
* குறள்: வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு, யாண்டும் இடும்பை இல.
* விளக்க உரை: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
SHARE IT.
இஸ்ரேல் விமானம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 200 பாலஸ்தீனர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஜெபலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் போர் விமானம் திடீரென குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் முகாம் கட்டிடம் தரைமட்டம் ஆனது. இதனால் அங்கு இருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 200 பேரும் பலி ஆகி இருக்கலாம் (அ) படுகாயம் அடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
போருக்கு தயாராகும்படி ராணுவத்துக்கு ஈரான் மதத் தலைவர் கோமெனி உத்தரவிட்டுள்ளார். ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி காெடுப்போம் என இஸ்ரேல் தெரிவித்து வருகிறது. அப்படி பதிலடி கொடுத்தால் மீண்டும் தாக்குவோம் என ஈரான் மிரட்டி வருகிறது. அப்போது இஸ்ரேல் மீது ஒரே நேரத்தில் 1,000 ஏவுகணைகளை ஈரான் ஏவக்கூடும் என்றும், ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி, ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதல் நடத்துவர் எனக் கூறப்படுகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தொடர்ந்து சொதப்பி வருகிறார். கடந்த 10 இன்னிங்ஸ்களில் மொத்தம் 266 ரன்களையே எடுத்துள்ளார். ஒரு சதம் கூட விளாசவில்லை. நியூசிக்கு எதிரான முதல் டெஸ்டில் அடித்த 70 ரன்களே கடந்த 10 இன்னிங்ஸ்களில் அதிகபட்ச ரன் ஆகும். இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான கோலி, இதுபோல் சொதப்புவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.