India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹிப் ஹாப் ஆதி நடித்து, இயக்கியுள்ள ‘கடைசி உலகப் போர்’ திரைப்படம் செ.20ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. போர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் நாசர், நட்டி, தலைவாசல் விஜய் உள்ளிடோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யாரெல்லாம் வெயிட்டிங் கமண்டல சொல்லுங்க.
நாட்டில் விரைவில் 10 வந்தே பாரத் ரயில்கள் விடப்பட உள்ளன. நாடு முழுவதும் அதிவேக ரயில்களான வந்தே பாரத்தை விடும் பணிகள் துரித கதியில் நடக்கின்றன. அந்த வரிசையில் வருகிற 15ம் தேதி 10 புதிய வந்தே பாரத் ரெயில்கள் தொடங்கி வைக்கப்பட உள்ளன. ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த ரெயில்களை PM மோடி தொடங்கி வைக்கிறார். இந்த ரயில்கள் வாரணாசி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன.
மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி வருவதாக, ISRO எச்சரித்துள்ளது. ‘அபோபிஸ்’ என்ற இந்த விண்கல், 2029 ஏப்ரல் 13இல் பூமியை தாக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் அளவுக்கு பெரிதாகவும், INS விக்ராந்த் கப்பல் போன்ற தோற்றமும் கொண்ட இந்த விண்கல் பூமியிலிருந்து 32,000 KM தொலைவில் உள்ளது. இதுபோன்ற பெரிய விண்கல், இதுவரை பூமிக்கு அருகில் வந்ததில்லை எனக் கூறப்படுகிறது.
மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், 2009ஆம் ஆண்டு பதிவு செய்த எங்களின் திருமண பதிவை ரத்து செய்து, ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெற்று தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனு அக்டோபர் 10ஆம் தேதி விசாரணைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 தேர்தல் நியாயமாக நடந்திருந்தால் பாஜக 240 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது என ராகுல் காந்தி கூறியுள்ளார். அமெரிக்காவில் கலந்துரையாடலில் பங்கேற்ற அவர், பாஜக விரும்பியதை எல்லாம் தேர்தல் ஆணையம் செய்ததாகக் குறிப்பிட்டார். நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக அமைப்புக்களையும் பாஜக தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, இந்தியாவில் 2024 தேர்தலை நடத்தியதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார். உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாக சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. குழந்தைகள் மைதானத்தில் விளையாடுவதை ஊக்குவிக்கவும், நண்பர்கள் வட்டத்தை உருவாக்கும் வகையிலும் இந்த சட்டம் நடப்பு ஆண்டிலேயே நடைமுறைக்கு வரும் என PM அந்தோணி அல்பானீஸ் அறிவித்துள்ளார். இந்த சட்டம் குறித்து உங்களோட பார்வை என்ன? கமெண்டல சொல்லுங்க.
TNPSC, SSC, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எழுத இருப்போருக்கு இலவச பயிற்சிகளை தமிழக அரசு வழங்கவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மாநில கல்லூரி வளாகம், வண்ணாரப்பேட்டை சர் தியாகராய கல்லூரி வளாகம் ஆகிய இடங்களில் இந்த பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கு 10ம் வகுப்புத் தேர்ச்சி, 18 வயது ஆகியவை தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. www.cecc.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கனமழையால் தெலுங்கு மாநிலங்களின் பல பகுதிகளில் வெள்ள நீரில் சிக்கி, மக்கள் அவதிப்பட்டு வருவது தெரிந்ததே. இந்நிலையில், மக்களின் துயரத்தைப் போக்க நடிகர் சிம்பு தனது பங்களிப்பாக ₹6 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். தெலுங்கானா & ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ₹3 லட்சம் வழங்குவதாக கூறியுள்ளார். டோலிவுட்டிக்கு வெளியே இருந்து நிதி வழங்கிய ஒரே நடிகர் சிம்பு என்பது கவனிக்கத்தக்கது.
வி.சி.க மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்குமா? என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும் என அதிமுக EX அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். வி.சி.க மது ஒழிப்பு மாநாடு நடத்துவது வரவேற்கத்தக்கது என்றும், அதிமுக தவிர்க்க இயலாத மாபெரும் அரசியல் கட்சி என்பதால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருமாவளவனின் அதிமுக அழைப்பு, திமுக கூட்டணியில் நெருடலை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.