India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகர்கோவில் அருகே உள்ள கேரளபுரம் என்ற கிராமத்தில் அதிசய விநாயகர் கோயிலில், விநாயகரின் சிலை 6 மாதத்திற்கு ஒரு முறை நிறம் மாறுகிறது. மார்ச் – ஜூனில் விநாயகர் கருப்பாகவும், ஜூலை – பிப்ரவரியில் விநாயகர் வெள்ளை நிறமாகவும் மாறுகிறார் என கூறப்படுகிறது. மேலும், கோயில் கிணற்றின் நீர், விநாயகர் வெள்ளையாக இருக்கும் போது கருப்பாகவும், விநாயகர் கருப்பு நிறமாக இருக்கும்போது வெள்ளை நிறமாகவும் மாறுகிறதாம்.
ADMK கூட்டணியில் இல்லை என உறுதிபட தெரிவித்துள்ள கிருஷ்ணசாமி அப்படி ஒரு கூட்டணி இருக்கிறதா என கிண்டல் செய்துள்ளார். விஜய்யின் மதுரை மாநாடு நல்ல எழுச்சி என புகழாரம் சூட்டினார். மேலும், அங்கிள் என கூறியது தவறு என்றால் டாடி, BRO என கூறுவது சரியா என கேள்வி எழுப்பினார். அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த புதிய தமிழகம் வரும் தேர்தலில் தவெகவுடன் இணையலாம் என பேசப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
சிலரின் அரசியல் ஆதாயத்துக்காக நாடாளுமன்றத்தை முடக்குவது நல்லதல்ல என அமித்ஷா தெரிவித்துள்ளார். சட்டசபை சபாநாயகர்கள் மாநாட்டில் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் விவாதங்கள் குறைந்தால் தேசத்தின் வளர்ச்சியில், அதன் பங்களிப்பு பாதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் நிதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்த அவர், ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் அவையை நடத்த அனுமதிக்காமல் இருப்பது நல்லதல்ல என தெரிவித்தார்.
வாக்குரிமையை உறுதி செய்ய வலியுறுத்தி பிஹாரில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரையில், வரும் 27-ம் தேதி CM ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், பிஹாருக்கு தமிழக CM வருவதால் என்ன மாற்றம் இங்கு நிகழ்ந்துவிட போகிறது? அவரின் வருகையால் பிஹார் முன்னேறிவிடுமா என பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹார் பிரச்னைகளுக்கு இங்குதான் தீர்வு காண முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
விஜய்சேதுபதியின் நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘உப்பெனா’ என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் கீர்த்தி ஷெட்டி அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நடிகையாக உயர்ந்த அவர், தமிழிலும் இப்போது பிஸியாக உள்ளார். இதற்கு இடையில் இன்ஸ்டாவில் தனது ரசிகர்களை குஷிப்படுத்துவதை கீர்த்தி மறப்பதில்லை. சமீபத்தில் முகத்தை செல்போனால் மறைத்தபடி, அவர் பகிர்ந்துள்ள செல்பி போட்டோக்களால் இளசுகள் சொக்கிப்போயுள்ளனர்.
ஆணவ கொலைக்கு எதிரான சட்டத்தை திமுக கொண்டுவர வேண்டும் என இயக்குநர் அமீர் வலியுறுத்தினார். மேலும், திமுகவை எதிர்த்துதான் பொதுவாழ்க்கைக்கு வந்ததாக குறிப்பிட்ட அமீர், இன்றைய காலகட்டத்தில் திமுகவை ஆதரிக்க வேண்டிய நிலை உள்ளதாக கூறியுள்ளார். சனாதனத்தை எதிர்த்து போராட வேண்டிய தேவை உள்ளதால் திமுக தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி ஆம்னி பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். 27-ம் தேதி ஒருநாள் விடுமுறையாக இருந்தாலும், மேலும் 2 நாள் விடுப்பு எடுத்து சொந்த ஊர்களுக்கு பயணிக்க பலர் தயாராகிவிட்டனர். இதைப் பயன்படுத்தி சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பஸ்களில், 3 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
1952 – நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் பிறந்தநாள்
1994 – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பிறந்தநாள்
1998 – தனுஷ்கோடி அருகே அகதிகளின் படகு கவிழ்ந்ததில் 45 பேர் பலி
2012 – நிலவில் முதன்முதலாக கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் நினைவு நாள்
மதராஸி படம் தன் மனதுக்கு நெருக்கமான படம் என்று நடிகை ருக்மினி வசந்த் தெரிவித்துள்ளார். தனக்கு தொடக்க காலத்திலேயே, அன்பை அள்ளிக்கொடுக்கும் தமிழ் ரசிகர்களுக்கு நன்றி எனவும், மதராஸி இசை வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார். தனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் முருகதாஸுக்கு நன்றி சொல்லிய அவர், தான் SK-வின் certified ஃபேன் கேர்ள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
▶ ஒட்டுமொத்த உலகமும் மவுனம் காக்கும் போது, ஒரே ஒரு குரல்கூட சக்திவாய்ந்ததாக மாறும். ▶ ஒரு குழந்தை, ஒரு பேனா, ஒரு புத்தகம் ஆகியவை உலகையே மாற்றும். ▶ நாம் அமைதியாக இருக்கும்போதுதான் நமது குரலின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். ▶ என்னால் மட்டுமே என் வாழ்க்கையை மாற்ற முடியும். ▶ பெண்கள் கல்வியைப் பெற வேண்டும் என்றால், அவர்கள் சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.