India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
IND டெஸ்ட் அணியில் அஸ்வின் வாரிசாக வாஷிங்டன் சுந்தரை கருதக்கூடாது என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். NZ எதிரான 2வது டெஸ்டில் சுந்தர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் இது ஒரு போட்டி மட்டுமே. அஸ்வினின் வாரிசாக தன்னை நிரூபிக்க அவர் இன்னும் நிறைய மேட்ச் வின்னிங் பெர்ஃபார்மென்ஸ்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற அவர், அஸ்வினுக்கு மாற்றாக இன்னொரு வீரரை கண்டுபிடிப்பது எளிதல்ல எனத் தெரிவித்துள்ளார்.
சென்செக்ஸ் ஒரே மாதத்தில் 6,600 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டுமென நிபுணர்கள் கூறுகின்றனர். சந்தை மேலும் சரிய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கின்றனர். அதே நேரம், சந்தை சரிவை பயன்படுத்தி நல்ல நிறுவனங்களின் பங்குகள் குறைந்த விலையில் கிடைக்கும்போது சிறுக சிறுக வாங்கவும் பரிந்துரைக்கின்றனர்.
ரயில் பயணம் இனிமையானது என்றாலும், அதில் ஆபத்துகளும், அசம்பாவிதங்களும் அதிகம். தண்டவாளத்தில் கால் மாட்டிக் கொள்வது, கொள்ளையர்கள் புகுவது, நமது சீட்டில் வேறு நபர்கள் அமர்ந்து எழ மறுப்பது, ரயிலில் இருந்து கீழே விழுவது, நகைகள் ஜன்னல் வழி விழுவது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கலாம். இதுபோன்ற சமயங்களில் 139 என்ற எண்ணுக்கு கால் செய்து விஷயத்தை சொன்னால் போதும். 5 நிமிடத்தில் நமக்கு உதவ போலீஸ் வந்துவிடும்.
‘The Arrangements of Love’ நாவலை மையமாகக் கொண்டு உருவாகிவந்த ‘சென்னை ஸ்டோரி’ என்ற ஹாலிவுட் படத்தில் இருந்து நடிகை ஸ்ருதிஹாசன் திடீரென்று விலகியுள்ளார். பாப்டா விருது பெற்ற இயக்குநர் பிலிப் ஜான் திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்தது பிடிக்காததால், அவர் விலகியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமந்தாவைத் தொடர்ந்து ஸ்ருதியும் இப்படத்தில் இருந்து விலகியதால் வேறு நடிகையை படக்குழு தேடி வருகிறது.
விஜய் மாநாட்டை முன்னிட்டு, திமுகவை விமர்சிக்கும் வகையில் விக்கிரவாண்டியில் போஸ்டர்கள் ஒட்டப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, “அக்., 27ல் மன்னராட்சிக்கு முடிவு”; தளபதியால் மக்கள் ஆட்சிக்கு விடிவு”. “நீங்கள் மட்டுமே நடமாடும் முதல்வர், விடியா அரசை வீழ்த்த விக்கிரவாண்டிக்கு அழைக்கிறார்” என்ற வாசகங்கள் கொண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதனை பார்த்த உடன்பிறப்புகள் டென்ஷனில் உள்ளனர்.
கடாயில் நெய் விட்டு சூடானதும் கடுகு, கடலை, உளுந்து போட்டு தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம், பச்சைப் பட்டாணி, கேரட், பீன்ஸ், ப.மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். இதில், ஒரு கப் வரகரிசி போட்டு இரு கப் நீர் ஊற்றவும். நன்றாக கொதித்ததும் உப்பு, கறிவேப்பிலை, மல்லி, மஞ்சள் & பெருங்காயம் சேர்த்து பாத்திரத்தை மூடி, அடுப்பை சிம்மில் வைக்கவும். 10 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான வரகரிசி உப்புமா ரெடி.
தமிழக கவர்னர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், அடுத்த கவர்னராக வி.கே. சிங் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த எச். ராஜா, “அனைவரும் ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கணும். பஞ்சாபை போல தமிழகமும் நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள மாநிலம். இங்கு பிரிவினைவாத சக்திகள் அதிகம். இதை அடக்குவதற்கு, ரவி போன்ற ஒரு கவர்னர்தான் இருக்க வேண்டும்” எனக் கூறினார்.
சபரிமலை செல்லும் பக்தர்கள் விமானத்தில் செல்லும்போது நெய், தேங்காய் அடங்கிய இருமுடி பைகளைக் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருமுடி பைகளை 2025 ஜன. 20ஆம் தேதி வரை எடுத்துச் செல்ல சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரம், எக்ஸ்ரே, இடிடி மூலம் இருமுடி தேங்காய் பைகள் ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே பக்தர்கள் எடுத்து செல்ல முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
➤ரஷ்யா மீது செர்பியா பொருளாதார தடைகளை விதிக்காது என்று அந்நாட்டு அதிபர் வூசிக் தெரிவித்தார். ➤பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ➤கமோரா போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் லூய்கி கொலம்பியாவில் கைதானார். ➤ஜப்பானில் தொடர்ந்து 153ஆவது நாளாக வெயில் 25°C-ஐ தாண்டியது. ➤ஈரான் ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.
நீரிழிவு நோய்க்கு மூலக்காரணமான ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த ஆற்றலைக் கொண்ட பானமாக ஜப்பான் சுகாதாரத்துறையால் அங்கீகரிக்கப்பட்டது கொய்யா இலை தேநீர். கொய்யா இலைகள், மஞ்சள், சுக்கு, ஏலக்காய் (சிட்டிகை) ஆகியவற்றை நீரில் கலந்து, 10 நிமிடங்கள்
கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மணமிக்க சுவையான கொய்யா இலை தேநீர் ரெடி. இந்த டீயை பருகுவதால் LDL கொலஸ்ட்ரால் அளவும் குறையும் எனக் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.