India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மூடநம்பிக்கை கருத்தை மாணவரிடம் பரப்பும் விதமாக பேசியதற்காக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு, ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இதே போல் போலீசார் மகாவிஷ்ணுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க தாக்கல் செய்யப்பட்ட மனுவும் அதே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இன்று முதல் 23ம் தேதி வரை நடக்கிறது. 11 சுற்றுகள் நடைபெறும் இப்போட்டியில், ஓபன் பிரிவில் 197 அணிகளும், பெண்கள் பிரிவில் 184 அணிகளும் பங்கேற்கின்றன. இந்திய சார்பில் ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா, குகேஷ், அர்ஜூன் எரிகைசி, விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா பென்தலா ஆகியோர் உள்ளனர். கடந்த முறை இந்திய அணி இரு பிரிவிலும் வெண்கலப் பதக்கத்தை வென்றது.
சர்வதேச சந்தையில் <<14072983>>Crude Oil விலை<<>> தொடர்ந்து சரிந்து வருகிறது. அதே நேரம், இந்தியாவில் Petrol, Diesel விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. Crude Oil விலை உயரும் போது, உடனடியாக Petrol விலையை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள், விலை குறையும் போது Petrol விலையை குறைக்காதது ஏன்? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அவற்றின் விலையை குறைக்க அரசும் முனைப்பு காட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனது ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி பிரிவை அறிவித்ததாக அவரது மனைவி ஆர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மனைவியை விவாகரத்து செய்வதாக ஜெயம் ரவி நேற்று முன்தினம் அறிவித்தார். இது குறித்து கருத்து கூறிய ஆர்த்தி, ரவியிடம் மனம் விட்டு பேச பல முறை முயற்சித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடன் ஆலோசிக்காமல் சொந்த விருப்பத்தை சார்ந்து, அவராகவே முடிவெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
1) திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும்? 2) போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ? 3) தமிழகத்தின் முதல் பெண் கவர்னர் யார்? 4.ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது? 5) குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார்? 6) தக்காளியின் பிறப்பிடம் எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
‘கோலி இந்திய அணியில் உள்ள ஆஸ்திரேலியர்’ என ஆஸி. வீரர் சுமித் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி வீரர்களை போல கோலியின் சிந்தனையும், செயல்பாடும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கோலி மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதை காட்டிலும், மிக நல்ல மனிதர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். நவம்பரில் ஆஸி. செல்லும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்தில் ஒருவருக்கு ₹15 லட்சம் வரை தனிநபர் கடன் (PL) வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிறுதொழில், வியாபாரம் செய்ய இக்கடன் அளிக்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வட்டி விகிதம் 7% – 8% வரை என்றும், கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் 3 முதல் 5 ஆண்டுகள் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. கூட்டுறவு வங்கிகள், டாப்செட்கோ இணையதளம் உள்ளிட்டவற்றில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
வியட்நாம் நாட்டை தாக்கிய யாகி சூறாவளியில் சிக்கி இதுவரை 140 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த 7ஆம் தேதி மணிக்கு 149 கிமீ வேகத்தில் வீசிய இந்த சூறாவளி காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்தனர். வியட்நாமை தாக்குவதற்கு முன்பு, சீனா மற்றும் பிலிப்பைன்சில் இந்த சூறாவளி புயல் தாக்கியதில் 24 பேர் பலியானார்கள்.
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று ₹280 அதிகரித்துள்ளது. கடந்த 4 நாள்களாக தங்கம் விலை மாற்றமில்லாமல் இருந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ₹280 உயர்ந்து ₹53,720ஆக விற்கப்படுகிறது. 1 கிராம் தங்கம் விலை இன்று ₹35 உயர்ந்து ₹6,715ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி விலை கிலோவுக்கு ₹500 உயர்ந்து, ₹91,500க்கு விற்கப்படுகிறது. SHARE IT
USA அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ABC ஊடக தரவுகள்படி, டிரம்பை 44% பேரும், கமலா ஹாரிஸை 47% பேரும் ஆதரித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், டிரம்ப் முன்னிலை வகித்தார். ஆனால், தற்போது களம் மாறி இருப்பதாக இந்த முடிவுகள் காட்டுகின்றன. 50 மாகாணங்களில் 7இல் கடும் போட்டி நிலவும் எனக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.