India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இப்போது, பலருக்கும் இருக்கும் முக்கிய பிரச்னையே எந்த ஒரு விஷயத்திலும் Focus பண்ண முடியாமல் தொடர்ந்து தடுமாறுவது தான். ஆனால், 2 வாரம் இண்டெர்நெட் பயன்படுத்தாமல் இருந்தால், உங்கள் மூளை 10 ஆண்டுக்கு முன்பு எப்படி செயல்பட்டதோ அதே புத்துணர்ச்சியுடன் செயல்படும் என ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். Texas யூனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். ட்ரை பண்ணி பாருங்க!
IPL தொடரில் SRH மோசமான ரெக்கார்டை படைத்துள்ளது. IPL-ல் அந்த அணி மொத்தமாக இதுவரை 100 தோல்விகளை சந்தித்துள்ளது. இந்த நிலைக்கு தள்ளப்பட்ட 7-வது டீம் SRH. இந்த பட்டியலில், டெல்லி & பஞ்சாப் தலா 137 முறையும், RCB (132), KKR (125), மும்பை (121), ராஜஸ்தான் (113) மற்றும் CSK (105) முறையும் தோல்வி அடைந்துள்ளன.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சுந்தர்.சி – வடிவேலு காம்போவில் வெளிவந்துள்ள ‘கேங்கர்ஸ்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக வடிவேலு காமெடியில் மிரட்டி இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர். இந்த சம்மருக்கு இந்த படம் தான் பெஸ்ட் என்றும், Second Half-ல் சுந்தர்.சி-யின் Trademark காமெடி பிளாஸ்ட் என்றும் பதிவிடுகின்றனர். நீங்க படம் பாத்தாச்சா.. எப்படி இருக்கு?
கொச்சியை சேர்ந்த ஆல்பி ஜார்ஜ் உள்ளிட்ட 11 பேர் ஸ்ரீநகர் சென்றிருந்தனர். பின்னர் அங்கிருந்து செவ்வாய்க்கிழமை பஹல்காம் செல்கையில், சாலையோர கடையில் பிரைட் ரைஸ் சாப்பிட்டனர். அதில் உப்பு அதிகம் இருந்ததால், புதிய உணவு தயாரிக்க 1 மணி நேரம் காத்திருந்தனர். அந்த நேரத்தில்தான் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். கடையில் நேரம் தாமதப்படாமல் பஹல்காம் சென்றிருந்தால், அவர்களும் உயிரிழந்திருப்பர்.
பணத்தை மிச்சம் செய்ய 18 கேரட் நகைகளை வாங்க நுகர்வோர் ஆர்வம் காட்டி வருவதாக MJDTA தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார். 22 கேரட் நகைகளுடன் ஒப்பிடுகையில் 18 கேரட் நகைகள் சவரனுக்கு ₹14,000 வரை குறைவாகக் கிடைக்கின்றன. இதில், சேதாரம் குறைவு, பளபளப்பு, உறுதித்தன்மை அதிகம். ஆனாலும், இந்த நகைகளில் 75% மட்டுமே தங்கம், மீதி அலாய்(உலோக கலவை) என்பதால் மறுவிற்பனை மதிப்பு குறையும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பஹல்காமில் மற்றொரு சோகக்கதையும் நிகழ்ந்துள்ளது. UAE-ல் வசிக்கும் ராஜஸ்தானை சேர்ந்த நீரஜ் உத்வானியும் (33) இந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இவருக்கு 2 ஆண்டுகள் முன்னர் தான் திருமணம் நடந்துள்ளது. மனைவியுடன் இந்தியா வந்தவர், காஷ்மீரில் கொல்லப்பட்டுள்ளார். இவரின் தந்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட, தற்போது நீரஜ்ஜின் தாயார் மற்றும் மனைவி மீளா துக்கத்தில் மூழ்கியுள்ளனர்.
புதிதாக ஏ.சி வாங்க போனால், முதலில் அது எத்தனை Ton என்ற கேள்வியே பெரிதாக எழும். 1 Ton என்றால், 1000 கிலோ எடை கொண்டதா? என்ற கேள்வி எழும். ஆனால், இந்த Ton ஏ.சி.யின் எடையை குறிப்பதில்லை. ஏ.சி.யின் Ton என்ற சொல் அதன் குளிரூட்டும் திறனைக் குறிக்கிறது. ஏ.சி மாட்டப்படும் இடத்தை வைத்து இந்த Ton வகையை வாங்கலாம். பெரிய இடம் என்றால், 2 Ton ஏ.சி. சிறிய இடம் என்றால் 1 Ton ஏ.சி.யே போதும்.
பிரபல ஹாலிவுட் நடிகரும், பாடி பில்டருமான டேமியன் ஸ்டோன் (32) உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மால்டோவில் பிறந்த இவர், தனது நேர்த்தியான நடிப்பு, உடலமைப்பால் பலரையும் கவர்ந்தார். தன்பாலின ஈர்ப்பாளராக அறியப்பட்ட இவர், சில ஆபாச படங்களிலும் நடித்துள்ளார். USA-வின் பென்சில்வேனியாவில் வசித்து வந்த இவர் 3 முறை பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #RIPDamienStone
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-சை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓபிஎஸ், அவரின் 2 மகன்களை நேற்று சீமான் சந்தித்துப் பேசினார். எதற்காக 3 பேரையும் அவர் திடீரென சந்தித்தார் என்றத் தகவல் இல்லை. இதுகுறித்து பேட்டியளித்துள்ள சீமான், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்று கூறியுள்ளார்.
‘மூக்குத்தி அம்மன் 2’ படப்பிடிப்பின்போது நயன்தாராவுடன் மோதல் என பரவிய செய்திக்கு படத்தின் இயக்குநர் சுந்தர்.சி பதிலளித்துள்ளார். நயன்தாரா மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் நடிகை எனக் குறிப்பிட்ட சுந்தர்.சி, தனக்கும் அவருக்கும் எந்த பிரச்னையும் இல்லை என விளக்கமளித்துள்ளார். இதுபோன்று வெளியாகும் கிசுகிசுகளுக்கெல்லாம் பதில் அளித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.