India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரேஷன் கடைகள் நாளை (ஞாயிறு) திறந்திருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வருகிற 31ஆம் தேதி தீபாவளி ஆகும். அதனை முன்னிட்டு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை தங்குதடையின்றி மக்கள் வாங்க ரேஷன் கடைகள் நாளை திறந்திருக்கும் என்றும், அதற்கு பதிலாக நவம்பர் 16இல் அக்கடைகளுக்கு விடுமுறை நாள் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
சனி பகவான் அருள் பெற சாதத்தில் சிறிதளவு தயிர் கலந்து பிசைந்து, கருப்பு எள் சேர்த்து உருண்டைகளாக உருட்டி காகத்திற்கு வைத்துவிட்டு சாப்பிடுவது சனி தோஷத்தை நீக்கும். அதேபோல், கருப்பு துணிக்குள் ஒரு ரூபாய் நாணயம் வைத்து, கல்லுப்பு போட்டு, கிழக்கு பார்த்து நின்று 7 முறை திருஷ்டி கழியுங்கள். இதை 21 சனிக்கிழமை செய்தால் துரதிர்ஷ்டங்கள், சனி தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். SHARE IT
பெண்களின் ஜாதகத்தில் 8ஆம் வீட்டில் ராகு இருந்தால் அதனை மாங்கல்ய தோஷம் என்று சாஸ்திரம் கூறுகின்றது. அத்தகைய தோஷம் உள்ள பெண்கள், சனிக்கிழமை அதிகாலையில் நீராடி, விரதமிருந்து பெருமாள் கோயிலுக்கு சென்று விஷ்ணுவின் ‘சங்கர்சண’ அம்சமாக திகழும் கருடனுக்கு குங்கும அர்ச்சனை செய்து, மரிக்கொழுந்து மாலை சாற்றி, நெய் விளக்கேற்றி, ஸ்ரீகருட காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
நடிகர் சிம்பு ‘லப்பர் பந்து’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.. இந்நிலையில், இப்படத்தை பார்த்த சிம்பு படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆதாரில் எத்தனை முறை திருத்தம் மேற்கொள்ளலாம் என தெரிந்து காெள்வோம்.
* பெயர் – 2 முறை மட்டுமே திருத்த முடியும் * முகவரி – எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்தலாம் * பிறந்த தேதி – ஒருமுறை மட்டுமே திருத்தலாம் * பாலினம் – ஒருமுறை மட்டும் திருத்தலாம் * புகைப்படம் – எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம் * செல்போன் எண் – எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம். SHARE IT
மொபைல் அழைப்பு மூலம் மோசடி நடைபெறுவதை தடுக்க டிராய் அவ்வப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வரிசையில், +697 மற்றும் +698 எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் எச்சரிக்கையாக இருக்கும்படியும், உடனே அந்த எண்களை பிளாக் செய்துவிடும்படியும் வலியுறுத்தியுள்ளது. அப்படி செய்யவில்லையெனில் மோசடி, மிரட்டலுக்கு ஆளாக நேரிடலாம் எனவும் டிராய் எச்சரித்துள்ளது. SHARE IT.
காலையில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் பயன்களை தெரிந்து கொள்வோம்.
1) உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்
2) மலச்சிக்கலை போக்கி, செரிமானத்தை சீராக்கும்
3) அதிக ரத்த அழுத்தத்தை பீட்ரூட் ஜூஸ் குறைக்க வழிவகுக்கும்
4) சர்மத்தை பொலிவாக வைத்திருக்க உதவும்.
SHARE IT.
மொபைலிற்கு வரும் லிங்குகளை கிளிக் செய்யும்போது, அது நமக்கே தெரியாமல் மொபைலை முடக்கவும், பணத் திருட்டு போன்றவற்றுக்கும் வித்திடுவதாக NSA எச்சரிக்கிறது. இதேபோல் மர்ம செயலிகளும் பணத்தை திருடுகின்றன. இத்தகைய மோசடியில் தப்ப மொபைல் போனை வாரம் ஒருமுறை Reboot செய்ய NSA பரிந்துரைகிறது. அவ்வாறு செய்தால், மர்ம லிங்குகள், செயலிகள் செயல்படாது என NSA கூறுகிறது. SHARE IT.
இரவில் தங்களது அறைக்கு வருமாறு ஹீரோக்கள் அழைத்ததாக ஹிந்தி நடிகை மல்லிகா செராவத் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மர்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், அண்மையில் படப்பிடிப்புக்காக துபாய் சென்றபோது, அந்தப்பட ஹீரோ தனது அறை கதவை தட்டியதாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது, ஹிந்தி ஹீரோக்கள் சிலர் இரவில் அவர்களின் அறைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் மறுத்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் “டானா” தீவிர புயலுக்கு இடையே 2,201 கர்ப்பிணிகள் குழந்தை பெற்றிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. புயலையொட்டி 4,859 கர்ப்பிணிகள், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2,201 பேர் குழந்தை பெற்றெடுத்தனர். இதில் 18 ஜோடிகள் இரட்டை குழந்தை ஆகும். 1,858 குழந்தைகள் இயற்கையாக பிறந்ததாகவும், 343 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்ததாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.