India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தங்கம் விலை சவரனுக்கு ₹55 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ₹6,825, 1 சவரன் தங்கம் ₹54,600க்கும் விற்பனையானது. இன்று 1 கிராம் தங்கம் விலை ₹40 உயர்ந்து ₹6,865ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 1 சவரன் தங்கம் விலை ₹320 அதிகரித்து ₹54,920ஆக விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ₹2 உயர்ந்து ₹97க்கும், கிலோவுக்கு ₹2,000 உயர்ந்து ₹97,000க்கும் விற்கப்படுகிறது.
2014இல் உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக டைம் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டார் ‘பத்மஸ்ரீ’ முருகானந்தம். ஒரு காலத்தில் வசதி வாய்ந்த பெண்களுக்கான பொருளாக இருந்த நாப்கினை ஏழை பெண்களும் பயன்படுத்தும் வாய்ப்பை (₹2) இந்த Pad Man உருவாக்கியுள்ளார். இன்று உலகம் முழுவதும் உள்ள பெண்களின் சுகாதாரத்திற்காக தனது சொந்த கண்டுபிடிப்பான இயந்திரங்களை வழங்கி, உற்பத்தி முறைகளையும் கற்றுத் தருகிறார்.
தமிழகம் முழுவதும் TNPSC குரூப் 2 முதல்நிலைத் தேர்வு தொடங்கியுள்ளது. 2,327 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 2, 2ஏ தேர்வை TNPSC நடத்துகிறது. இதற்கான முதல்நிலை தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியுள்ளது. 7.93 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களுக்குள் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
6 மாதத்திற்கும் மேல் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய அளவில் படவாய்ப்பு இல்லாமல் அருண் விஜய் இருந்துள்ளார். இந்நிலையில் அவரை நடிகர் தனுஷ் அணுகி, தான் இயக்க இருக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்கக் கேட்டதாக கூறப்படுகிறது. ராயன் படத்தின் வெற்றியால் தனுஷின் மார்க்கெட் எகிறிப்போய் இருப்பதை அருண் விஜய் பார்த்துள்ளார். இதையடுத்து கதை கேட்காமலேயே நடிக்க ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
வெள்ளை சர்க்கரை ரத்தத்தில் உடனடியாக கலக்கும். நாட்டு சர்க்கரை மெதுவாக கலக்கும். அவ்வளவுதான். ஆனால், நாட்டு சர்க்கரை சாப்பிட்டால் சுகர் ஏறாது என்ற தவறான புரிதல் சர்க்கரை நோயாளிகளிடம் உள்ளது. அதனால் காபி, டீயில் 2, 3 ஸ்பூன் நாட்டு சர்க்கரையை கலந்து குடிக்கின்றனர். இது ஆபத்து என எச்சரிக்கும் மருத்துவர்கள், அரை ஸ்பூன் நாட்டு சர்க்கரையை மட்டுமே சர்க்கரை நோயாளிகள் எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கின்றனர்.
▶50/30/20 விதியைப் பயன்படுத்தி பட்ஜெட் போடுங்கள். 50% தேவைகளுக்கு, 30% விருப்பங்களுக்கு, 20% சேமிப்புக்கு. ▶செலவை அறிய, வாரந்தோறும் பட்ஜெட்டை சரிபார்க்க வேண்டும். ▶அத்தியாவசியம் இல்லாதவற்றுக்கு கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். ▶பொருட்களை வாங்குவதற்கு அவசர நிதியை பயன்படுத்த வேண்டாம். ▶ஒவ்வொரு மாதமும் முழுமையாகச் செலுத்தக்கூடிய தொகைகளுக்கு மட்டுமே கிரெடிட் கார்டை பயன்படுத்தவும்.
வேட்டையன் பாடல் வரும் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்த நிலையில், அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு ரஜினிகாந்தே காரணம் என்றும், அவர் கேட்டதாலேயே ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என்றும் கூறப்படுகிறது. விஜய் கட்சி மாநாட்டிற்கு பிறகு பாடல் ரிலீசை வைக்கலாம் என கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மாநாட்டில் விஜய் ஏதேனும் தன்னை மறைமுகமாக விமர்சித்தால் பதிலடி கொடுக்க ரஜினி திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி இன்று காஷ்மீரில் தேர்தல் பரப்புரை செய்யவுள்ளார். தோடாவில் நடக்கும் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். 1982க்கு பிறகு தோடா செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார். மொத்தமுள்ள 90 தொகுதிகளில் BJP 43 இடங்களில் போட்டியிடுகிறது. 370 சட்டப்பிரிவு ரத்துக்கு பிறகு நடக்கும் முதல் தேர்தல் இதுவாகும். 3 கட்டங்களாக தேர்தல் நடக்கும் நிலையில், செப்.18இல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அன்னபூர்ணா ஹோட்டல் அதிபர் மன்னிப்பு கேட்டது தொடர்பான வீடியோ வெளியானதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெட்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார். மதுஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு விசிக அழைப்பு விடுத்திருப்பது குறித்த கேள்விக்கு, திருமாவளவனே அதுகுறித்து விளக்கமளித்து விட்டார் என்று ஸ்டாலின் பதிலளித்தார்.
அமெரிக்க சுற்றுப்பயணம் வெற்றி அடைந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது தாம் 19 நிறுவனங்களுடன் ரூ.7,618 கோடி முதலீடு தொடர்பாக ஒப்பந்தங்கள் செய்ததாக கூறினார். இந்த முதலீடு மூலம் 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.