India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹிந்தி எந்த பிராந்திய மொழிக்கும் போட்டி கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஹிந்தி அனைத்து மொழிகளுக்கும் நட்பான மொழி என்று தெரிவித்தார். ஹிந்தியை பலப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறிய அவர், இந்தியில் உள்ள இலக்கியம், காப்பியம் உள்ளிட்ட அனைத்தும் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
உதயநிதி எந்நேரத்திலும் துணை CM ஆக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. USA பயணத்தை முடித்துவிட்டு ஸ்டாலின் திரும்பியதும், அமைச்சரவை மாற்றப்பட்டு உதயநிதி துணை CM ஆக்கப்படுவார் என தகவல் வெளியானது. இதுகுறித்து ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும் என பதிலளித்தார். இதை சுட்டிக்காட்டி உதயநிதி விரைவில் துணை CM ஆவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையில் திருமாவளவன் கொடியேற்ற இருந்த கொடிக்கம்பத்தை போலீசார் திடீரென அகற்றியுள்ளனர். மதுரை புதூர் பகுதியில் 62 அடி உயர விசிக கொடிக்கம்பம் இருந்தது. அந்த கொடிக்கம்பத்தில் திருமாவளவன் இன்று கொடியேற்றுவதாக இருந்தது. இந்நிலையில், விதிகளை மீறி அக்கொடி கம்பம் இருப்பதாக கூறி போலீசார் அகற்றியுள்ளனர். இதனைக் கண்டித்து விசிகவினர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு குறித்து பேசிய வீடியோ வெளியானதும், நீக்கப்பட்டதும் குறித்து தனக்கு தெரியாது என்று திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். அந்த வீடியோ திருமாவளவனின் எக்ஸ் பக்கத்தில் 2 முறை வெளியிடப்பட்டு நீக்கப்பட்டது. இதனால் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அதுகுறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், அது தங்கள் கட்சி நீண்ட நாள்களாக வைத்து வரும் கோரிக்கைதான் என பதிலளித்தார்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மலையாள மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பெருமழை விளைவித்த பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் கேரள மக்களுக்கு இந்த ஓணம் பண்டிகை நன்னாளாக அமையும் என தனது வாழ்த்து செய்தியில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். அதே போன்று எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் ஓணம் வாழ்த்து கூறியுள்ளனர்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2°-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் RMC குறிப்பிட்டுள்ளது. இதேபோல், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது அசௌகரியம் ஏற்படக்கூடும் என்றும் RMC கூறியுள்ளது. உங்கள் பகுதியில் வெயில் எப்படி? கமெண்ட் பதிவிடுங்க
பாஸ்மதி அரிசி மீதான குறைந்தபட்ச ஏற்றுமதி வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில், மோடி அரசு எடுத்த இந்த முடிவால் விவசாயிகள் விளைவிக்கும் பாஸ்மதி அரிசிக்கு உரிய விலை கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதேபோல், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மீதான அடிப்படை வரியை 32.5%ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மெல்போர்னில் 5 ஜனவரி 1971 அன்று AUS – ENG இடையே நடந்த ஆட்டமே உலகின் முதல் ODI ஃபார்மெட் போட்டியாக கருதப்படுகிறது. வானிலை காரணமாக 3ஆவது டெஸ்ட் நடத்த முடியாமல் போனது. இதனால் போட்டியை கைவிட முடிவு செய்த இருதரப்பும், கூட்டத்தை திருப்திப்படுத்தவும், நிதி இழப்பை சரி செய்யவும் அதற்கு பதிலாக, 40 ஓவர் கொண்ட (White Kit, Red Ball) ஒரு நாள் ஆட்டத்தை விளையாடினர். இதில் AUS 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
கோவளம் ஹெலிகாப்டர் சேவை திட்டத்தை கைவிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு வசதியாக ஹெலிகாப்டர் குறைந்த உயரத்தில் பறப்பதால் ஏற்படும் இரைச்சல் மக்களுக்கும், பறவைகளுக்கும் பேராபத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். தனியார் நடத்தும் இந்த சுற்றுலா திட்டத்தை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்தாவிட்டால், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் எக்ஸ் பக்க பதிவில், உள்ளூர் விவசாயிகளின் விளைப் பாெருள்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 0%இல் இருந்து 20%ஆக அதிகரிக்க மோடி அரசு முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். இதன் காரணமாக, நாட்டில் சமையல் எண்ணெய் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.