India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
SBI வங்கியில் 2,000 P.O. அதிகாரிகள் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 27ம் தேதி கடைசி நாள் ஆகும். வேலைக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட தகவலை www.sbi.co. in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அதே இணையதளத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
USA அதிபர் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்பை போப் பிரான்சிஸ் விமர்சித்துள்ளார். இருவரில் அமெரிக்க கத்தோலிக்கர்கள் குறைவான தீமையை தேர்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். குடியேறியவர்களை திருப்பி அனுப்புதல், கருக்கலைப்புக்கு ஆதரவு உள்ளிட்ட விவகாரங்களில், இருவரையும் போப் விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் 5.2 கோடி கத்தோலிக்கர்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் IND VS PAK இன்று மோதுகின்றன. சீனாவில் நடைபெறும் இந்த தொடரில், நடப்பு சாம்பியன் இந்தியா, தனது முதல் 4 போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 5ஆவது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது. இப்போட்டி மதியம் 1.15 மணிக்கு தொடங்குகிறது. Sports Ten 1, Sony Sports Ten 3 ஆகிய சேனல்களில் இந்த போட்டியை காணலாம்.
மலையாள சினிமாவை போல தமிழ் திரையுலகிலும் நடிகைகளுக்கு பாலியல் சீண்டல் பிரச்னை அதிகம் இருப்பதாக ராதிகா, குஷ்பு போன்ற சீனியர் நடிகைகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், நடிகை கஸ்தூரி கூறுகையில், “எனது 2-வது படத்திலேயே டைரக்டர் என்னிடம் தவறாக அணுகினார். கோபத்தின் உச்சிக்கு சென்ற நான், அவரை பயங்கரமாக திட்டினேன். அதனால் என்னை படத்திலிருந்து நீக்கிவிட்டார்” எனக் கூறினார்.
அன்ன்பூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நிர்மலா சீதாராமனை கண்டித்து கோவையில் இன்று மதியம் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. .கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமையில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை பங்கேற்கிறார்.
1) விலங்கியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 2) தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு? 3) விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது? 4) உலகில் முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியிட்ட நாடு எது? 5) கிரிகோரியன் நாட்காட்டியை போப் கிரிகோரி XIII எப்போது அறிமுகப்படுத்தினார்? 6) ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள்? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
தங்கம் விலை சவரனுக்கு ₹55 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ₹6,825, 1 சவரன் தங்கம் ₹54,600க்கும் விற்பனையானது. இன்று 1 கிராம் தங்கம் விலை ₹40 உயர்ந்து ₹6,865ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 1 சவரன் தங்கம் விலை ₹320 அதிகரித்து ₹54,920ஆக விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ₹2 உயர்ந்து ₹97க்கும், கிலோவுக்கு ₹2,000 உயர்ந்து ₹97,000க்கும் விற்கப்படுகிறது.
2014இல் உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக டைம் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டார் ‘பத்மஸ்ரீ’ முருகானந்தம். ஒரு காலத்தில் வசதி வாய்ந்த பெண்களுக்கான பொருளாக இருந்த நாப்கினை ஏழை பெண்களும் பயன்படுத்தும் வாய்ப்பை (₹2) இந்த Pad Man உருவாக்கியுள்ளார். இன்று உலகம் முழுவதும் உள்ள பெண்களின் சுகாதாரத்திற்காக தனது சொந்த கண்டுபிடிப்பான இயந்திரங்களை வழங்கி, உற்பத்தி முறைகளையும் கற்றுத் தருகிறார்.
தமிழகம் முழுவதும் TNPSC குரூப் 2 முதல்நிலைத் தேர்வு தொடங்கியுள்ளது. 2,327 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 2, 2ஏ தேர்வை TNPSC நடத்துகிறது. இதற்கான முதல்நிலை தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியுள்ளது. 7.93 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களுக்குள் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
6 மாதத்திற்கும் மேல் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய அளவில் படவாய்ப்பு இல்லாமல் அருண் விஜய் இருந்துள்ளார். இந்நிலையில் அவரை நடிகர் தனுஷ் அணுகி, தான் இயக்க இருக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்கக் கேட்டதாக கூறப்படுகிறது. ராயன் படத்தின் வெற்றியால் தனுஷின் மார்க்கெட் எகிறிப்போய் இருப்பதை அருண் விஜய் பார்த்துள்ளார். இதையடுத்து கதை கேட்காமலேயே நடிக்க ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.