India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மனதளவில் சோர்வுற்றவர்களை தேற்றும் ஆற்றல் ‘ரத்தனபுருஷ்’ எனும் ஓரிதழ் தாமரைக்கு இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. கொமரின், டிரைடெர்பினாய்ட்ஸ், ஆல்கலாய்டுஸ் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இதனை (முழுத் தாவரத்தையும்) பொடி செய்து, பனங்கற்கண்டு சேர்த்துப் பாலில் கலந்து 48 நாட்கள் பருகிவந்தால், மன அழுத்தம் நீங்குவதோடு தேகத்துக்குப் பொலிவையும் கொடுக்கும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரை சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா பாராட்டியுள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்வில் பேசிய அவர், ஆடுகளத்தில் ஆக்ரோஷமாக இருக்கும் கம்பீர் மைதானத்திற்கு வெளியே மென்மையானவர். திறமையான வீரர்களுக்கு எப்போதுமே உறுதுணையாக இருப்பார். திறமை இருப்பதாக உணர்ந்தால், வீரர்களை ஊக்கப்படுத்துவதோடு சுதந்திரமாக விளையாடச் சொல்வார் என்றார்.
வக்பு வாரியத்தின் தலைவராக இருந்த அப்துல் ரகுமானின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த அப்துல் ரகுமானுக்கு கடந்த 2021இல் தமிழக அரசு இந்த பொறுப்பை வழங்கியது. மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக.19இல் அவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், வக்பு வாரியத்தின் புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வியட்நாம் நாட்டில் யாகி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 254ஆக அதிகரித்துள்ளது. புயலில் சிக்கி காணாமல் போன 48 பேர் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பலி உயர்ந்துள்ளது. மேலும் 82 பேரை காணவில்லை என்பதால், பலி உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. யாகி புயலால் வியட்நாம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
வருகிற 17ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் மிலாது நபி பண்டிகை வருகிற 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 17ம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் கடைகளுக்கும் வருகிற 17ம் தேதி விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா – இயக்குனர் சிவா கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் முதலில் அக்., 10இல் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், அதே தேதியில் ரஜினி நடித்த ‘வேட்டையன்’ வெளியாவதால் அதன் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. இந்த திரைப்படம் நவ.,14 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசிக, தங்கள் எதிரி கட்சி இல்லை என்று அதிமுக கூறியுள்ளது. விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்குமா, இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பேசிய அதிமுக Ex மினிஸ்டர் ஜெயக்குமார், விசிக தங்கள் எதிரி அல்ல, திமுக, பாஜகவே எதிரிகள் என கூறினார். 2026 தேர்தலில் விசிகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என இப்போது கூற முடியாது, தேர்தலின்போதே முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மகளிருக்கு மாதம் ₹1,000 வழங்கும் அத்திட்டத்தின்கீழ் 1.15 கோடி பேர் பயனடைகின்றனர். நாளையுடன் அந்தத் திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள், புதுமண தம்பதிகள் உள்ளிட்டோரையும் சேர்க்கும் அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
ஜெயம் ரவி, தனது மனைவியை பிரிய எடுத்த முடிவுக்கான காரணம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அவரின் மாமியாரும், மாமியார் தோழியான சீனியர் நடிகை ஒருவரும் சில ஆண்டுகளாக அவரின் செயல்பாடுகளை நோட்டம் பார்த்ததாகவும், இதனால் அதிருப்தியில் இருந்த ஜெயம் ரவி, இனிமேலும் நிம்மதியை தொலைக்க கூடாது என்று விவாகரத்து முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உங்கள் கமெண்டை பதிவிடுங்க.
‘தல’ தோனி இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற நாள் இன்று. சரியாக 17 ஆண்டுகளுக்கு முன்பு 14 செப். 2007 அன்று பொறுப்பேற்ற அவர், இந்திய அணிக்கு புது உத்வேகத்தை அளித்தார் என்றே சொல்லலாம். அணியில் அதிரடி மாற்றங்களைச் செய்த அவரது கேப்டன்ஸியில் T20 WC 2007, ICC Test 2010,
CB தொடர் 2008, சாம்பியன்ஸ் லீக் T20 2010 & 2014, ஆசிய கோப்பை 2010 & 2016, ODI WC 2011 உள்ளிட்ட போட்டிகளில் இந்தியா வாகை சூடியது.
Sorry, no posts matched your criteria.