India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் செப்.14ல் 2,763 தேர்வு மையங்களில் குரூப் 2 தேர்வு நடக்க உள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் காலை 9 மணிக்கு முன்னரே வருமாறும், அதற்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளது. ஹால் டிக்கெட்டை கட்டாயம் தேர்வுக் கூடத்திற்கு எடுத்து வருமாறும் அறிவுறுத்தியுள்ளது. இதனை, www.tnpsc.gov.in, www.tnpscexams.in தளங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.
ஏர்டெல் CEO கோபால் விட்டல், ஜியோ, BSNL, வோடஃபோன் -ஐடியா, டாடா டெலிசர்வீஸ் நிறுவன தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். Spam அழைப்புகள் மூலம் மோசடிகள் நடைபெறுவதை தடுக்க, டெலிகாம் நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என அதில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இணைப்புகள் குறித்த தரவுகளை மாதந்தோறும் அனைவரும் பகிர்ந்தால், அதைக் கண்காணித்து மோசடிகளை தடுக்க முடியும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. இன்று நடைபெற்ற காலிறுதியில் தென்கொரியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் நான்காவது வெற்றியை பதிவுசெய்துள்ளது இந்தியா. இன்றைய ஆட்டத்தின்போது கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் தனது 200வது கோலை அடித்தார். செப்.14ஆம் தேதி நடைபெறும் அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
‘ஜவான்’ திரைப்படம் நவம்பர் 29ஆம் தேதி ஜப்பானில் ரிலீஸ் ஆக உள்ளது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் வெளியான இப்படம், உலகம் முழுவதும் ₹1,100 கோடி வசூலித்தது. ராணுவ தளவாட கொள்முதலில் ஊழல் என்ற இப்படத்தின் புதுமையான கதைகளம் வெற்றிக்கு உதவியது. படித்தவர்களை தலைவர்களாக தேர்ந்தெடுங்கள் என படம் பேசிய அரசியலை, நமது அரசியல் தலைவர்களும் எதிரொலித்தனர்.
ராகுல் காந்திக்கு (54) விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேவின் மகள் சோலாப்பூர் எம்.பி பிரணிதி ஷிண்டேவை (44) ராகுல் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இத்தகவலை, அவரது குடும்பத்தினரோ, காங்கிரஸ் கட்சியோ இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் திறமையாக பணியாற்றிய அவர், அரசியல் கட்சி வேறுபாடு கடந்து அனைவருடனும் எளிமையாக பழகக்கூடியவர் என புகழஞ்சலி செலுத்தியுள்ளார். யெச்சூரியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் எனவும் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சிதறிக் கிடந்த எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, INDIA கூட்டணி அமைய முக்கிய பங்காற்றியவர் சீதாராம் யெச்சூரி. 1996, 2004, 2009 காலகட்டங்களில் மத்தியில் கூட்டாட்சி மலர வித்திட்டவர். இக்காலக்கட்டங்களில் கட்சிகளுக்கிடையே குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கி, பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் கொண்டுவர காரணமானவர். இந்த செயல்திட்டத்தின் விளைவாகவே, கிராமங்களில் 100 நாள் வேலைத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – தனுஷ் இருவரும் விவாகரத்திற்குப் பிறகு தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கு அவனது பொம்மைகள் வழியனுப்புவது போன்ற இன்ஸ்டா போஸ்டை பகிர்ந்த அவர், மழலையர் பள்ளியோ..உயர்நிலைப் பள்ளியோ.. அதே கதைதான். என் மகன்கள் இப்போதும் பொம்மைகளுடன் விளையாடுகின்றனர். சில விஷயங்கள் மாறுவதேயில்லை எனப் பதிவிட்டு தனது மகன்களை நினைவு கூர்ந்துள்ளார்.
BSNL 4G சேவை தற்போது பயன்படுத்தப்படும் 4G போன்களில் வேலை செய்யாது என தகவல் வெளியாகியுள்ளது. 4G சேவைக்காக BSNL க்கு 700M HZ, 2100 M HZ ஆகிய 2 அலைவரிசையை அரசு ஒதுக்கியுள்ளது. இதில், 700M HZ அலைவரிசையை BSNL பயன்படுத்துகிறது. இது 5G சேவைக்கானது என்பதால் தற்போதைய 4G போனில் BSNL 4G கிடைக்காது.700MHZ கொண்ட 5G போனில் தான் கிடைக்கும். எனவே போனை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இளம் வயது முதலே நீதிக்காக போராடிய பயமறியா தலைவர், அவசரநிலை காலத்தில் மாணவர் பருவத்திலேயே துணிச்சலுடன் போராடியவர் யெச்சூரி என புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.