India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் வெற்றிலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து தடவினால், காயம் குணமாகும்.
➤வெறும் வாயில் வெற்றிலையை மென்று வந்தால், பல் சொத்தையாவது தவிர்க்கப்படும்.
➤வெற்றிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் கலந்து உடலில் தடவினால், தோல் பிரச்னைகள் குணமாகும்.
➤வெற்றிலையை மிளகுடன் சேர்த்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குடல் அழற்சி, செரிமானக் கோளாறு போன்றவை குணமாகும்.
இந்திய திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக, World Book of Records UK, Gold Edition-ல் நடிகர் பாலகிருஷ்ணா இடம்பெற்றுள்ளார். தன்னுடைய அதிரடி மாஸ் ஆக்சன் காட்சிகளின் மூலம் பரீட்சயமான பாலைய்யா தான், இந்த அங்கீகாரத்தை பெறும் முதல் தெலுங்கு நடிகர். 1974-ல் ‘தட்டம்மா கலா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், தற்போது வரை 160 படங்களில் நடித்துள்ளார்.
இந்து கடவுள் ராமன் பற்றிய விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு பேச்சால் சர்ச்சை வெடித்துள்ளது. ராமனும், ராமதாஸும் வேறு வேறல்ல, கருத்தியல் ரீதியாக இருவரும் ஒன்றே; பார்ப்பனர்களுக்காக கொலை செய்தவர் ராமன், பார்ப்பன கொள்கைகளுக்காக படுகொலை செய்ய தூண்டுபவர் ராமதாஸ் என சர்ச்சையாக பேசியுள்ளார். மேலும், தவம் செய்த சம்பூகன் தாழ்ந்த சாதி என்பதால் ராமன் அவரை கொன்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆக.27-ல் விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு மாநில விழா அந்தஸ்தை மகாராஷ்டிர அரசு வழங்கியுள்ளது. இதற்கு பக்தர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். உங்கள் ஊரில் விநாயகர் சதுர்த்தி விழாக்கோலாம் பூண்டுவிட்டதா?
கடந்த வார இறுதியில் கிடுகிடுவென்று அதிகரித்த ஆபரணத் தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான இன்று சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 குறைந்து ₹74,440-க்கும், கிராமுக்கு ₹10 குறைந்து ₹9,305-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹131-க்கும், கிலோ வெள்ளி ₹1000 உயர்ந்து ₹1,31,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது பல இந்தியாவில் 83% போலி பனீர்கள் விற்கப்படுவதாக Food Safety and Standards Authority of India எச்சரித்துள்ளது. இந்த போலி பனீர், மைதா, ArrowRoot powder, Urea போன்றவற்றை கலந்து தயாரிக்கப்படுகிறது. பனீரின் மீது Iodine Tincture-ஐ விடும் போது, அது கருப்பாக மாறினால், அது போலி. ஒரிஜினல் பனீரில், அது படிமனாக தங்கி விடும். குடல், கிட்னி போன்றவற்றுக்கு இந்த போலி பனீர் பிரச்னையை உண்டாக்குமாம்.
தூய்மைப் பணியாளர்கள் விவகாரம், கவின் ஆவணக் கொலை வழக்கு ஆகியவற்றில் திமுக அரசின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார், இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவுடன் கூட்டணி கிடையாது என அறிவித்தார். CM ஸ்டாலினை ‘Uncle’ என விஜய் அழைத்ததில் தவறில்லை என்ற அவர், தவெக தரப்பில் கூட்டணிக்கு அழைத்தால் பரிசீலிப்போம் என்றார்.
ஆயுள் தண்டனை கைதியான சந்தா ராம்பால் என்ற சாமியாரின் புத்தகத்தை, கர்நாடகாவைச் சேர்ந்த துகாரம் என்பவர் படித்துள்ளார். இதனையடுத்து, இவர் உள்பட 21 பேர், கடவுளைக் காண்பதற்காக உயிர்த்தியாகம் செய்யவுள்ளதாக கூறி வந்துள்ளனர். இதன்பேரில் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு அடுத்து, இம்முடிவை அவர்கள் கைவிட்டுள்ளனர். என்றுதான் மூடநம்பிக்கைகள் முடிவுக்கு வருமோ?
◆செரிமானத்தை மேம்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும் வரகரிசி பெருமளவில் உதவுகிறது.
➥வரகரிசியையும், உளுந்தையும் தனித்தனியாக 4 மணி நேரம் ஊறவைத்து அரைத்து பிறகு உப்பு சேர்த்து கொள்ளவும்
➥கண்டிப்பாக மாவை குறைந்தது 6 மணி நேரமாவது புளிக்க வைக்க வேண்டும்
➥புளித்த மாவில் இட்லி ஊற்றி சாப்பிடலாம். ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
தமிழ்நாட்டில் நேற்று பிறை தெரிந்ததால், வரும் செப்.5-ம் தேதி இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையான ‘மிலாடி நபி’ கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சற்றுமுன் அறிவித்துள்ளார். இதனால், அன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு அரசு பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது. முகமது நபியின் பிறந்த நாளான (மிலாடி நபி) அன்று இஸ்லாமியர்கள், ஏழை மக்களுக்கு உணவு, உடைகளை தானமாக வழங்குவார்கள்.
Sorry, no posts matched your criteria.