News October 14, 2024

IMPORTANT: இதெல்லாம் தயாராக வச்சுக்கோங்க

image

*வாட்டர் டேங்க் நிரப்புங்க.
*mobile, emergency lamp, laptop சார்ஜ் போடுங்க.
*torch, matchbox, candle, கொசுவர்த்தி, கொசுவலை, குடை, ரெயின்கோட் தயாராக இருக்கட்டும்.
*காய்கறிகள், பிரெட், பழங்கள், பால், பிஸ்கட் மற்றும் குடிநீர்.
*அவசரத் தேவைக்கான மருந்துகள், செலவுக்கு கொஞ்சம் ரொக்கப் பணம்
*இன்வர்ட்டர், கேஸ் சிலிண்டர் செக் பண்ணுங்க *பாதுகாப்பான வாகன பார்க்கிங் *நண்பர்கள், உறவினர்களுடன் தொடர்பு.

News October 14, 2024

சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது: கே.என்.நேரு

image

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை EPS கொச்சைப்படுத்துவதாக அமைச்சர் K.N நேரு கண்டனம் தெரிவித்துள்ளார். 2015 பெரு வெள்ளத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை நள்ளிரவில் திறந்துவிட்டு 289 பேர் பலியாக காரணமானவர்கள், தமிழக அரசை விமர்சிப்பது சாத்தான் வேதம் ஓதுவதை போல் உள்ளதாகவும் விமர்சித்துள்ளார். ஆய்வுக் கூட்டம் போட்டால், ‘எதற்காக கூட்டம்’ எனக் கேட்கும் இபிஎஸ்-ஐ பார்த்து மக்கள் சிரிப்பதாகவும் சாடியுள்ளார்.

News October 14, 2024

பாபர் அசாம் நீக்கப்படவில்லை: பாக். அணி பயிற்சியாளர்

image

பாபர் அசாம் அணியில் இருந்து நீக்கப்படவில்லை என PAK துணை பயிற்சியாளர் அசார் மக்மூத் தெரிவித்துள்ளார். ENG எதிரான டெஸ்ட் தொடரில் பாபர் விளையாட தயாராக இருந்ததாகவும், அணி நிர்வாகமே அவருக்கு ஓய்வு கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாபர் அணியின் நம்பர் 1 வீரர் எனவும், அவரின் திறமை மீது சந்தேகம் இல்லை எனவும் கூறியுள்ளார். முன்னதாக மோசமான ஆட்டம் காரணமாக அவர் நீக்கப்பட்டதாக தகவல்
வெளியானது.

News October 14, 2024

நிருபர் மரணத்துக்கு சென்ற பத்திரிகை அதிபர் மரணம்!

image

தினபூமி நாளிதழின் மதுரை மாவட்ட முதன்மை நிருபர் திருநாவுக்கரசு இன்று காலமானார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்ற தினபூமி நாளிதழ் உரிமையாளர் மணிமாறன் (69), கன்னியாகுமரியில் இருந்து மதுரை நோக்கி காரில் சென்றார். கோவில்பட்டி நாலாட்டின்புதூர் அருகே, அவரது கார் சாலை தடுப்புச் சுவரில் மோதி, எதிரே வந்த சரக்கு லாரி மீது மோதியது. இதில் மணிமாறன் உயிரிழந்தார். அவரது மகன் ரமேஷ் படுகாயமடைந்தார்.

News October 14, 2024

கேன்சர் குணமாக பாஜக அமைச்சர் அதிரடி யோசனை!

image

உ.பி. அமைச்சராக இருப்பவர் சஞ்சய் கங்வார். இன்று அவர் கூறியுள்ள கருத்துதான் பெரும் விவாதத்தையும், விமர்சனத்தையும் எழுப்பியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், “உங்களுக்கு கேன்சர் இருக்கிறதா? கவலை வேண்டாம். மாட்டுத் தொழுவத்தில் தங்கி, அதை சுத்தம் செய்யுங்கள். கேன்சர் குணமாகும். மாட்டின் முதுகை தடவிக்கொடுத்து, வாழைப்பழம் கொடுத்தால் BP குறையும்” எனக் கூறியுள்ளார். உங்கள் கருத்தை சொல்லுங்க.

News October 14, 2024

‘வேட்டையன்’ வசூல் இவ்வளவா? ப்பா..

image

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியான ‘வேட்டையன்’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து இதுவரை மொத்தம் ₹240 கோடியை தாண்டிவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் நாளில் இப்படம் ₹30 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறப்பட்டது. நீங்கள் இப்படத்தை பார்த்துவிட்டீர்களா?

News October 14, 2024

கொரோனா தடுப்பூசிக்கு எதிரான மனு தள்ளுபடி

image

கொரோனா தடுப்பூசிக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த வாரம் தாக்கலான பொதுநல மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு, இதுபோன்ற மனுக்களை எதன் அடிப்படையில் தாக்கல் செய்கிறீர்கள் என மனுதாரரிடம் கேள்வி எழுப்பியது. பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே இத்தகைய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாகக் கூறி தள்ளுபடி செய்தது.

News October 14, 2024

நாளை 6 மாவட்டங்களுக்கு விடுமுறை

image

கனமழை காரணமாக நாளை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை ஒருநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 14, 2024

மோடியை சந்தித்த அதிஷி

image

டெல்லி முதல்வராக பொறுப்பேற்றுள்ள அதிஷி, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். தலைநகரின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக மத்திய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் இடையே முழு ஒத்துழைப்பு இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அதிஷி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் அலுவலகமும் மோடி, அதிஷி சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

News October 14, 2024

கனமழை: மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்துக்கு..

image

கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அக்.15 முதல் அக்.17 வரை இந்த கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்றும், பயணிகளின் வருகையை பொறுத்து ரயில்களுக்கான கால இடைவெளி நிர்ணயிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது. கனமழை காலங்களில் மெட்ரோ ரயில்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!