News October 15, 2024

6 கனடா தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது இந்தியா

image

கன்னட தூதரக அதிகாரிகள் 6 பேரை இந்தியா வெளியேற்றியுள்ளது. 19ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு 6 பேரும் வெளியேற வேண்டுமென்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இந்தியா தொடர்பான கன்னட அரசின் குற்றச்சாட்டுகளுக்கு கண்டனம் தெரிவித்து, அந்நாட்டில் உள்ள தனது தூதர், அதிகாரிகளை திரும்ப பெறுவதாக இந்தியா அறிவித்தது. அதேபோல், கன்னட தூதரை நேரில் அழைத்து கண்டனத்தை பதிவு செய்தது.

News October 15, 2024

பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை: அமைச்சர்

image

பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து வகையிலும் அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் KKSSR ராமசந்திரன் தெரிவித்துள்ளார். அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருவதாகவும், பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு இல்லாமல் மழை பாதிப்பு சரிசெய்யப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். மக்கள் மளிகை உள்ளிட்ட பொருள்கள் கிடைக்காது என அச்சமடைய வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

News October 15, 2024

சென்னையில் வெளுத்து வாங்கும் மழை

image

சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது இடி மின்னலுடன் மழை பெய்கிறது. சென்னை தேனாம்பேட்டை, அடையாறு, கிண்டி, ஆலந்தூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, பள்ளிக்கரணை, ஈக்காட்டுத்தாங்கல், அண்ணாசாலை பகுதிகள், கோயம்பேடு, ஆவடி உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டுகிறது. இதனால், சென்னையின் பல இடங்களில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

News October 15, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶அக். 15 (புரட்டாசி 29) ▶செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶ திதி: த்ரயோதசி ▶ பிறை: வளர்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: வடக்கு▶ பரிகாரம்: பால் ▶ நட்சத்திரம்: பூரட்டாதி ▶சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம். SHARE பண்ணுங்க

News October 15, 2024

ஜன.1 வரை பட்டாசு விற்பனைக்கு தடை

image

டெல்லி முழுவதும் ஜனவரி 1 ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்திக்கும், விற்பனைக்கும் மாசு கட்டுப்பாட்டுக் குழு தடை விதித்துள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர்ந்து விழாக்கள் நடைபெற உள்ள நிலையில், காற்று மாசுபாட்டை தடுக்க இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் நடைபெறும் பட்டாசு விற்பனைக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 15, 2024

இரவு 1 மணி வரை இந்த மாவட்டங்களில் மழை

image

இரவு 1 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள் பட்டியலை RMC வெளியிட்டுள்ளது. 1) இடி மின்னலுடன் கனமழை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் 2) லேசான மழை: திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, நெல்லை. SHARE IT

News October 15, 2024

இந்தியா OUT.. பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து

image

மகளிர் T20 உலகக் கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தானை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. நியூசி., நிர்ணயித்த 111 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிய பாக்., அணி ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 11.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாக்., தோல்வியால் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது.

News October 15, 2024

ராசி பலன் (15.10.2024)

image

◙மேஷம் – தொல்லை
◙ரிஷபம் – சிக்கல்
◙மிதுனம் – பக்தி
◙கடகம் – லாபம்
◙சிம்மம் – நிம்மதி
◙கன்னி – பரிவு
◙துலாம் – ஆக்கம்
◙விருச்சிகம் – இன்பம்
◙தனுசு – நற்செயல் ◙மகரம் – நஷ்டம்
◙கும்பம் – உற்சாகம் ◙மீனம் – உதவி

News October 14, 2024

தூய நெய்யைக் கண்டறிவது எப்படி?

image

தமிழரின் உணவு பண்பாட்டில் ஒரு முக்கிய அங்கமாக இருப்பது நெய். சுவை & மணத்திற்காக மட்டுமின்றி, உடல் நலத்திற்காகவும் பயன்படுத்தப்படும் அதில் தற்போது அதிகம் கலப்படம் செய்யப்படுகிறது. தூய நெய்யா என்பதை கண்டறிய, ஒரு திரியை நெய்யில் நனைத்து தீபம் ஏற்றிப் பாருங்கள். சுத்தமான நெய் நீண்ட நேரம் எரியும். கலப்படம் செய்யப்பட்ட நெய் விரைவில் கருகிவிடும். சர்க்கரை பாகு (கேரமல்) போன்ற வாசனையைக் கொண்டிருக்கும்.

News October 14, 2024

சொன்ன மாதிரி கரெக்டா ஆரம்பிச்சிருச்சே..!

image

சென்னையில் நாளை முதல் (அக். 15) மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னோட்டமாக, இன்று இரவு முதல் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியிருந்த நிலையில், பல பகுதிகளில் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. நாளை அதிகாலை முதலாக மழையின் தீவிரம் அதிகரிக்கும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மறுதினம் (அக்.16) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!