News September 10, 2024

போனா வராது பொழுது போனா கெடைக்காது

image

8ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு JIO அறிவித்த ஆஃபர்கள் இன்றுடன் முடிகிறது. இதில் ₹899, ₹999, ₹3,599க்கு ரீசார்ஜ் செய்தால் ₹700 வரை சலுகைகள் கிடைக்கும். குறிப்பாக ₹2999க்கு மேல் ரீசார்ஜ் செய்தால், 3 மாத ZOMATO கோல்டு மெம்பர்ஷிப் இலவசம். இதுதவிர ₹899 ரீசார்ஜ்-2 GB/d (90D). ₹999 ரீசார்ஜ்-2 GB/d, (98D). மேலும் ₹899, ₹999 ரீசார்ஜுக்கு 10 GB Free டேட்டா, 10 OTT தள Free சப்ஸ்கிரிப்ஷன்.

News September 10, 2024

ஆப்பிள் ஈவென்ட்டில் சித்தார்த்-அதிதி ராவ் தம்பதி

image

ஆப்பில் நிறுவனம் நேற்று தனது ஐபோன் 16 சீரியஸ், புதிய ஏர்பாட்ஸ் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் தமிழ் திரை பிரபலங்களான சித்தார்த் – அதிதி ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அதிதி, டிம் – குக்கிற்கு நன்றி எனவும், இது எங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

News September 10, 2024

நிதி ஒதுக்கீடு செய்தார் முதல்வர் ஸ்டாலின்

image

தமிழ்நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் 5,000 நீர்நிலைகளை புனரமைக்க ₹500 கோடியை ஒதுக்கீடு செய்து, ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில், நீர்நிலைகள் தூர்வாரும் பணி நடந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் எந்த பணியும் நடக்கவில்லை என எதிர்கட்சியினர் விமர்சித்தனர். இந்நிலையில், 22,061 சிறுபாசன ஏரிகளை புனரமைக்கும் திட்டத்தில், முதற்கட்டமாக 5,000 நீர்நிலைகள் புனரமைக்கப்படவுள்ளன.

News September 10, 2024

கிரீன் டீயின் நன்மைகள்

image

ஒரு நாளில் 2-4 கப் கிரீன் டீ குடிப்பது உடலிற்கு அதிக நன்மை அளிக்கிறது. இது உடலில் ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையை சீராக்கவும் கிரீன் டீ உதவுகிறது. மூளை ஆரோக்கியத்திலும் பங்காற்றுகிறது. புற்றுநோய் வருவதை தடுக்கும் திறன் பெற்றது. உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும் செய்கிறது. கிரீன் டீயினை எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.

News September 10, 2024

லோன் ஆப் பற்றிய விழிப்புணர்வு அவசியம்!

image

நடுத்தர வர்க்கத்தினர் பலரும் தற்போது ஆப்களில் அதிகம் கடன் வாங்கி வருகின்றனர் ஆனால் இது போன்ற ஆப்களை பற்றிய முன்னெச்சரிக்கை அவசியம் தேவைப்படுகிறது. அந்த ஆப்கள் RBI யில் பதிவு செய்திருக்கிறதா என விசாரிக்க வேண்டும். அந்த ஆப்களை 50ஆயிரம் மேல் பதிவிறக்க செய்திருந்தால் அதைப் பயன்படுத்தலாம். கடன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் வாடிக்கையாளர் சேவை உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.

News September 10, 2024

பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

image

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்தப்பட்டது. இதனால், மாணவர்களின் கல்வி எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை.1.22 லட்சம் பேரில் 85,000 ஆசிரியர்கள் பணிக்கு வந்துவிட்டனர். 37,500 (30%) ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளது.

News September 10, 2024

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பரிசு

image

பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு அவர் ஊக்கத்தொகை வழங்கினார். இதில் பாராலிம்பிக்ஸில் சிறப்பாக ஆடி பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.30 லட்சத்துக்கான காசோலையை வழங்கி, பாராட்டு தெரிவித்தார். மேலும் தங்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.75 லட்சம் வழங்கப்பட்டது.

News September 10, 2024

போன் ஸ்டோரேஜுக்கான TIPS!

image

போனின் ஸ்டோரேஜை சில எளிய வழிகள் மூலம் அதிகரிக்கலாம். *தேவையில்லாத செயலியை நீக்க வேண்டும். *அதிக MB உடைய போட்டோ, வீடியோக்களை Cloud-ல் சேமிக்க வேண்டும். *தேவையற்ற பெரிய மற்றும் டூப்ளிக்கேட் வீடியோக்களை நீக்கவேண்டும். *முக்கியமான தரவுகளை Cloud-ல் சேமித்து வைத்து போனிலிருந்து நீக்கிவிட வேண்டும்.*முக்கிய தரவுகளை இமெயிலில் அனுப்பி வைத்துக் கொள்ளலாம். *போனை தினமும் ரீஸ்டாட் செய்வது நல்லது.

News September 10, 2024

இடி, மின்னலுடன் மழை அலர்ட்

image

தமிழ்நாட்டில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது. திருவள்ளூர், காஞ்சி, சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், கரூர், தென்காசி, நெல்லை, குமரியில் மழை பெய்யும். இடியுடன் மழை பெய்யும்போது மரத்தடியில் நிற்க வேண்டாம். பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைய வேண்டும் என அறிவித்துள்ளது.

News September 10, 2024

சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு

image

மும்பைப் பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்ந்து 81,921 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதைப்போல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 105 புள்ளிகள் அதிகரித்து 25,041 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. ஹெ.சி.எல். டெக், பார்த்தி ஏர்டெல் தலா 2%, டெக் மகிந்திரா, என்.டி.பி.சி., பவர் கிரிட் பங்குகள் 1.7% விலை உயர்ந்தது.

error: Content is protected !!