India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் அனிமேஷன் மற்றும் கிராஃபிக்ஸ் பணிகளை இறுதி செய்வதற்காக இயக்குநர் வெற்றிமாறன் விரைவில் லண்டன் புறப்பட்டுச் செல்ல உள்ளார். இப்படத்தில் வரும் காளை தொடர்பான காட்சிகளை பல லட்சம் செலவில் அனிமேஷனில் படக்குழு வடிவமைத்து வருகிறது. டிசம்பர் மாதம் ‘விடுதலை 2’ திரைப்படம் வெளியான பிறகு ‘வாடிவாசல்’ படத்திற்கான பணிகள் முழு வீச்சில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் “காதல் நகரம்” என்ற தனது நீண்ட கால அந்தஸ்தை இழந்தது பாரிஸ். TALKER RESEARCH நிறுவனம் நடத்திய ஆய்வில் ஹெவாயில் உள்ள மெளயி என்ற தீவு, காதல் நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மெளயி தீவுக்கு 34%, பாரிஸ்-க்கு 33% பேரும் வாக்களித்துள்ளனர். அதிகம் அறியப்படாத இடம்தான் காதலுக்கு உகந்ததாக இருப்பதாக 45% அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது வலது காலில் பெரிய முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்ததாக விஜய் டிவி பிரபலம் டிடி தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராமில், மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், 10 ஆண்டுகளின் தனது 4வது அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளதாகவும், இந்தமுறை சிசிக்சை வெற்றியடைந்து மீண்டும் தன்னால் நடக்க முடியும் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.
ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பத்திற்கான கடைசி தேதி வரும் 23ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. www.hajcommittee.gov.in என்ற இணையத்தளம் வழியாக (அல்லது) “HAJ SUVIDHA” செயலில் மூலம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், இரத்து செய்யப்பட்ட காசோலை நகல்/சேமிப்பு வங்கிக்கணக்கு புத்தக நகல். முகவரிச் சாற்றின் நகல் ஆகிய ஆவணங்களை வழங்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டோர் டோர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தத் தடை விதிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இளம் வயதினரை மைதானங்களில் விளையாடுவதற்கு ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டிலேயே இந்தத் தடை அமல்படுத்தப்படும் என அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறியுள்ளார். இந்த சட்டம் இந்தியாவில் வந்தால் எப்படி இருக்கும்.
இணைய பணபரிவர்த்தனை செய்யும் போது தவறாக வேறொருவருக்கு பணம் அனுப்பிவிட்டால் அதனை எளிய முறைகள் மூலம் திரும்பப் பெறலாம். தவறாக பணம் அனுப்பினால் வங்கியைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது உடனடியாக அந்த நபரைத் தொடர்புகொண்டு திருப்பி அனுப்புமாறு கேட்கலாம். அல்லது பணம் செலுத்திய செயலில் உதவி கோரலாம். இவைகள் மூலமும் பணம் திரும்ப பெறவில்லை எனில் NPCI இல் தொடர்புகொள்ளலாம் அல்லது போலீசில் புகாரளிக்கலாம்.
எஸ்.எஸ். திட்டத்தில் நிலுவையில் உள்ள நிதியை NEP நிபந்தனைகள் இன்றி மத்திய அரசு வழங்க வேண்டும் என தர்மேந்திர பிரதானின் பதிவை டேக் செய்து, அன்பில் மகேஷ் வலியுறுத்தியுள்ளார். மேலும், தேசிய கல்விக் கொள்கையின் பல அம்சங்களை தமிழகம் செயல்படுத்தி வருகிறது. அதேசமயம், தமிழ் மொழியின் பாரம்பரியத்தை பாதுகாப்பதில் எப்பொழுதும் உறுதியாக உள்ளோம். தாய்மொழியில் கல்வி கற்பதை எதிர்க்கிறீர்களா என்றும் கேள்வியுள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். வணிகர் நலனுக்கு தனது வாழ்நாள் முழுவதும் போராட்டம் நடத்தியவர். அவரின் மறைவு செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் வணிக பெருமக்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டை வெண்கலம் வென்ற மனு பாக்கருக்கு, TATA நிறுவனம் சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது. 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற அவர் வெண்கலம் வென்றார். மேலும், தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார். அவரது வரலாற்று சாதனையை கவுரவிக்கும் வகையில், TATA நிறுவனம் சார்பில் CURVV EV SUV கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
IDBI வங்கி கிளைகளில் காலியாக உள்ள மேலாளர், உதவி மேலாளர் பணி இடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 56 இடங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கல்வி தகுதியாக MBA பட்டம் வாங்கி இருக்க வேண்டும். வயது வரம்பு 25-40 வரை ஆகும். மாத சம்பளம் ₹1.57 லட்சம் வரை வழங்கப்படும். வேலையில் சேர விரும்புவோர் IDBI வங்கி இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு செப் 15 கடைசி நாள். SHARE IT
Sorry, no posts matched your criteria.