India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
12 ராசிகாரர்களும் வழிபட வேண்டிய விநாயகர் வடிவம் குறித்து ஆன்மிகத்தில் கூறப்பட்டுள்ளது. அதை தெரிந்து கொள்ளலாம். *மேஷம்: வீர கணபதி *ரிஷபம்: ஸ்ரீ வித்யா கணபதி *மிதுனம்: லட்சுமி கணபதி *கடகம்: ஹேரம்ப கணபதி *சிம்மம்: விஜய கணபதி *கன்னி: மோகன கணபதி *துலாம்: ஷிப்ர பிரசாத கணபதி * விருச்சிகம்: சக்தி கணபதி *தனுசு: சங்கடஹர கணபதி *மகரம்: யோக கணபதி *கும்பம்: சித்தி விநாயகர் *மீனம்: பால கணபதி. SHARE IT
மஹா விஷ்ணு விவகாரம் பாஜக, RSS செய்கின்ற சதி என்று திமுக குற்றம்சாட்டியுள்ளது. அக்கட்சியின் அமைப்பு செயலாளர் RS பாரதி கூறுகையில், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு குழப்பம் ஏற்படுத்த பாஜக, RSS பார்ப்பதாகவும், இதை முளையிலேயே கிள்ளி எரிவது அவசியம், இல்லையேல் பிரச்னை பெரிதாகி விடும் என்றார். மஹா விஷ்ணு பேசிய விதம் தவறு, அவர் மீது சரியான நடவடிக்கையே அரசு எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
AXIS, HDFC வங்கிகளுக்கு RBI அபராதம் விதித்துள்ளது. வங்கி நடைமுறைகள், டெபாசிட் வட்டி தொடர்பான விதிகளை கடைபிடிக்காதது உள்ளிட்டவற்றுக்காக AXIS வங்கிக்கு ₹1.91 கோடி அபராதம் விதித்துள்ளது. வாடிக்கையாளர் சேவை,, வங்கியின் ரெகவரி ஏஜெண்ட் செயல்பாடு போன்ற விதி மீறலுக்காக HDFC வங்கிக்கு RBI ₹1 கோடி அபராதம் விதித்துள்ளது. மார்ச் மாதத்தில் ஆய்வு நடத்தி இந்த விதி மீறலை கண்டுபிடித்ததாக RBI குறிப்பிட்டுள்ளது.
ஆதார் அட்டை பெற்று 10 வருடம் மேல் ஆனவர்கள், அதிலுள்ள விவரங்களை புதுப்பிக்க செப்.14 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆதார் மையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அவகாசம் முடிந்துவிட்டால் ஆதார் செல்லாது என்ற வதந்தியே இதற்கு காரணம். செப்.14 வரை இலவசமாக ஆதார் விவரங்களை புதுப்பிக்கலாம். அதற்கு பிறகு ரூ.50 கொடுத்து புதுப்பிக்க வேண்டும். ஆன்லைனிலும் இதை புதுப்பித்துக் கொள்ளலாம் என்பதே உண்மை.
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 6 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், நாளை முதல் 16ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. சென்னை நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் இன்று மழை பெய்யும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்க.
இன்று (செப். 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, உ.பி. டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக பட்ஜெட்டில் ரூ.21,247 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இதில் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் ரூ.17.31 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது மொத்த நிதியில் 80 சதவீதம். ஆனால், தமிழகம், மே. வங்கத்துக்கு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.
அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழக மாணவர்களுடன் நேற்று கலந்துரையாடினார். அவர் பேசுகையில், “இந்தியாவில் தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலானது சமவாய்ப்புகளுடன் நடத்தப்பட்டதல்ல. அதை சுதந்திரமாக நடைபெற்ற தேர்தலாக நான் கருதவில்லை. அப்படி சுதந்திரமாக நடந்திருந்தால் பாஜகவால் 240 தொகுதிகளுக்கு பக்கத்தில் கூட வந்திருக்க முடியாது” எனக் கூறினார்.
இரவு நேரத்தில் பல் துலக்கிவிட்டு தூங்குவது மாரடைப்பை தடுக்கும் என மருத்துவர்கள் கூறி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பலருக்கும் இதற்கு காரணம் தெரியாது. பற்களில் உருவாகும் சில கெட்ட வைரஸ்களும், பாக்டீரியாக்களும் ப்ளேக் (Plaque) எனப்படும் கொழுப்பு பசையை இதய வால்வுகளில் உருவாக்குகிறது. இதுதான் மாரடைப்புக்கு முக்கிய காரணம். இரவில் பல் துலக்குவதால் இந்த கிருமிகள் உடலுக்குள் செல்வது தடுக்கப்படும்.
விக்ரவாண்டி தவெக மாநாட்டில்தான் தனது கட்சிக் கொள்கைகளை விஜய் வெளியிடவுள்ளார். அதற்கு முன்பாகவே அவரை பல கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அந்த வகையில், கிருஷ்ணர் ஜெயந்திக்கும், விநாயகர் சதுர்த்திக்கும் கூட வாழ்த்து கூற விஜய்க்கு தெரியவில்லை என பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி. செல்வம் விமர்சித்துள்ளார். மேலும், திமுகவின் B டீம் போல தவெக உருவெடுத்து வருவதாகவும் அவர் சாடினார்.
Sorry, no posts matched your criteria.