News September 11, 2024

என்னிடம் ஒப்புதல் வாங்கவில்லை: ஆர்த்தி

image

தனது ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி பிரிவை அறிவித்ததாக அவரது மனைவி ஆர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மனைவியை விவாகரத்து செய்வதாக ஜெயம் ரவி நேற்று முன்தினம் அறிவித்தார். இது குறித்து கருத்து கூறிய ஆர்த்தி, ரவியிடம் மனம் விட்டு பேச பல முறை முயற்சித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடன் ஆலோசிக்காமல் சொந்த விருப்பத்தை சார்ந்து, அவராகவே முடிவெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

News September 11, 2024

பொது அறிவு: வினா-விடை

image

1) திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும்? 2) போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ? 3) தமிழகத்தின் முதல் பெண் கவர்னர் யார்? 4.ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது? 5) குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார்? 6) தக்காளியின் பிறப்பிடம் எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

News September 11, 2024

கோலிக்கு புகழாரம் சூட்டிய சுமித்

image

‘கோலி இந்திய அணியில் உள்ள ஆஸ்திரேலியர்’ என ஆஸி. வீரர் சுமித் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி வீரர்களை போல கோலியின் சிந்தனையும், செயல்பாடும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கோலி மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதை காட்டிலும், மிக நல்ல மனிதர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். நவம்பரில் ஆஸி. செல்லும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

News September 11, 2024

தாெழில் தொடங்க ₹15 லட்சம் லோன் வழங்கும் தமிழக அரசு

image

குடும்பத்தில் ஒருவருக்கு ₹15 லட்சம் வரை தனிநபர் கடன் (PL) வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிறுதொழில், வியாபாரம் செய்ய இக்கடன் அளிக்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வட்டி விகிதம் 7% – 8% வரை என்றும், கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் 3 முதல் 5 ஆண்டுகள் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. கூட்டுறவு வங்கிகள், டாப்செட்கோ இணையதளம் உள்ளிட்டவற்றில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News September 11, 2024

‘யாகி’ சூறாவளியில் சிக்கி 140 பேர் பலி

image

வியட்நாம் நாட்டை தாக்கிய யாகி சூறாவளியில் சிக்கி இதுவரை 140 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த 7ஆம் தேதி மணிக்கு 149 கிமீ வேகத்தில் வீசிய இந்த சூறாவளி காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்தனர். வியட்நாமை தாக்குவதற்கு முன்பு, சீனா மற்றும் பிலிப்பைன்சில் இந்த சூறாவளி புயல் தாக்கியதில் 24 பேர் பலியானார்கள்.

News September 11, 2024

தங்கம் விலை ₹280 உயர்வு

image

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று ₹280 அதிகரித்துள்ளது. கடந்த 4 நாள்களாக தங்கம் விலை மாற்றமில்லாமல் இருந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ₹280 உயர்ந்து ₹53,720ஆக விற்கப்படுகிறது. 1 கிராம் தங்கம் விலை இன்று ₹35 உயர்ந்து ₹6,715ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி விலை கிலோவுக்கு ₹500 உயர்ந்து, ₹91,500க்கு விற்கப்படுகிறது. SHARE IT

News September 11, 2024

கமலா Vs டிரம்ப்: முந்துவது யார்?

image

USA அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ABC ஊடக தரவுகள்படி, டிரம்பை 44% பேரும், கமலா ஹாரிஸை 47% பேரும் ஆதரித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், டிரம்ப் முன்னிலை வகித்தார். ஆனால், தற்போது களம் மாறி இருப்பதாக இந்த முடிவுகள் காட்டுகின்றன. 50 மாகாணங்களில் 7இல் கடும் போட்டி நிலவும் எனக் கூறப்படுகிறது.

News September 11, 2024

கெஜ்ரிவால் ஆட்சி கலைப்பா?

image

டெல்லி அரசை கலைக்கக் கோரி BJP எம்எல்ஏக்கள் அளித்த மனுவை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு குடியரசு தலைவர் முர்மு அனுப்பி வைத்துள்ளார். கெஜ்ரிவால் சிறையில் இருப்பதால், அரசியலமைப்பு நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் டெல்லி அரசை டிஸ்மிஸ் செய்ய அம்மாநில BJP எம்எல்ஏக்கள் ஆக. 31இல் குடியரசு தலைவரிடம் மனு அளித்தனர். இதனை பரிசீலித்த, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்துறைக்கு முர்மு அனுப்பியுள்ளார்.

News September 11, 2024

துலீப் தொடரில் இருந்து கில் உள்ளிட்ட வீரர்கள் விடுவிப்பு

image

வங்கதேச தொடருக்கு தேர்வான IND வீரர்கள் துலீப் தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல், கில், ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல் உள்ளிட்ட வீரர்கள் BAN தொடருக்கு தேர்வாகியுள்ளனர். IND-BAN இடையே முதல் டெஸ்ட் சென்னையில் வரும் 19இல் நடைபெறுகிறது. கில் இந்திய A அணிக்கு கேப்டனாக உள்ளதால், அவருக்கு பதிலாக மயங்க் அகல்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

News September 11, 2024

அமெரிக்காவை உலுக்கிய செப்.11 தாக்குதல்

image

2001 செப். 11இல் நிகழ்ந்த இரட்டை கோபுர தாக்குதல் உலகையே உலுக்கிய அசம்பாவிதமாகும். USA மீதான உலகின் பார்வையை இது முற்றிலுமாக மாற்றி அமைத்தது. உலகின் ஒரே சூப்பர் பவர் நாடு என்று கூறிவந்த USA மீது அல்கொய்தா நடத்திய இந்த தாக்குதல், தீவிரவாதத்தின் கோர முகத்தை உலகிற்கு வெளிக்காட்டியது. இந்த சம்பவத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், இதன் 23ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

error: Content is protected !!