India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஜய்யின் தவெக கட்சிக்கு குஷ்பு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோரை இழுக்க முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவில் தற்போது இருக்கும் அவர்கள் 2 பேரும், தங்களுக்கு அக்கட்சியில் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்று அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, குஷ்பு NCW பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதையடுத்து 2 பேரையும் இழுக்க பேச்சு நடப்பதாகக் கூறப்படுகிறது.
‣ வெள்ளரி விதையில் நார்சத்து, மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் இ, ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை நிறைந்துள்ளன. ‣ இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட் சருமப் பிரச்னைகளை சரிசெய்யும். முடிஉதிர்வைத் தடுக்கும். ‣ தைராய்டு பிரச்னையை சீராக்கும். ‣ குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளதால் உடல் எடையைக் குறைக்க உதவும். ‣ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். புற்றுநோயைத் தடுக்கும். ‣ சிறுநீர் பிரச்னைகளை சரிசெய்ய உதவும்.
iPhone 16 நேற்று அறிமுகமான நிலையில் iPhone 14, iPhone 15 ஐபோன்களின் விலை ஆப்பிள் இணையதளத்தில் குறைக்கப்பட்டுள்ளது. iPhone 15 ₹79,900 விற்கப்பட்ட நிலையில் அது ₹10 ஆயிரம் குறைக்கப்பட்டு ₹69,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் iPhone 15 Plus ₹79,900 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது. iPhone 14 ₹59,900 ஆகவும், iPhone 14 Plus ₹69,000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மதுஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று பேசியபோது, மதுவை ஒழிக்க வேண்டும் என்ற பொதுநல நோக்கத்துடனேயே அதிமுகவுக்கு தாம் அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்தார். 2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இந்த அழைப்பு கூட்டணிக்கானது இல்லை என்றும் விளக்கினார்.
ஆதரவாக இருப்பதை போன்று IOA தலைவர் பி.டி.உஷா பாசாங்கு செய்ததாக வினேஷ் போகத் கடுமையாக விமர்சித்துள்ளார். மல்யுத்த போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போகத்தை பி.டி.உஷா சந்தித்தார். இது தொடர்பான புகைப்படம் வெளியானதை குறிப்பிட்டு, அரசியலுக்காக அந்த போட்டோ எடுக்கப்பட்டதாக போகத் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தனக்கு அவரால் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை என்றார்.
ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறியீட்டில் TN, AP உள்ளிட்டவை பின் தங்கியுள்ளன. செப்டம்பர், தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பஞ்சாப், கர்நாடகா, டெல்லி, உத்தராகண்ட், அசாம் ஆகிய மாநிலங்கள் தேசிய சராசரியை விட அதிக ஊட்டச்சத்து விழிப்புணர்வு கொண்டுள்ளதாகத் தரவுகள் காட்டுகின்றன. அதே நேரம், குஜராத், TN, ராஜஸ்தான், AP, பிஹார் ஆகிய மாநிலங்கள் கடைசி 5 இடங்களை பிடித்துள்ளன.
செபி தலைவர் மதாபி புச் பல்வேறு நிறுவனங்களிடம் பணம் பெற்றதாக HINDENBURG ஆய்வு நிறுவனம் மீண்டும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ICICI, டாக்டர் ரெட்டி லேபரட்டரிஸ், பிடிலைட் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து மதாபியின் இந்திய ஆலோசனை நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் கைமாறியதாக தெரிவித்துள்ளது. எனினும், இக்குற்றச்சாட்டை அந்நிறுவனங்கள் மறுத்துள்ளன.
மூடநம்பிக்கை கருத்தை மாணவரிடம் பரப்பும் விதமாக பேசியதற்காக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு, ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இதே போல் போலீசார் மகாவிஷ்ணுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க தாக்கல் செய்யப்பட்ட மனுவும் அதே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இன்று முதல் 23ம் தேதி வரை நடக்கிறது. 11 சுற்றுகள் நடைபெறும் இப்போட்டியில், ஓபன் பிரிவில் 197 அணிகளும், பெண்கள் பிரிவில் 184 அணிகளும் பங்கேற்கின்றன. இந்திய சார்பில் ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா, குகேஷ், அர்ஜூன் எரிகைசி, விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா பென்தலா ஆகியோர் உள்ளனர். கடந்த முறை இந்திய அணி இரு பிரிவிலும் வெண்கலப் பதக்கத்தை வென்றது.
சர்வதேச சந்தையில் <<14072983>>Crude Oil விலை<<>> தொடர்ந்து சரிந்து வருகிறது. அதே நேரம், இந்தியாவில் Petrol, Diesel விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. Crude Oil விலை உயரும் போது, உடனடியாக Petrol விலையை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள், விலை குறையும் போது Petrol விலையை குறைக்காதது ஏன்? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அவற்றின் விலையை குறைக்க அரசும் முனைப்பு காட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.