News October 14, 2024

மிக கனமழை எச்சரிக்கை: நிழலாடும் 2023

image

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் 2023இல் பெய்த கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இயல்பு நிலை திரும்ப சுமார் 10 நாள்களுக்கும் மேல் பிடித்தது. இந்நிலையில் இன்று முதல் 4 நாள்களுக்கு வானிலை மையம் மிக கனமழை, அதி கனமழை எச்சரிக்கை விடுத்திருப்பதால், 2023 போன்ற பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

News October 14, 2024

இதை செய்து ஆதாரில் மொபைல் எண்ணை மாற்றலாம்

image

ஆதாரில் உள்ள மொபைல் எண்ணை சிலர் தொலைத்திருப்பர் அல்லது பயன்படுத்தாமல் இருப்பர். அவர்கள் புதிய எண்ணை ஆதாரில் எளிதில் இணைக்க முடியும். இதை ஆன்லைனில் நாம் சொந்தமாக செய்ய முடியாது. அருகிலுள்ள ஆதார் மையத்துக்கு சென்று பயோமெட்ரிக் பதிவிட்டு, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். அப்படி செய்தால் 1 வாரம் முதல் 10 நாள்களுக்குள் அந்த எண் இணைந்துவிடும். SHARE IT

News October 14, 2024

டிரம்பை 3ஆவது முறையாக கொல்ல முயற்சி?

image

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொலை செய்யும் திட்டத்துடன் துப்பாக்கிகளுடன் வந்த நபரை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு டிரம்புக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோசெல்லாவில் நடந்த கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்ற நிலையில், அங்கு போலி பாஸுடன் வந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் கைது செய்தனர்.

News October 14, 2024

4 நாள்களுக்கு ஆரஞ்ச், ரெட் அலர்ட்

image

தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு 4 நாள்களுக்கு மிக கனமழை (ஆரஞ்ச்) எச்சரிக்கையும், ஒரு நாள் அதி கனமழை (ரெட் அலர்ட்) எச்சரிக்கையும் RMC விடுத்துள்ளது. இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் மிக கனமழை பெய்யக்கூடும் என RMC கூறியுள்ளது. 16ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டில் அதி கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.

News October 14, 2024

2 புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள்.. ஜியோ அறிமுகம்

image

2 புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. ₹1,028 மற்றும் ₹1,029 விலையை அந்தத் திட்டங்களுக்கு ஜியோ நிர்ணயித்துள்ளது. இதில் ₹1,028 திட்டமானது, 84 நாள் வேலிடிட்டி கொண்டது. 4ஜி எனில் தினமும் 2 ஜிபி டேட்டாவும், 5ஜி எனில் அன்லிமிடெட் டேட்டாவும், 100 எஸ்எம்எஸ்-சும் வழங்குகிறது. ₹1,029 திட்டத்தில், ₹1,028 திட்ட பயன்களுடன் சேர்த்து, Amazon Prime Lite membership அளிக்கிறது.

News October 14, 2024

இன்றே கடைசி: SBI வங்கியில் 1,497 வேலை

image

SBI வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகள் நிலையிலான பதவிகளில் காலியாக இருக்கும் 1,497 இடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதற்கான விண்ணப்பப்பதிவு SBI வங்கியின் இணையதளமான sbi.co.in.இல் நடைபெறுகிறது. EWS, OBC, பொது பிரிவினர் ரூ.750 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பகிருங்கள்.

News October 14, 2024

காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது

image

தெற்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக RMC தெரிவித்துள்ளது. தமிழக உள் பகுதிகளிலும், தென்கிழக்கு வங்கக்கடலிலும் தலா 1 வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்றும் RMC குறிப்பிட்டுள்ளது. இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி 48 மணி நேரத்தில் நகரும் என்றும் கூறியுள்ளது.

News October 14, 2024

பருவமழை: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

image

பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவிட திமுகவினர் தயாராக இருக்க வேண்டுமென்று அக்கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மழைக்காலத்தில் திமுகவினர், அரசு, பொதுமக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் முன்வைக்கின்ற கோரிக்கைகள், தகவல்களுக்கு முக்கியத்துவம் அளித்து மேல் நடவடிக்கைக்கு வழிவகை செய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News October 14, 2024

அக்.14: வரலாற்றில் இன்று

image

1956: சட்டமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறினார்.
1981: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பிறந்தார்.
1998: அமர்த்தியா சென் நோபல் விருதை பெற்றார்.
1943: பிலிப்பைன்ஸ் சுதந்திரம் பெற்றது.
1957: நடிகர் பார்த்திபன் பிறந்தார்.
1985: நடிகை நவ்யா நாயர் பிறந்தார்.

News October 14, 2024

சிங்கப்பூரில் IPL ஏலம்?

image

2025 IPL வீரர்கள் ஏலத்தை சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், சவூதி அரேபியாவின் ரியாத், ஜெட்டாவில் நடத்துவது குறித்தும் பரிசீலித்து வருவதாக அத்தகவல் கூறுகிறது. முன்னதாக, 2024ம் ஆண்டு IPL வீரர்கள் ஏலத்தை துபாயில் பிசிசிஐ நடத்தியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!