India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மலையாள சினிமா துறையில் பாலியல் தொல்லை குறித்து ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்நிலையில், இது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாலிவுட் நடிகை சன்னி லியோன், “NO சொல்ல வேண்டிய இடத்தில் NO சொல்ல வேண்டும், வெளியேற வேண்டிய இடத்தில் வெளியேற வேண்டும். அதற்காக எத்தகைய இழப்புகள் வந்தாலும், அதை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்” என கூறினார்.
மருத்துவ காப்பீட்டு தொகை சரியான நேரத்தில் கிடைக்காததற்கான ஒரு சில காரணங்கள்: *பெயர், வயது, வருவாய் தொடர்பாக தகவல்கள் தவறாக இருப்பது *ஏற்கனவே இருக்கும் நோய் அல்லது பரம்பரை நோய் குறித்து முன்பே கூறாமல் இருப்பது *புகைத்தல், மதுபழக்கம் இருப்பது குறித்து கூறாமல் இருப்பது *பீரிமியம் தொகை செலுத்தாமல் இன்ஷூரன்ஸ் காலாவதியானால் காப்பீட்டை பெற முடியாது.
கடந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் ஒருநாள் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்தது. இத்தொடர் மூலம் இந்தியாவில் 1.39 பில்லியன் டாலர் (ரூ.11,637 கோடி) வர்த்தகம் நடைபெற்றதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தெரிவித்துள்ளது. கிரிக்கெட் பார்க்க வந்த வெளிநாட்டவர்களால் விடுதி, உணவு, போக்குவரத்து ஆகியவற்றில் அதிக வர்த்தகம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளது.
தவெக-வின் மாநாடு குறித்த முக்கிய அறிவிப்பை நாளை விஜய் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்கிரவாண்டியில் செப்.23ல் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதற்கான அனுமதி பெறுவதிலேயே தாமதம் ஆனதாக தெரிகிறது. மாநாடு ஏற்பாடுகள் செய்ய இன்னும் குறுகிய காலமே இருப்பதால், தேதி மாறலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை காலை 11 மணிக்கு விஜய் வெளியிட உள்ளதாகத் தெரிகிறது.
மண்டபம் – ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி அக்.2 ஆம் தேதி திறந்து வைக்கிறார். இதற்காக சென்னை வரும் பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பாம்பன் ரயில்வே பாலம் திறந்து வைக்கப்பட உள்ளதால், 22 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் சேவை மீண்டும் தொடங்க உள்ளது.
அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி வாஷிங்டனில் நடைபெற்ற கூட்டத்தில், இந்தியாவில் ஒரு சீக்கியர் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவாரா அல்லது குருத்துவாராவுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவாரா என்பதற்கே சண்டை நடக்கிறது எனப் பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் சீக்கிய அமைப்பினர் டெல்லியில் உள்ள ராகுலின் வீட்டை முற்றுகையிட்டு, அவர்மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெயரிலேயே பொன்னை வைத்திருக்கும் பொன்னாங்காணி, நலத்தை வாரி வழங்கும் தாவர தங்கம் என்று அகத்தியர் குணவாகடம் கூறுகிறது. லூபியோல், காம்பஸ்டீரால், ஸ்டிக்மாஸ்டீரால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இந்தக் கீரையை வேக வைத்து வெண்ணெய்யில் குழைத்து, வெறும் வயிற்றில் காலை வேளையில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், முகப்பூச்சுகளின் ஆதரவின்றிப் பளபளப்பான தேகம் மின்னும்.
இந்த ஆண்டில் (2024) இதுவரை அனைத்து வடிவ போட்டிகளிலும் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் முதல் 10 இடங்களில் ஜெய்ஸ்வால் (1033), ரோஹித் (990), கில் (821) ஆகியோர் 3, 4 மற்றும் 9ஆவது இடத்தை பிடித்துள்ளார். இலங்கை வீரர்கள் நிசங்கா (1135), BKG மெண்டிஸ் (1111) முதல் 2 இடங்களில் உள்ளனர். ரூட் 5, ரிஸ்வான் 6, PHKD மெண்டிஸ் 7, ஜர்டான் 8, நிசாகத் கான் 10 ஆகிய இடங்களில் உள்ளனர்.
நடந்து முடிந்த குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக 480 காலி இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. ஏற்கெனவே, 6,224 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடைபெற்றது. புதிய அறிவிப்பால் காலியிடங்களின் எண்ணிக்கை 6,224ல் இருந்து 6,704ஆக உயர்கிறது. இத்தேர்வுக்கான முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
X-Blade பைக்கை தங்களுடைய அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தில் இருந்து ஹோண்டா நிறுவனம் நீக்கியுள்ளது. அந்நிறுவனம் இந்திய சந்தையில் X-Blade பைக் விற்பனையை நிறுத்த இருப்பதாலேயே நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. 2018இல் அறிமுகப்படுத்தப்பட்ட X-Blade பைக்கானது மற்ற 160CC மோட்டார் பைக்குகளைப் போல இளைஞர்களை பெரியளவில் ஈர்க்கவில்லை என்றே கூறலாம். இதற்கு அதன் விற்பனை எண்ணிக்கையே சாட்சி.
Sorry, no posts matched your criteria.