India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேங்காய்த் துருவலுடன் காய்ந்த ஏலக்காய், முந்திரி, வெந்தயம் சேர்த்து நீர் விடாமல் நைஸாக அரைக்கவும். அதனுடன் பனை வெல்லம், பச்சை அரிசி, உளுந்து சேர்த்து மீண்டும் அரைத்து எடுக்கவும். தோசை மாவை இதில் சேர்த்து நன்கு கலக்கவும். சூடான குழிப்பணியாரக் கல்லில் நெய் காய்ந்ததும் இந்த மாவை ஊற்றவும். பொன்னிறமாக மாறும்வரை இருபக்கமும் அவற்றை திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுத்தால், சுவையான செட்டிநாடு பணியாரம் ரெடி.
பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 10ம் தேதிக்கு நடைபெற்ற ரயில் டிக்கெட் முன்பதிவு 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது. 120 நாள்களுக்கு முன்பே முன்பதிவு நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஜனவரி 10ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. டிக்கெட் முன்பதிவு தகவலை அறிந்து உடனடியாக ஆன்லைனிலும், டிக்கெட் மையங்களிலும் திரண்டு வந்து ஏராளமானோர் விரைந்து முன்பதிவு செய்தனர்.
NIAவில் DSP பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. டெபுடேஷன் அடிப்படையிலான 17 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கல்வித் தகுதி உள்ளிட்டவற்றை NIA இணையதளத்தில் அறியலாம். மாத சம்பளமாக ₹56,100- ₹1,77, 500 வரை வழங்கப்படும். “SP (admin ), NIA Headquarters, Lodhi road, New Delhi -110003” என்ற முகவரிக்கு தபாலில் விண்ணப்பிக்கலாம் (அ) spadmin.nia.gov. in இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.
மகாவிஷ்ணுவை விசாரணைக்காக திருப்பூருக்கு போலீஸார் அழைத்து சென்றுள்ளனர். சென்னையில் உள்ள 2 பள்ளிகளில் சர்ச்சைக்குரிய வகையில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றியதாக வழக்குப்பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவரை 3 நாள் காவலில் எடுத்துள்ள போலீசார், திருப்பூரில் உள்ள மகாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்த அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
இளைஞர்களை தாக்கிய வழக்கில் பாடகர் மனோவின் 2 மகன்களை கைது செய்ய 2வது நாளாக சென்னை போலீஸ் தேடி வருகிறது. வளசரவாக்கத்தில் உள்ள வீட்டை வேடிக்கை பார்த்த 2 பேரை முட்டிப்போட வைத்து மதுபோதையில் தாக்கியதாக மனோ மகன்கள் சாகீர், ரபீக் உள்ளிட்ட 5 பேர் மீது 3 பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. இதில் 2 பேரை கைது செய்த போலீஸ், மனோவின் 2 மகன்கள் உள்ளிட்ட 3 பேரை தேடுகிறது.
PresVU மருந்து தயாரிக்க அளித்த லைசென்ஸை மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் (DCGI) ரத்து செய்துள்ளது. வயோதிகத்தால் ஏற்படும் பிரஸ்பயோபியா மூலம் கிட்டப் பார்வை பாதிக்கப்பட்டு இருந்தால், PresVU மருந்தை கண்ணில் விட்டால் போதும் என ENTOD நிறுவனம் விளம்பரம் செய்தது. இதை நம்பி பயன்படுத்தும் நோயாளிகள் பாதிக்கப்படலாம் எனக் கூறி, மருந்து தயாரிக்க, விற்க அளிக்கப்பட்ட லைசென்ஸை DCGI ரத்து செய்துள்ளது.
2013 பாட்னா குண்டுவெடிப்பு வழக்கில் 6 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. மோடி பங்கேற்ற கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில், 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்க்கும் மேல்முறையீட்டை விசாரித்த பாட்னா ஐகோர்ட், 6 பேரும் இளைஞர்கள், வெளி தொடர்பில்லாதவர்கள் எனக் கூறி, 4 பேருக்கு 30 ஆண்டு சிறை, 2 பேருக்கு ஆயுள் சிறையாக குறைத்தது.
வீட்டுக்கு வீடு ஃப்ரிட்ஜ் வந்துவிட்டது. அதில் காய்கறி, பழங்களை வைத்து பாதுகாக்கும் மக்கள், அதை சரியாக பராமரிக்கிறார்களா? என்றால் கேள்விக்குறிதான். அதனை சுத்தம் செய்வதோடு, வயரிங்கை சோதித்து, ஸ்டெப்லைசர் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், மதுரையில் இன்று ஃப்ரிட்ஜ் வெடித்து 2 பெண்கள் பலியாகியுள்ளனர். எனவே அவற்றை பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பராமரிப்பதும் அவசியமாகும்.
கடந்தாண்டு நடந்த 13ஆவது 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் மூலம் இந்தியப் பொருளாதாரம் பெரும் பலன் அடைந்துள்ளதாக ICC தெரிவித்துள்ளது. மிகப்பெரிய விளையாட்டு திருவிழா என வர்ணிக்கப்பட்ட இப்போட்டி, இந்தியாவுக்கு ₹11,637 கோடி வருவாய் பங்களிப்பை அளித்துள்ளது. இந்த போட்டியையொட்டி, இந்தியாவில் 48,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும், முதன்மையான சுற்றுலாத் தலமாக நாடு மாறியிருப்பதாகவும் ICC கூறியுள்ளது.
திமுக கூட்டணியை விசிக பலவீனம் ஆக்கவில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளரான ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார். திமுக தலைமையில் கூட்டணி இருந்தாலும், தமிழக அரசு திமுக அரசுதான் என்றும் அவர் கூறினார். அரசு நடத்தும்போது சில சமரசம் செய்தாக வேண்டும். ஆனால் அந்த சமரசம் கருத்தியல் சமரசம் ஆகிவிட கூடாது என்றே விசிக எச்சரிப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து உங்கள் கமெண்டை பதிவிடுங்க.
Sorry, no posts matched your criteria.