India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக MI அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் ஷர்மா அந்த அணியில் இருந்து வெளியேறுவார் என தகவல் பரவி வருகிறது. ரோஹித் MI-ஐ விட்டு மாறுவது உறுதி என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ஏலத்திற்குள் கொண்டு வராமலேயே LSG அணியின் நிர்வாகம் அவரை வாங்க வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரோஹித் வெளியேறுவார் என்று நினைக்கிறீர்களா?
விஜய்யின் தவெக கட்சி மாநாடு அக்டோபர் மாதம் 15ம் தேதிக்கு மாற்ற திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அனுமதி கேட்டு காவல்துறையிடம் விரைவில் கடிதம் அளிக்கப்பட இருப்பதாகவும் அந்தத் தகவல் கூறுகிறது. முன்னதாக, விஜய் கட்சி மாநாட்டை இந்த மாதம் 23ம் தேதி நடத்த அனுமதிகாோி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல நிபந்தனைகளுடன் காவல்துறை அண்மையில் அனுமதி வழங்கியது.
ஆதார் தகவல்களை இலவசமாக புதுப்பிக்க இன்னும் 2 நாள்களே அவகாசம் உள்ளது. அத்தகவல்களை 10 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிப்பது கட்டாயமாகும். அந்தத் தகவலை இலவசமாக செப்.14 வரை புதுப்பிக்க சலுகை வழங்கப்பட்டு இருந்தது. இச்சலுகை நிறைவடைய இன்னும் 2 நாள்களே உள்ளன. அதனை புதுப்பிக்காதோர் உடனடியாக இச்சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். அதன்பிறகு ₹50 கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் OS 12, 12 L, 13, 14 பயன்படுத்துவோருக்கு மத்திய தொழில்நுட்ப பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி தாெழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய கணினி அவசரகால பதில் குழு இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், அந்தப் போன்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகலாம், தகவல்கள் திருடப்படலாம். ஆதலால், உடனே பாதுகாப்பு அப்டேட்ஸ் செய்யும்படி வலியுறுத்தியுள்ளது.
மகாவிஷ்ணு விவகாரம் எதிரொலியாக, பள்ளிகளில் வெளிநபர்கள் நுழைய அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித் துறையிடம் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பள்ளி வளாகங்களில் உள்ள அங்காடிகளை அகற்றவும் உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல் வெளியிடப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
1) மரபியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? 2) எந்த பொருள் நீரில் கரையாது? 3) கிரைசோகிராப் கருவியை யார் கண்டுபிடித்தது? 4) சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம் ? 5) உலகின் மிகப்பெரிய பறவை எது? 6) வைட்டமின் K குறைப்பாடு என்ன பாதிப்பை ஏற்படுகிறது? 7) மரத்தின் கிளைகளிலிருந்து வேர்களைத் தோற்றுவிக்கும் தாவரம் ? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
15 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர் சி – வடிவேலு வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. பென்ஸ் மீடியா தயாரிப்பில் சுந்தர் சி இயக்கி நடிக்கும் திரைப்படத்திற்கு ‘கேங்கர்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. வடிவேலுவின் 63ஆவது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு, ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளது. கைப்புள்ள, வீரபாகு மாதிரி சிங்காரம் என்ற கேரக்டரில் இப்படத்தில் வடிவேலு நடித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மனித உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் வகையில் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில், வாகனத்தை அவசரமாக அல்லது அஜாக்கிரதையாக பொதுவழியில் ஓட்டுவதும் சவாரி செய்வதும் BNS சட்டப் பிரிவு 281இன் படி குற்றமாகும். இத்தகைய குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு 6 மாதம் வரை நீட்டிக்கப்படக் கூடிய சிறைத்தண்டனை அல்லது ₹1,000 வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
விண்வெளி ஆராய்ச்சித் துறையில் வல்லரசு நாடுகளுக்கு போட்டியாக உருவெடுத்துள்ள ISROவின் வளர்ச்சியில் சிவனின் (1982-2022) பங்களிப்பு முக்கியமானது. சந்திரயான் உட்பட பல வெற்றிகளில் பெரும் பங்காற்றிய அவர், ராக்கெட் வடிவமைப்புப் தொடர்பாக ‘சித்தாரா’ எனும் மென்பொருளை உருவாக்கியுள்ளார். மெரிட் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற அவர் ‘மார்க் 3’ என்கிற புதுமையான விண்கலனை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.
தவெக மாநாடு தேதியை விஜய் இன்று அறிவிக்கவுள்ளார். விக்கிரவாண்டியில் தவெக மாநாடு இம்மாதம் 22ம் தேதி நடக்கலாம் எனக் கூறிய நிலையில், 23ஆம் தேதி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும், குறுகிய காலமாக இருப்பதால் தேதி மாற்றப்படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மாநாடு தேதி குறித்த தகவலை விஜய் இன்று அறிவிப்பார் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.