News September 12, 2024

வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும்: RMC

image

தமிழகத்தில் 2 நாள்களுக்கு இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை மண்டல வானிலை மையம் (RMC) தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று கூறியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

News September 12, 2024

சீலிங் பேனில் படமெடுத்து ஆடிய நாகபாம்பு

image

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வீட்டில் சீலிங் பேனில் 6 அடி நீள கோதுமை நாகப் பாம்பு படமெடுத்து ஆடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரியகுளம் அருகே அழகர்சாமிபுரத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் சின்னூரைச் சேர்ந்த சிலர் தோட்ட வேலை செய்து வருகின்றனர். அந்த வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பை தேடியபோது சீலிங் பேனில் அது படமெடுத்து ஆடியது. பாம்பு பிடி வீரர் கண்ணன் அதனைப் பிடித்து வனப்பகுதியில் விட்டார்.

News September 12, 2024

பாட்டில் சுத்தம் அவசியம் ஏன்?

image

ஒரு முறைக்கும் மேல் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களில் அதிக பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் உருவாகிறது. இந்த பாக்டீரியாவின் அளவு கழிப்பறை இருக்கையின் மேற்பரப்பில் காணப்படும் பாக்டீரியாக்களின் அளவைவிட 40,000 மடங்கு அதிகம். ஒவ்வொரு மிலி நீரிலும் 75,000 பாக்டீரியாக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவை 24 மணிநேரத்தில் 2 மில்லியன் வரை பெருகும். எனவே தண்ணீர் பாட்டில் சுத்தத்தில் அதிக கவனம் வேண்டும்.

News September 12, 2024

டெங்குக்கு 12,600 பேர் பாதிப்பு

image

தமிழகத்தில் டெங்கு பாதித்தோர் எண்ணிக்கை 12,600 ஆக அதிகரித்துள்ளது. ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் இந்த நோயால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மாநிலம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு அறிகுறி இருப்போர் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

News September 12, 2024

Happy Birthday: கவலையைப் போக்கிய கைப்புள்ளை!

image

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தனிப்பெரும் கலைஞன் வடிவேலுவுக்கு இன்று பிறந்தநாள். கைப்புள்ள, வண்டுமுருகன், வீரபாகு, நேசமணி, என தனது திரைப்பட கதாபாத்திரங்கள் வழியே தமிழ்ச் சமூகத்தின் அங்கமாகவே மாறிவிட்டவர். சிரிக்க வைக்கும் கலைஞனால் எளிதாக அழ வைக்கவும் முடியும் என நிரூபித்த சார்லி சாப்ளின் வழியில் கலையுலகில் பயணித்த அவர் நடித்து உங்களுக்குப் பிடித்த படத்தைக் கமெண்ட்டில் சொல்லுங்க!

News September 12, 2024

ஆதாரை புதுப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு

image

ஆதார் தகவலை இலவசமாக புதுப்பிக்க டிசம்பர் 14ம் தேதி வரை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அவகாசம் அளித்துள்ளது. இந்த அவகாசம் இந்த மாதம் 14ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 14ம் தேதி வரை ஆதார் தகவல்களை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். அதன்பிறகு புதுப்பிக்க ₹50 கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும்.

News September 12, 2024

கெஜ்ரிவால் ஜாமின் மனு: நாளை தீர்ப்பு

image

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜாமின் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு வெளியிடவுள்ளது. டெல்லி மதுபான கொள்கை மாற்ற முறைகேடு வழக்கில் சிபிஐயின் கைது நடவடிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்ததை எதிர்த்தும், தனக்கு ஜாமின் கோரியும் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். அதன்மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் முடிந்ததையடுத்து நாளை தீர்ப்பு வெளியிடப்படவுள்ளது.

News September 12, 2024

விதி வலியது… ஸ்ருதியின் காதல் சோக முடிவு ❤️❤️

image

எதிர்பாராமல் நடைபெறும் சம்பவங்கள் சிலரின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதுபோல கடந்த மாதம் வயநாடு நிலச்சரிவில் தந்தை, தாய், சகோதரி, 6 குடும்ப உறுப்பினர்களை இழந்து நிர்கதியாக ஸ்ருதி தவித்தார். அவருக்கு ஆம்னி வேன் டிரைவரான காதலர் ஜான்சனே உதவி செய்தார். ஆனால், ஆம்னி வேன் மீது பஸ் மோதிய விபத்தில் தற்போது அவரும் பலியாகியுள்ளார். இதனால் ஸ்ருதியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

News September 12, 2024

மூலிகை: கப நோய்களில் இருந்து காக்கும் தூதுவளை

image

கப நோய்களை நீக்குவது முதல், வீரிய விருத்தியை உண்டாக்குவது வரை தூதுவளை மூலிகைக்கு சகல வல்லமை உள்ளதென அகத்தியர் குணவாகடம் கூறுகிறது. சைடோஸ்டீரால், சொலசோடின், சாபோனின்ஸ், ஃப்ளேவனாய்ட்ஸ் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இதன் இலை உலர்த்திய பொடியுடன் சிறிது மிளகுத் தூள் & தேன் சேர்த்துக் கொடுக்க சளி, இருமல் மட்டுமன்றி வயிற்று உப்புசமும் குறையும் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News September 12, 2024

செயற்கைகோள் மூலம் வசூல்!

image

மத்தியஅரசு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறையில் GNSS முறையை அமல்படுத்தவுள்ளது. பாஸ்டேக் முறை தற்போது அமலில் இருப்பினும் விடுமுறை காலங்களில் வாகனங்கள் சுங்கசாவடிகளில் தேங்கி நிற்கின்றன. இதை தடுக்க செயற்கைகோள் மூலம் குளோபல் நேவிகேஷன் சாட்லைட் சிஸ்டம் என்ற பயண தூர அடிப்படை கட்டணம் வசூலிக்கப்படும். இது நாடு முழுவதும் ஒரு சில NHகளிலும் விரைவுச்சாலைகளிலும் செப் 10 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது

error: Content is protected !!