India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை ICC வெளியிட்டுள்ளது. அதில், ரோஹித், ஜெய்ஸ்வால், கோலி ஆகியோர் ஒரு இடம் முன்னேறி, முறையே 5, 6, 7வது இடம் பிடித்துள்ளனர். இவர்கள் இந்த ஆண்டு ஜனவரிக்குப் பின் எந்த டெஸ்ட் தொடரிலும் விளையாடவில்லை. இருப்பினும் பிற வீரர்களின் சரிவால் தரவரிசையில் அம்மூவரும் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஜோ ரூட், வில்லியம்சன், மிட்செல், ஸ்மித் ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர்.
சென்னையில் 1952 ஆக.12இல் பிறந்த சீதாராம் யெச்சூரி, ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்ததால், 10ஆம் வகுப்பு வரை அங்கு படித்தார். தெலங்கானா தனி மாநில போராட்டத்தின் காரணமாக டெல்லி சென்ற அவர், அங்குள்ள பிரசிடன்ட் எஸ்டேட் பள்ளியில் சேர்ந்து, மேல்நிலை CBSE தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்றார். பின் JNUவில் M.A பொருளாதாரம் படித்தார். பி.எச்.டி படிப்பில் சேர்ந்த அவர் எமர்ஜென்சியின்போது கைது செய்யப்பட்டார்.
சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவிடம் கடந்த 5 மணி நேரமாக நடைபெற்றுவந்த விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளது. அவரிடமிருந்து நன்கொடை விவரம், Hard Disk உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் உள்ள அறக்கட்டளை கிளை குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், திருப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
1974இல் SFIயில் இணைந்த அவர், அடுத்த ஆண்டே CPI(M)யில் இணைந்தார். JNUவில் மாணவர் சங்கத் தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978இல் SFIயின் இணைச் செயலராக தேர்வானார். 1986இல் SFIயில் இருந்து விலகி CPI(M)யின் மத்திய குழு உறுப்பினர், பொலிட்பீரோ உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். அதன்பின் மேற்கு வங்கத்தில் இருந்து 2005இல் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஆக.19ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மோசமடைந்தது. தொடர்ந்து, வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் உயிர் பிரிந்தது.
கறவை மாடு வளர்ப்பிற்கு குடும்பத்தில் ஒருவருக்கு தமிழக அரசு கடனுதவி வழங்குகிறது. இதில் எருமை மாடு உள்ளிட்ட 2 கறவை மாடுகள் வாங்க ₹1.20 லட்சம், கறவை மாடு ஒன்றிற்கு ₹60,000 அளிக்கிறது. இதை திரும்பச் செலுத்த 3 ஆண்டு அவகாசம் அளிக்கப்படுகிறது. ஆண்டு வட்டியாக 7% விதிக்கப்படுகிறது. தகுதியாக ஆண்டு வருமானம் ₹3 லட்சம் வரையும், வயது வரம்பாக 18 முதல் 60 வயது வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ம.பியில் ராணுவத்தினர் தாக்கப்பட்டு, அவர்களுடன் சென்ற பெண் பலாத்காரம் செய்யப்பட்டது, மொத்த சமூகத்திற்கும் அவமானம் என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். BJP ஆளும் மாநிலங்களில் சட்டம் & ஒழுங்கு என்பதே கிடையாது எனவும், மகளிருக்கு எதிரான குற்றங்களில் BJP-யின் நிலைப்பாடு மிகவும் கவலை தருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த சம்பவத்திற்கு சமூகமும், அரசும் அவமானப்பட வேண்டும் என்றும் சாடியுள்ளார்.
பாராலிம்பிக்ஸ் வில்வித்தையில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் ஹர்விந்தர் சிங், பாரிசில் தான் பயன்படுத்திய வில், அம்பை பிரதமர் மோடிக்கு பரிசளித்துள்ளார். இன்று பிரதமர் மோடியை சந்தித்தபின் பேசிய அவர், “பாராலிம்பிக் வெற்றியாளர்கள், போட்டியாளர்கள் மற்றும் விளையாட்டு ஊழியர்கள் உட்பட அனைவரையும் பிரதமர் நேரில் சந்தித்து பேசினார். அவர் வாழ்த்தியது எங்களை மிகவும் ஊக்கப்படுத்தியது” எனக் கூறியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் மேஜர் அந்தஸ்தில் உள்ள 2 ராணுவ அதிகாரிகளை அடித்து போட்டு, அவர்களுடன் சென்ற ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு வந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தூரில் சுற்றுலா சென்ற போது இந்த சம்பவம் நடந்திருப்பது, தெரியவந்துள்ளது. மேலும், அவர்களிடம் இருந்த பணம், நகையும் திருடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார், மீதமுள்ள நால்வரை பிடிக்க 10 தனிப்படை அமைத்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் EPSஇன் மாநிலம் தழுவிய சுற்றுப் பயணத்துக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன. மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களை மையப்படுத்தி இந்த பயணம் இருக்குமென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர் தோல்விகளால் சோர்ந்து போயுள்ள நிர்வாகிகளுக்கு இந்த சூறாவளி சுற்றுப்பயணம் உற்சாகமளிக்கிறதா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.